உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 37 லட்சத்து 17 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 54 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் பார்லிமென்டில் தெரிவித்துள்ளது. மேலும், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே, இந்தப் பிரச்னைக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ueytw7o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நாய்க்கடி குறித்து செய்திகளில் வெளியான தகவலை குறிப்பிட்டு பேசிய நீதிபதிகள் ஜே.பி., பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாய்க்கடியால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு எச்சரிக்கை மணி என்று தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக கூறிய நீதிபதிகள், நாய்க்கடி பிரச்னையை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

somasundaram ramaswamy
ஜூலை 29, 2025 13:35

நான் தெரு நாய்கடியால் இருமுறை பாதிக்கப்பட்டேன். இதற்கு பயந்து வாக்கிங் செல்வதையே விட்டுவிட்டேன். நாய்கடிக்கு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாக காட்டப்படுகிறது. தெருநாய் மீது பாசம் கொண்டவர்கள் தங்கள் வீட்டில் வைத்து பராமரிக்க தயாரா. வளர்ந்த நாடுகளில் இந்த பிரச்சினையே கிடையாது. அங்கு தெருக்களில் நாய் மற்றும் எந்த விலங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ஏன்.,...


Jack
ஜூலை 29, 2025 15:57

வளர்ந்த நாடுகளில் நாய் அழைத்து செல்பவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் . இருக்க வேண்டும் . தெருவில் சந்தனம் கழித்தால் தானே சுத்தம் செய்ய வேண்டும்


ரங்ஸ்
ஜூலை 28, 2025 21:17

இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும்போதும், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போதும் தெரு நாய்க்கடி அபாயம் அதிகம். தெரு நாய்களை பிடித்து எந்த நாடு அதன் இறைச்சி உண்கிறார்களோ அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். நாய் தொல்லை தீரும்.காசும் கிடைக்கும்.


Ram
ஜூலை 28, 2025 20:40

விலங்கு நல ஆர்வலர்களை நாட்டைவிட்டு துரத்துங்கள் போதும்


Sudhakar
ஜூலை 28, 2025 20:28

இந்தப் பிரச்சனைக்கு மூல காரணமே விலங்கு நல ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றமும் தான்.


V RAMASWAMY
ஜூலை 28, 2025 19:01

Really a welcome step. Hope, wish and pray the SC makes a diktat in such a way that pet lovers do not exploit Animal Welfare Board/Blue Cross, etc. rules and regulations and cause nuisance, disturbance and menace to residents in any part of the country. SC may also kindly stop keeping pets in Apartments and issue instructions to Human Welfare Board to interfere in incidents causing injury or even death by wild animals, be it stray or pets.


நீதிபாலன்
ஜூலை 28, 2025 16:14

ஜட்ஜுங்க யாரையாவது நாய் தொறத்தியிருக்கும். You see it is a dangerous situation concerning national security ந்னு ஆரம்பிச்சு பேசி தாமாகவே விசாரிக்க முன்வந்துட்டார்கள்.


visu
ஜூலை 28, 2025 15:55

தெருநாய்கள் தொல்லை ஒருபக்கம் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் அதை தெருவில் அடுத்த வீடு முன் கக்கா போக வைக்கிறார்கள்


mohan
ஜூலை 28, 2025 15:27

தெரு நாய்கள் தொல்லை அதிகம். தெரு நாய்கள் அணைத்து ஊர்களிலும் கட்டுப்படுத்த வேண்டும்..


shakti
ஜூலை 28, 2025 15:13

ரேபிஸ் தடுப்பூசி நிறுவனங்களிடம் காசு வாங்கிக்கொண்டு அரசியல்வாதிகள், ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் செய்யும் கோல்மால் தான் தெருநாய் ண்ணிக்கை உயர்வு


SENTHIL NATHAN
ஜூலை 28, 2025 14:06

நாட்டு நாய்கள் மட்டுமே அனைவரும் வளர்க்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அனைத்து நாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீர்ந்து விடும்


V RAMASWAMY
ஜூலை 28, 2025 18:58

அது நாட்டு நாயென்றால் என்ன, அல்லது வேறு நாட்டு ஜாதி நாயென்றால் என்ன, எல்லாமே வெறி கொள்ளக்கூடிய கடிக்கக்கூடிய ஆபத்து விளைவிக்கக்கூடிய மிருகங்கள் தான்.


முக்கிய வீடியோ