உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாமிரம் வாங்க தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சு

தாமிரம் வாங்க தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சு

புதுடில்லி: நம் நாட்டின் தொழில்துறை மற்றும் மின்சார வாகன துறைக்கு தேவையான முக்கிய கனிமங்களை தென் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் சிலியிடம் இருந்து பெற, மத்திய அரசு விரிவான வர்த்தக பேச்சை துவக்கி உள்ளது. தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில், அந்நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் ஒன்பதாவது சுற்று பேச்சு, நவ., 3 முதல் 5 வரை நடந்தது. இதில், பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒத்துழைப்பு வர்த்தகம், சுங்கம், கனிம ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் முடிவாக உள்ள ன. இது தொடர்பான அடுத்த சுற்று பேச்சு, அடுத்த ஆண்டு ஜனவரியில் டில்லியில் நட க்க உள்ளது. இதற்கு முன் அக்., 27- - 30ல், சிலி தலைநகர் சாண்டியாகோவில் இந்தியா - -சிலி இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று பேச்சு நடந்தது. இதில் பொருட்கள், சேவைகள், முதலீடு, அறிவுசார் சொத்து, கனிமங்கள் உள்ளிட்ட துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. லித்தியம், தாமிரம், மாலிப்டினம் போன்ற கனிமங்களை இந்தியாவுக்கு பெறுவது இந்தப் வர்த்தக பேச்சின் முக்கிய நோக்கமாக இருந்தது. பெருவில் இருந்து தங்கம், சிலியில் இருந்து லித்தியம், தாமிரம் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் நிலையான விலை, முன்னுரிமைகள் தேவை என இந்த பேச்சில் வலியுறுத்தப்பட்டது. இதற்காகவே வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய கனிமங்கள் என்ற தனி அம்சம் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தனிநபர் தாமிர நுகர்வு வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவாக உள்ளது. தற்போது தொழில்துறை வளர்ச்சி மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்தி வேகமெடுப்பதால் தாமிரத்தின் தேவை பல மடங்கு உயரும். நிச்சயமற்ற தன்மை இந்நிலையில், சீனா தாமிர சந்தையை கைப்பற்ற அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி குவிக்கிறது. இதைத் தடுக்க பெரு, சிலி நாடுகளுடன் நமக்கு நெருக்கம் தேவை. இரு நாடுகளும் ஏற்றுமதி சந்தைக்கு சீனாவை மட்டும் சார்ந்திருக்க விரும்பவில்லை. அதை பல்வகைப்படுத்த விரும்புகின்றன. இந்த சூழலில் இரு நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை முடித்தால், அது சர்வதேச அரசியல் நிச்சயமற்ற தன்மை, உலகளாவிய வினியோக தொடரில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு கவசமாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Thravisham
நவ 07, 2025 16:42

அறிவிலி


Rangarajan Cv
நவ 07, 2025 12:59

Why no political party from TN is talking about this vis-à-vis sterilite as one of the key agendas and what can be made to retrieve the current situation? Will the people of TN apply their mind?


SIVA
நவ 07, 2025 11:21

ஸ்டெர்லிட் ஆலை பாதுகாப்பற்றது அதன் முதலாளி சொத்து மதிப்பில் அது 2% மட்டுமே அது வேண்டும் என்றால் உலகில் எங்கு வேண்டும் என்றாலும் உற்பத்தி செய்யலாம் ஆனால் இந்தியாயில் லஞ்சம் கொடுத்து எளிதாக அனுமதி வாங்கலாம் தமிழ்நாட்டில் இன்னும் எளிது, வேறு நாட்டில் அனுமதி வாங்குவது கடினம் பல நாடுகளில் முயற்சி செய்து அனுமதி பெற முடியவில்லை ..அது பாதுகாப்பானது என்று சொல்லும் நல்லவர்கள் அந்த ஆலை குடியிருந்து நிரூபித்து காட்டுங்கள் வாரம் இரண்டு நாள் அந்த முதலாளி அந்த ஆலையில் குடியிருக்க சொல்லுங்கள் பார்க்கலாம் ....


SUBBU,MADURAI
நவ 07, 2025 13:13

ஏலே நீ தூத்துக்குடி காரன் என்றால் பரவாயில்லை சென்னையில் இருந்து கொண்டு இக் கருத்தை பதிவிடுகிறாயே...


ஆரூர் ரங்
நவ 07, 2025 14:43

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியும் சலுகைகளையும் இரு திராவிட ஆட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அளித்தன. விரிவாக்க விழாவில் கருணா கலந்து கொண்டார். இப்போ மதச்சார்பு வாக்கு வங்கிக்காக எதிர்க்கின்றனர். இழப்பு நாட்டுக்கே. குஜராத்தில் அடானி நிறுவனம் புதிய தாமிர ஆலையைத் துவக்கியுள்ளது. எவ்வித எதிர்ப்புமில்லை.


ஆரூர் ரங்
நவ 07, 2025 11:07

இதற்கான அன்னியச் செலாவணியை சம்பாதிக்க நிலவளத்தையும் சீரழித்து உணவுப் பொருட்களை உற்பத்தியாக்கி ஏற்றுமதி செய்தும் சுற்றுச்சூழல் மாசை அதிகமாக்கி சாய ஆடைகள், வாகனங்களை உற்பத்தி செய்துதானே ஈட்டுகிறோம்? ஆனால் ஸ்டெர்லைட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு இதைவிட மிகக் குறைவாகவே இருந்தது.


duruvasar
நவ 07, 2025 09:24

தூத்துகுடியிலிருந்த ஆலையை தூக்கி குடுத்து மங்களம் பாடிவிட்டார்கள். எல்லா புகழும் போராளி போர்வையில் திரிந்த ராஜாளிகளுக்கே சொந்தம்.


மொட்டை தாசன்...
நவ 07, 2025 09:19

முற்றிலும் உண்மையான பதிவு. நாட்டின் அந்நியச்செலாவணி கரைவது பற்றியெல்லாம் இன்றைய அரசியல்வாதிகள் யாருக்கும் கவலை இல்லை. இன்றைய மக்களின் மனநிலையை வைத்து மீண்டும் தொழிற்சாலையை திறப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஒட்டுப்பிச்சை எடுத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை .


vbs manian
நவ 07, 2025 09:06

ஸ்டெர்லிட் ஆலையை மூடி விட்டு இப்போது வெளி நாடுகளில் காப்பர் வாங்க கையேந்தும் நிலை. இந்த லட்சணத்தில் முதலீடு மாநாடு நடத்துகிறார்கள்.


Modisha
நவ 07, 2025 08:22

தூத்துக்குடி விஷ நரிகளுக்கு இந்தியா பற்றி கவலை இல்லை. அதுங்க பின்னாடி கண்மூடிக்கொண்டு போன போராளிகளுக்கு மூளை இல்லை. இப்போ அவஸ்தை படுதுங்க .


SUBBU,MADURAI
நவ 07, 2025 04:56

தமிழகத்தில் வேதாந்தா குழுமத்தால் தூத்துக்குடியில் பல ஏக்கர் சுற்றளவில் ஏகப்பட்ட பொருட் செலவில் கட்டப்பட்டு தாமிர உற்பத்தியில் உலகிலேயே சீனாவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக சிறப்பாக செயல்பட்டு வந்தது ஸ்டெர்லைட் ஆலை இந்த ஆலையில் தயாராகும் தாமிரம் (செம்பு) நம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ததுடன் பல வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கான அந்நியச் செலாவணியை நமக்கு ஈட்டித் தந்து கொண்டிருந்தது. அதை இந்த அமெரிக்க Deep state, மற்றும் நம் எதிரி நாடான சீனா உள்ளிட்ட கிரிமினல் சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அதை எப்படியாவது மூட வைத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமிழகம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் சீனாவின் கை கூலிகளாக நம் நாட்டில் இருக்கும் உண்டியல் கம்யூனிஸ்ட்களின் மூலமாக ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு ஏற்படுகிறது என்ற புரளியை கிளப்பி விட்டு அதை அங்குள்ள அப்பாவி மக்களை தூண்டி விட்டு ஒரு மிகப்பெரும் போராட்டமாக உருவெடுக்கச் செய்து கலவரம் பண்ணி துப்பாக்கி சூடு வரை கொண்டு போய் கடைசியில் அவர்கள் நினைத்த மாதிரியே அந்த ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வைத்து விட்டார்கள். அதன் விளைவு அந்த ஆலையில் வேலை செய்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை போனதுதான் மிச்சம். மேலும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 முதல் 40 டாரஸ் மற்றும் கண்டெய்னர் லாரிகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ராட்சஸ செம்பு உருளைகளை ஏற்றி சென்று வந்து கொண்டிருந்த போக்குவரத்து தொழிலும் முற்றிலும் முடங்கிப் போய் விட்டது. அப்படி வேலையிழந்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு மாற்று வேலைக்கான எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு இந்த மிஷினரி போராட்டக்காரர்கள் இப்போது பத்திரமாக பதுங்கி கொண்டார்கள். கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் என்பது போல இவ்வளவு நாள் கழித்து தாங்கள் ஏமாற்றப் பட்டு தங்கள் வாழ்வு வீணாப் போனதை உணர்ந்த ஸ்டெர்லைட் தொழிலாளர்கள் இப்போது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து தங்களுக்கு வேலை அளிக்குமாறு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தாமிர உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்கிய இந்தியா இன்று சீனாவிடம் ஏகப்பட்ட பணம் கொடுத்து தாமிரம் இறக்குமதி செய்து அந்நியச் செலாவணியை கையிருப்பில் இருந்து கரைத்துக் கொண்டு இருக்கிறது. கடைசியாக, தூத்துக்குடியில் உள்ள மிஷினரிகள் எந்த காற்று மாசுபாட்டை காரணம் சொல்லி அந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடினார்களோ அந்த காற்று மாசுபாடு அந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடி இத்தனை வருடம் கழித்தும் இன்னும் அப்படியே அதை விட கூடியிருப்பதுதான் வேதனையளிக்கும் விஷயம்.


N Sasikumar Yadhav
நவ 07, 2025 06:01

இப்பக்கூட ஸ்டெர்லைட் ஆலையை மூட உடந்தையாக கட்சிகளுக்குதானே ஓட்டு போடுறாங்க . எதையும் ஆராயாமல் மூட உத்தரவு போடுகிறது உச்ச கட்டப்பஞ்சாயத்து மன்றம்


Thravisham
நவ 07, 2025 07:50

மிகவும் உண்மையான பதிவு


Madras Madra
நவ 07, 2025 10:35

மத மாற்றம் எவ்வளவு தீங்கானது என்பதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லிட் மூடல் சிறந்த எடுத்து காட்டு ஒரு ஹிந்து மதம் மாறினால் நாட்டுக்கு ஒரு எதிரி உருவாகிறான் என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறியது தான் எவ்வளவு உண்மை உள் நாட்டு எதிரிகள் தொடர்ந்து அதிகரிப்பு புதிய கடுமையான சட்டங்கள் அவசியம்


Loganathan Kuttuva
நவ 07, 2025 16:12

Sulphuric acid and phospharic acid was produced as byproducts from that factory at very low rates.


Indhuindian
நவ 07, 2025 04:44

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று அயராது உஷைத்த திராவிட மாடல் நண்பர்களுக்கு கிடைத்ததா மாபெரும் வெற்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை