உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்; இந்திய அணியில் 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி ஆமதாபாத்தில் அக்., 2ம் தேதி தொடங்குகிறது. 2வது போட்டி டில்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்திலும் நடக்க இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன், ஜெகதீஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர் ஜடேஜாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் தொடரில் சரிவர சோபிக்காத கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை. அடுத்ததாக சொந்த மண்ணில் நடக்கும் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கில் தலைமையிலான இந்திய அணியின் முழு விபரம்;கில் (கேப்டன்) ஜெயஸ்வால்கே.எல். ராகுல்சாய் சுதர்சன்தேவதட் படிக்கல்நிதிஷ் குமார் ரெட்டிதுருவ் ஜூரேல்என். ஜெகதீசன்ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்)வாஷிங்டன் சுந்தர்அக்சர் படேல்ஜஸ்ப்ரீத் பும்ராமுகமது சிராஜ்பிரசித் கிருஷ்ணாகுல்தீப் யாதவ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D Natarajan
செப் 25, 2025 21:30

ஜெகதீசன் ஒபெனர் டெஸ்ட் மேட்சில் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை யாராவது காயம் பட்டு விலகினால் மட்டுமே சான்ஸ் கிடைக்கும்


Kanagaraj M
செப் 25, 2025 14:48

தமிழ்நாட்டில் வாழும் மூன்று வாய்ப்பு.....


ஆரூர் ரங்
செப் 25, 2025 14:15

மூன்று பேர் தேர்வானது தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணியின் (பொன்முடியின் மகன்)சாதனை. ஆனா ஒரு சந்தேகம். இதில் அவர் சமூக நீதிப்படி இட ஒதுக்கீட்டு பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்தாரா?


Vasan
செப் 25, 2025 13:41

தமிழ் நாட்டுக்கு 20% இட ஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி. ஆனால் மூவருமே சென்னையை சேர்ந்தவர்கள். மேற்கு மற்றும் தென் மாவட்டங்கள் புறக்கணிக்க பட்டுள்ளன. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது.


Sesh
செப் 25, 2025 18:01

என். ஜெகதீசன்..... கோவை சார்