உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண இந்தியா தயார்; நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பிரதமர் மோடி

உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண இந்தியா தயார்; நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும், ரஷ்யா உடனான உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ரஷ்ய அதிபர் புடின் இன்று பிரதமர் மோடியிடம் 75வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது தலைமைத்துவத்தையும், உலகளாவிய அந்தஸ்தையும் பாராட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:எனது 75வது பிறந்தநாளில் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும்எனது நண்பர் அதிபர் புடினுக்கு நன்றி. இந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தனது பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.கடந்த மாதம் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது புடின் மற்றும் பிரதமர் மோடி சந்தித்துக் கொண்டனர். தற்போது பிறந்தநாளுக்கு புடின் வாழ்த்து தெரிவித்திருப்பது இந்தியா-ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையான உறவு வளர்ந்து வருவதை எடுத்துரைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

pmsamy
செப் 18, 2025 08:32

மணிப்பூர் காஷ்மீர் அங்க எல்லாம் பிரச்சனை இல்லையா


spr
செப் 18, 2025 06:27

ரஷ்யா யுக்ரைன் போருக்கு காரணம் என்ன? "யுக்ரேனின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பில் யுக்ரேன் இணையக் கூடாது எனவும், நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதை நிறுத்துவது தொடர்பாக முறையாக உறுதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது ரஷ்யா. இது சாத்தியமானால், தாற்காலிகமாகவாவது அமைதி உண்டாகும் ஆனால் நேட்டோ நாடுகள் அதனை ஏற்காது மோடியின் சாமர்த்தியம் என்ன என்று அறிய ஒரு சவால்


ஆரூர் ரங்
செப் 18, 2025 11:44

உக்ரேன் NATO வில் இணையும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. புடின் மண்ணாசை பெண்ணாசை பிடித்த சர்வாதிகார அரக்கர். அவருக்கு வேண்டியதெல்லாம் வேறு.


அப்பாவி
செப் 18, 2025 05:46

இங்ஜே ஆயில் வாங்கி அங்கே டீசல் வித்து அமைதியை நிலைநாட்டற சமாச்சாரம் இல்லை. கைப்பற்றிய உக்ரைனின் நிலப்பகுதியை ரஷியா பிடுங்கிக்.கொள்ள பார்க்கிறது. உக்ரைன் மறுக்கிறது. இது தற்போது தீராது.


sankaranarayanan
செப் 17, 2025 21:01

அப்போ அமைதிக்கான நோபல் பரிசு நமது பாரத பிரதமர் மோடிக்குத்தான் கொடுக்க வேண்டும் எல்லா நாடுகளும் விருப்பம் தெரிவிப்பார்கள் ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பு மட்டும் தான் தான் அதற்கு தகுதியானவன் என்று மார்தட்டி கிழே விழுவார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை