உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!

புதுடில்லி; '' இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. வரும் 12ம் தேதி இரு நாட்டுராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள், '' என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3khxbaq0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்து பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

kanagasundaram
மே 11, 2025 12:15

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட வேண்டும்.இல்லையேல் நமக்கு நிம்மதி இருக்காது.


Mr Krish Tamilnadu
மே 11, 2025 07:44

வீரர்களை வெற்றி பெறுபவன் வீரன். மக்களை காப்பவன் அரசன். வீரத்தை விட மக்களை காப்பது முக்கியம். மக்களை காத்த பாகுபலியை மகிழ்மதியின் அரசனாக அறிவிக்கிறேன். அந்த கயவர்கள் இந்திய மண்ணை மிதிக்கவே கூடாது. நாம் அவர்களுக்கு அன்னம், தண்ணீர் தர கூடாது. வாழ்நாள் முழுக்க உயிரோடு இருக்க வேண்டும். எந்த இடத்தில் கந்தஹாரில் இறக்கி விட்டோமோ, அந்த இடத்தில் இருந்து, அந்த உலக குற்றவாளிகள் அமெரிக்காவின் அல்காட்ராஸ் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். மினி சுவிட்சர்லாந்து ல் அவர்கள் நடத்திய தாக்குதலை எண்ணி எண்ணி வருத்த வேண்டும். அவர்களின் சுய ருபத்தை அமெரிக்காவிடம் காட்ட முயற்சிக்க வேண்டும். அந்த தலைவலிகளை அமெரிக்கா முழுமையாக அனுபவிக்க வேண்டும். அடுத்து, விருந்தாளியாக இந்திய மண்ணில் பேச்சுவார்த்தை நடத்த கூடாது. வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு இடத்தில் நடத்த வேண்டும். அவர்களின் மூச்சு காற்று கூட இந்தியாவில் நுழைய கூடாது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை அவர்களாகவே விட்டு விட்டு செல்ல வேண்டும். இதுவே சிந்தூர் தேவியின் விருப்பம். விருப்பமே கட்டளை. கட்டளையே சாசனம்.


Barakat Ali
மே 10, 2025 22:23

பேச்சுவார்த்தை தேவையற்றது ..... அவர்கள் மீண்டும் மீண்டும் காஷ்மீரைப்பற்றி மட்டுமே பேசுவார்கள் .....


Amar Akbar Antony
மே 10, 2025 21:46

...... புத்தி தொண்டைக்குழி வரைக்கும் என்பது மீண்டும் நிரூபணம். போர் நிறுத்தம் பக்கிகளின் ஓய்வுக்காக.


SIVA
மே 10, 2025 21:45

சர்வதேச நாடுகள் சொல்வதை நாம் கேட்காமல் இருக்க வேண்டும் என்றால் , மேக் இந்த இந்தியா மட்டும் போதாது , USE IN INDIA என்ற கொள்கை வேண்டும் , நாம் பயன்படுத்தும் பொருட்களில் இந்திய பொருளை தேடி வாங்க வேண்டும் , நம் மாநிலத்தில் மாவட்டத்தில் உள்ள பொருட்களை வாங்க வேண்டும் , இந்த முறை போரில் உதவியது மேக் இன் இந்தியா , அது மட்டும் போதாது USE IN INDIA தான் நம்மை நிரந்தரமாக காப்பாற்றும் ....


veeramani hariharan
மே 10, 2025 21:40

Already they have started their shelling on Jammu. These people are shown their place.


Gurumoorthy Padmanaban
மே 10, 2025 21:35

இப்பொழுது பாக்கிஸ்தான் இந்தியாவின் மீது தாக்கிக்கொண்டு இருக்கிறது. 10/05/25 அன்று இரவு 9 மணி முதல் தாக்குதல் தொடர்கிறது. பாகிஸ்தானை நம்ப முடியாது


ஆரூர் ரங்
மே 10, 2025 21:34

போர் நிறுத்தத்தால் பயனில்லை . பயங்கரவாதிகள் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாது. அந்த பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பதையும் நிதியுதவியையும் அமெரிக்கா நிறுத்தாது. தமது நாட்டில் அமைதியை விரும்பும் அமெரிக்கா அதே நேரத்தில் மற்ற நாடுகள் பயங்கரவாதமின்றி அமைதியாக வாழ விரும்புகிறதா என்பதே கேள்வி..


Bharathi
மே 10, 2025 21:28

As usual they show their colours


Srprd
மே 10, 2025 21:21

They have violated the stoppage of firing. Kashmir is in danger. Indian fighter jets should cross the LoC and IB and finish off these terrorists once and for all. No need to wait for American approval.


புதிய வீடியோ