உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்கி இந்தியா கடுப்பேற்றுகிறது; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஆவேசம்

ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்கி இந்தியா கடுப்பேற்றுகிறது; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''இந்தியா நட்பு நாடு தான். ஆனால் வெளியுறவு கொள்கையில், அனைத்து விவகாரங்களிலும் அந்நாடு, 100 சதவீதம் ஒத்துப் போவதில்லை. ரஷ்யாவிடம் இருந்து அந்நாடு தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதே, நாங்கள் கடுப்பானதற்கு காரணம்,'' என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. இதை சமாளிக்க தள்ளுபடி விலையில், அந்நாடு கச்சா எண்ணெயை விற்பனை செய்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய நம் நாடு, குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு பிடிக்கவில்லை. இதை கண்டுகொள்ளாத நம் நாடு, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.  இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆக., 1 முதல், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், அபராதம் விதிப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது:

இந்தியாவுக்கு மிகப்பெரிய எரிசக்தி தேவை உள்ளது. அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதால், மலிவு விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா விற்பனை செய்கிறது. இதை இந்தியா வாங்குவதால், துரதிருஷ்டவசமாக, உக்ரைன் உடனான ரஷ்யாவின் போருக்கு உதவி செய்கிறது. இது, எங்களை எரிச்சல் அடையச் செய்கிறது. சந்தையில் பல எண்ணெய் விற்பனையாளர்கள் இருந்தும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதே அதிபர் டிரம்பின் விரக்திக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Natarajan Mahalingam
ஆக 28, 2025 18:11

மார்கோ வின் கடுப்பு எங்கள் முடிக்கு சமம். திறந்த பொருளாதாரம் மதமாற்றத்திற்கு வழி செய்கிறது. எங்களுக்கும் பயன் இல்லை. எங்கள் நாட்டை நாங்கள் பார்த்து கொள்கிறேன். அதிபர்க்கு பைத்தியத்திற்கு வைத்தியம் பாருங்கள் முதலில்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 02, 2025 13:03

இந்தியாவின் உரிமை .......


ramesh
ஆக 02, 2025 11:28

இந்தியா பாக்கிஸ்தான் போரில் டிரம்ப் பேச்சை கேட்டு இந்தியா போரை நிறுத்தியதால் தான், இன்று நம்மை செத்த பொருளாதாரம் என்று டிரம்ப் பேசுகிறார் . இப்போது நம்மை அடிமை என்பது போல நினைத்து மிரட்டு கிறார் . நாம் அமெரிக்காவை எதிர்த்தால் இவரால் ஒன்றும் செய்ய முடியாது .துணிவே துணை


vivek
ஆக 02, 2025 16:49

ஏல ரமேசு...அமெரிக்க சொல்லி இந்திய சண்டையை நிறுத்தியது என்று எந்த கெனையன் சொன்னான்....நீ சொந்தமா யோசிக்க மாட்டாயா


ஆரூர் ரங்
ஆக 02, 2025 17:19

நடந்தது போர் அல்ல. சொல்லி அடித்த துல்லிய தாக்குதல் மட்டுமே. குறிக்கோளை அடைந்தவுடன் தாக்குதலை நாமாகவேதான் நிறுத்தினோம் . திரிந்து எழுதுவது தேச விரோத மனப்பான்மை.


ramesh
ஆக 02, 2025 22:17

விவேக் பேப்பர் டிவி நியூஸ் எதுவும் படிக்காமல் கருத்து போபட வந்து விட்டாயா . டிரம்ப் 30 தடவைக்கு மேல் சொல்லி விட்டார் என்னால் தான் நான் சொல்லி தான் இந்தியா பாக் போர் நின்றது என்று .


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 02, 2025 11:01

அமெரிக்க உக்ரைனுக்கு போரில் உதவலாம் அது தவறில்லையாம் ஆனால் இந்தியா ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்குவது தான் குற்றமாம். இது என்ன லாஜிக் என்று புரியவில்லை. அமெரிக்க போரை நீடிக்க செய்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து உக்ரைனை கடன்காரன் ஆக்கி அங்கிருக்கும் கனிம வளங்களை குறைந்த விலைக்கு அதுவும் டிரம்ப் மகன்கள் கம்பெனிக்கு விற்க வைக்குமாம். அது தவறில்லையாம். இது எப்படி என்றால் நாமக்கலில் பண நெருக்கடியில் இருப்பவர்களுக்கு கடன் கொடுத்து அவர்கள் கிட்னியை திருட்டு தனமாக போலி ஆவணங்கள் மூலமாக முறைகேடாக பிடிங்கி விற்கும் கும்பலுக்கும் இந்த டிரம்ப் கும்பலுக்கும் வித்தியாசம் கிடையாது. இந்த டிரம்ப் ஒரு பாலியல் குற்றவாளி அவரிடம் போய் நியாய தர்மம் எதிர் பார்ப்பது தவறு தான். அடுத்த இலக்கு டிரம்ப்க்கு பாகிஸ்தான். உக்ரைன் இனி எப்படி அமெரிக்காவிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப் பட போகிறதோ அதை விட மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல சைனாவிடமும் அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் மாட்டிக்கொண்டு முழிக்க போகிறது. இஸ்ரேல் காசா இஸ்ரேல் ஹமாஸ் போரில் அமெரிக்கவை சாடும் நம் ஊர் போலி மதச்சார்பின்மை ஆட்கள் பாகிஸ்தான் அமெரிக்கா உறவை வாழ்த்துவார்கள்.


MP.K
ஆக 02, 2025 09:28

உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தி விட்டு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிருந்தால் இந்த சூழல் உருவாகி இருக்காது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை தாக்கி விட்டது. உலக நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.


lana
ஆக 02, 2025 08:14

எங்க ஊர் பப்பு இதுக்கும் உங்களுக்கு ஒத்து ஊதுவார் . ஆனாலும் உங்கள் பருப்பு வேகாது


பேசும் தமிழன்
ஆக 02, 2025 08:11

எங்கள் நாட்டின் தேவைக்கு நாங்கள் குறைந்த விலையில் எங்கு எரிபொருள் கிடைக்கிறதோ அங்கே வாங்குவோம் .....வேண்டுமானால் அதை விட குறைந்த விலையில் நீங்கள் எரிபொருள் கொடுத்தால் .....உங்களிடமும் வாங்கி கொள்கிறோம் ....அதை விடுத்து இந்த பூச்சி பிடித்து காட்டும் வேலை எல்லாம் வேண்டாம் ....இப்போது யாரை எங்கள் நாட்டில் நடப்பது உங்கள் அடிமை கான் கிராஸ் கட்சி இல்லை .....மோடி அவர்களின் தீரமான ஆட்சி ....அதை முதலில் நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள்.


KUMARAN TRADERS
ஆக 02, 2025 07:40

நீங்க யாருடா எங்க நாட்டுக்கு தடா போடுவதற்கு ஏண்டா உலகம் பூரா தீவிரவாதிகள் வாங்க கூடாது நீ யாருடா எங்க நாட்டு காரனுக்கு பொறந்த பொழப்பு இருந்தா பாருடா அறிவு பைத்தியக்காரன் நாய்களா எங்க நாட்டுக்கு தடை விதிப்பதற்கு நீங்கள் யாரடா நாங்க ராஜா கிட்ட வாங்கவும் எங்கேயும் வாங்குவோம் நாட்டுக்கு அழிவு வரப்போகுது உன்னோடு அழிஞ்சா தான் மத்த நாடு உருப்படும் கப்பலை எங்க வேணாலும் அனுப்பு உனக்கு பக்கத்துல ரஷ்யா வச்சிருக்கான் நீர் மூழ்கி கப்பல் நீ சொல்லி இருக்கிறேன்


ராமகிருஷ்ணன்
ஆக 02, 2025 06:38

பாகிஸ்தானை போரில் அசிங்கமா தோற்கடிப்பதை பார்த்து அமெரிக்க கடுப்பாகி விட்டது. மேலும் 100 நாடுகளுக்கு மேல் இந்தியா ஆயுதம் ஏற்றுமதி செய்கின்றது. அமெரிக்கா பொழப்பில் மண் விழுந்து விட்டது, டாலரை மதிப்பதே இல்லை. அவனுக்கு காண்டாகி கத்த ஆரம்பித்து விட்டனர்


Naga Subramanian
ஆக 02, 2025 06:22

அமெரிக்காவின் அட்டூழியம் அதிகமாகிறது. இதை அடக்க வேண்டும். அவர்களின் டாலர் மதிப்பு குறைத்துவிடுமோ எனும் அச்சத்தில் இதையெல்லாம் அவர்களுக்குச் செய்யத் தோன்றுகிறது. இந்தியா இதற்கான பதிலடி எவ்வாறு கொடுக்கப்போகிறது என்றுதான் பார்க்கவேண்டும்.


முக்கிய வீடியோ