உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையரிடம் அத்துமீறல்!: நாட்டின் பெயரை கெடுத்த இளைஞர் கைது

ம.பி.,யில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையரிடம் அத்துமீறல்!: நாட்டின் பெயரை கெடுத்த இளைஞர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்துார்: மத்திய பிரதேசத்தில், பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனையர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த நபரை போலீசார் கைது செய்தனர். நடப்பாண்டுக்கான மகளிர் உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, 'லீக்' சுற்றின் 26-வது போட்டியில் தென்னாப்ரிக்க அணியுடன் மத்திய பிரதேசத்தின் இந்துாரில் நேற்று மோதியது. இதில் பங்கேற்க வந்த ஆஸ்திரேலிய அணி வீராங்கனையர், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே உள்ள, 'காபி ஷாப்'பிற்கு அந்த வீராங்கனையர் சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0hywtax5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனையரை பின்தொடர்ந்து சென்றதுடன் ஒரு வீராங்கனையிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீராங்கனையர், கூச்சலிட்டதுடன், அணியின் பாதுகாப்பு அதிகாரியின் உதவியையும் நாடினர். அதற்குள் அந்த நபர் தப்பியோடியது தெரியவந்தது. இச்சம்பவத்தை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது. ம.பி., கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் உதவியுடன் ஆஸி., அணி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதன்படி, போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு வீராங்கனையரிடமும் உதவி போலீஸ் கமிஷனர் ஹிமானி மிஸ்ரா வாக்குமூலம் பெற்றார். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, பைக்கில் வந்த நபர், ஆசாத் நகரைச் சேர்ந்த அகில் கான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, ஆஸி., வீராங்கனையருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், ம.பி., அரசு ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, ஆஸி., வீராங்கனையருக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளத்தில் உத்தவ் சிவசேனா பிரிவு எம்.பி., பிரியங்கா சதுர்வேதி குறிப்பிடுகையில், 'இது, நம் நாட்டிற்கே அவமானத்தை தரக்கூடிய செயல். பொருளாதார வளர்ச்சியைப் பற்றி மத்திய அரசு பெருமையாக பேசி வரும் நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. இது ஒரு வெட்கக்கேடான செயல்' என குறிப்பிட்டுள்ளார். பி.சி.சி.ஐ., வருத்தம் இச்சம்பவத்திற்கு, பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் செயலர் தேவஜித் சாஹிகியா கூறுகையில், “ஆஸ்திரேலிய வீராங்கனையருக்கு நிகழ்ந்த சம்பவம், துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற நிகழ்வுகள், நம் நாட்டின் மீது அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பிடித்த ம.பி., போலீசாரை வெகுவாக பாராட்டுகிறோம். கைதான நபருக்கு, சட்டத்தின் வாயிலாக உரிய தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்,” என்றார். இதேபோல் ம.பி., கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கை: ஆஸி., வீராங்கனையருக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம், அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. எந்தவொரு பெண்ணுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறக்கூடாது. பாதிக்கப்பட்ட வீராங்கனையருக்கு நாங்கள் துணைநிற்போம். இதற்கிடையே, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றுள்ள அவர்களின் மன தைரியத்தையும், உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஒரு தனிநபரின் செயலால், நாட்டிற்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது வேதனையை அளிக்கிறது. இச்சம்பவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Padmasridharan
அக் 28, 2025 18:50

பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்கும் அனைவரும் முதலில் யோசிக்க வேண்டியது ஆண்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா. அவர்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் போதை மருந்துகள் இந்நாட்டில் விற்கப்படுகின்றன. மற்றவர்களால் ஆண்களுக்கு தரப்படும் பாலியல் தொல்லைகள் பலவும் வெளியில் வராமல் இருக்கின்றது.


சந்திரசேகர்
அக் 26, 2025 15:38

எவனாவது ஒருத்தன் ரோட்ல போற பெண்களை ஏதாவது பண்ணி விட்டால் உடனே அரசாங்கத்தை குறை சொல்ல எதிர்கட்சிகள் வந்து விடும். இங்கே ஒவ்வொரு பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றால் நாட்டில் உள்ள ஆண்கள் பாதிபேர் போலீஸ் வேலையில் இருக்க வேண்டும். தனி மனித ஒழுக்கம் இல்லை என்றால் எவ்வளவு பாதுகாப்பு போட்டாலும் இது மாதிரி நடக்கக் தான் செய்யும்.


Veeraa
அக் 26, 2025 13:29

MP Police arrested AKEEL KHAN, the culprit and broke his hand and leg. This same Priyanka Chaturvedi (Uthav sena) said congress leaders misbehaved with her and HENCE she left congress party for safety.


c.mohanraj raj
அக் 26, 2025 11:59

செம்மையாக கவனித்து விட்டு இருக்கிறார்கள்


அப்பாவி
அக் 26, 2025 09:27

பெண்களுக்கு.பாதுகாப்பில்லையாம். நடுத்தெருவில் வெச்சி நாலு சாத்து சாத்துனா அடுத்தவனுக்கு பயம் வரும்.


jss
அக் 26, 2025 08:42

மர்ம நபர் என்று போடாமல் அசல் பெயரை போட்டதற்க்கு கண்டனங்கள்.


SUBBU,MADURAI
அக் 26, 2025 08:26

The above isnt an isolated incident. In 2017, a Swiss tourist visiting the Taj Mahal reported being physically assaulted by Mohammad Irfan. In 2023, a British woman in Goa filed a complaint of stalking and harassment against Abdul Karim. There are many more.


Senthoora
அக் 26, 2025 07:48

எந்த பெண்ணுக்கும் தாய்மை என்ற உணர்வு பண்பு இருக்கும்,


Kasimani Baskaran
அக் 26, 2025 06:45

வின்சியின் தோழர் என்று சொல்லப்படுகிறது.


Senthoora
அக் 26, 2025 07:45

உங்களுக்கு எதிர்க்கட்சியை விமர்சிக்காவிட்டால் தூக்கம் வராது


SUBBU,MADURAI
அக் 26, 2025 09:18

ஐயோ பாவம்...


Natarajan Ramanathan
அக் 26, 2025 06:36

Police already broke his left hand and right leg.


SANKAR
அக் 26, 2025 08:38

no such report in media.YOU ARE LYING


முக்கிய வீடியோ