வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே???
அதுதான் வழிகாட்டுதே
அவர் உங்களுக்கு சொல்ல வில்லை.. போங்க
எப்படி ஒரு நாடு இருக்க கூடாதுனு வழிகாட்டுது ...அப்படித்தானா .
லக்னோ: இந்தியா விரைவில் உலகிற்கு வழிகாட்டும். உலகளாவிய பிரச்னைகளுக்கு இந்தியாவிடம் தீர்வுகள் உள்ளன என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார்.உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: இந்தியா விரைவில் உலகிற்கு வழிகாட்டும். உலகளாவிய பிரச்னைகளுக்கான தீர்வுகள் இந்தியாவிடம் உள்ளன. நாம் ஒரு உலகத் தலைவராக மாற விரும்பினால், நாம் அனைத்துத் துறைகளிலும் சக்திவாய்ந்தவர்களாக மாற வேண்டும். மேற்கத்திய நாடுகள் அடிப்படைவாதத்தைப் பரப்புகின்றன. அவர்களின் சிந்தனை சக்தி வாய்ந்தவர்களாக மாறுவது, அவர்கள் வழியில் வருபவர்களையும் தடையாக இருப்பவர்களையும் அழிக்க நினைக்கின்றனர். இதைத்தான் இன்று அமெரிக்காவும் சீனாவும் செய்து வருகின்றன. ஒவ்வொரு ஹிந்து தம்பதியினரும் மூன்று குழந்தைகளைப் பெற வேண்டும். மூன்றுக்கும் குறைவான குழந்தைகளைப் பெற்றெடுக்கும் சமூகம் எதிர்காலத்தில் அழிக்கப்படும்.இதை நம் குடும்பங்களில் உள்ள புதுமணத் தம்பதிகளிடம் சொல்ல வேண்டும்.ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து, நீக்கி, நாடு கடத்த வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடாது. நாம் அனைவரும் ஒரே நாட்டின், ஒரே தாய்நாட்டின் மகன்கள். மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒன்று. ஒரு காலத்தில் பாகுபாடு இல்லை, ஆனால் காலப்போக்கில், பாகுபாடு என்பது ஒரு பழக்கமாகிவிட்டது, அதை ஒழிக்க வேண்டும். நல்லிணக்கம் வளர்க்கப்படுவது அவசியமாகும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே???
அதுதான் வழிகாட்டுதே
அவர் உங்களுக்கு சொல்ல வில்லை.. போங்க
எப்படி ஒரு நாடு இருக்க கூடாதுனு வழிகாட்டுது ...அப்படித்தானா .