உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்!

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம்!

- நமது சிறப்பு நிருபர் - பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரையாற்றினார். முப்படை வீரர்களுக்கு 'சல்யூட்' அடித்து நன்றி சொன்ன அவர், ''அணுகுண்டு மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்; பாகிஸ்தான் பிழைக்க வேண்டுமானால், பயங்கரவாத ஆதரவை கைவிடுவதே ஒரே வழி,'' என திட்டவட்டமாக தெரிவித்தார். 'போர் நிறுத்தத்துக்கு நானே காரணம்' என பெருமை பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை, தன் உரையில் எந்த இடத்திலும் குறிப்பிடாமல் பிரதமர் மோடி தவிர்த்தார்.பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ஆற்றிய உரை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b6afdp9n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆப்பரேஷன் சிந்துாரை வெற்றிகரமாக நடத்திய நம் முப்படையினர், உளவுத் துறை, விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவருக்கும், நாட்டு மக்கள் சார்பில் மிகப்பெரிய சல்யூட்.ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக அளப்பரிய வீரத்தை நம் வீரர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். விடுமுறையை அனுபவிக்க வந்த அப்பாவிகள் மீது, மதத்தின் பெயரில் கொடூர தாக்குதல் நடத்தினர். நாட்டு மக்கள் பரஸ்பரம் கொண்டுள்ள நல்லெண்ணத்தை உடைக்க இந்த சதி நடந்தது. இந்த தாக்குதலுக்கு பின், நாட்டு மக்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓரணியில் திரண்டனர். பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக்க பாதுகாப்பு படையுடன் நாம் கைகோர்த்தோம். பயங்கரவாத அமைப்புகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.ஆப்பரேஷன் சிந்துார் என்பது வெறும் பெயர் அல்ல. கோடிக்கணக்கான இந்தியர்களின் எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடு இது.மே 6 நள்ளிரவு துவங்கி, மே 7 அதிகாலை வரையில் பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்திராத வகையில் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது, இந்தியா துல்லியமான தாக்குதல் நடத்தி அழித்தது. பஹவல்பூர், முரீத்கே போன்ற பயங்கரவாத முகாம்கள், சர்வதேச பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக திகழ்ந்தன.உலகின் மற்ற பகுதிகளில் நடந்த அனைத்து வகையான பயங்கரவாத தாக்குதல்களுக்கும், இந்த இடங்களில் இருந்து தான் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.பயங்கரவாதிகள், நம் சகோதரிகளின் குங்குமத்தை பறித்தனர். எனவே தான், குங்குமத்தை குறிக்கும் சிந்துார் என்ற பெயரில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். அவர்கள் மூன்றாண்டுகளாக பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரிந்தனர். அந்த கொடூரக்காரர்களை நம் படைகள் ஒரே நாளில் தீர்த்துக்கட்டின.இந்தியாவின் இந்த செயலால் பாகிஸ்தான் மிகப் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது. அந்த ஏமாற்றத்தால் பாகிஸ்தான் மீண்டும் ஒரு தவறு செய்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடும் இந்தியாவுக்கு கைகொடுக்காமல், நம் மீதே பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது.கோவில்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், ராணுவ முகாம்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளை பாக்., படைகள் தாக்கின.பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் நம் படைகளால் சாம்பலாக்கப்பட்டதை உலகம் உற்று பார்த்தது.பாகிஸ்தான் தயாரித்த ட்ரோன்கள் எல்லையைக் கூட தாண்டவில்லை. ஆனால், நம் வீரர்களின் ஆயுதங்களும், வாகனங்களும், தாக்குதல்களும் எல்லையை கடந்து வெகுதுாரம் வரை சென்று எதிரிகளை அழித்தன.முதல் மூன்று நாட்களிலேயே நம் படைகள் பாகிஸ்தானை நிலைகுலைய செய்துவிட்டன. அது, அழிவில் இருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால், 10ம் தேதி மதியம் பாக்., ராணுவ தலைமை, நம் ராணுவ தலைமையை தொடர்பு கொண்டது; போதும் நிறுத்திவிடலாம் என்றது. அதற்கு முன்பே பயங்கரவாதிகளை நம் படைகள் வேரோடு அழித்திருந்தன. அவர்களின் முகாம்களை நாம் சுக்குநுாறாக்கியிருந்தோம். பயங்கரவாதிகளும், பாக்., ராணுவமும், இந்தியாவுக்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே தான், அவர்களின் கோரிக்கையை ஏற்று, ராணுவ நடவடிக்கையை நாம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.வரும் காலங்களில் பாகிஸ்தான் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து இந்த நிலைப்பாடு நீடிக்கும் அல்லது மாறுபடும். நம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், மிகப் பெரிய அளவில் பதிலடி தரப்படும் என்பதை அவர்களுக்கு தெளிவாக உணர்த்தி உள்ளோம். அணு ஆயுதம் வைத்திருக்கிறோம்; பயன்படுத்துவோம் என்ற மிரட்டல்கள் எல்லாம் இந்தியாவிடம் பலிக்காது. நாங்கள் அதற்கெல்லாம் பயந்தவர்கள் அல்ல. அப்படிப்பட்ட மிரட்டல் விடுப்பவர்களுக்கு இந்தியா சரியான பதிலடி தரும்.ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக நம் படைத்திறனை இந்த உலகமே பார்த்துள்ளது. அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்கு இது மிகப் பெரிய எச்சரிக்கை. யுத்த களத்தில் பாகிஸ்தானை நாம் பல முறை வென்றுள்ளோம். இந்த முறையும் நம் திறனை வெளிப்படுத்தியுள்ளோம். நம், 'மேட் இன் இந்தியா' ஆயுதங்களின் திறன் வெளிப்பட்டுள்ளது. 21ம் நுாற்றாண்டு போரில், மேட் இன் இந்தியாவின் மகத்துவம் வெளிப்பட்டுஉள்ளது.பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்பது மிகப்பெரிய வெற்றி. இது போருக்கான யுகம் அல்ல. அதே சமயம் இந்த யுகம் பயங்கரவாதத்திற்கானதும் அல்ல. பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாதம் ஒரு நாள் பாகிஸ்தானையே அழித்து விடும். அவர்கள் பிழைக்க வேண்டுமானால், பயங்கரவாத ஆதரவை கைவிட வேண்டும். பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒரு சேர நடக்காது. ரத்தமும், தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது. இது புத்த பூர்ணிமா திருநாள். பவுத்தம் அமைதியை, சாந்தியை வலியுறுத்துகிறது. அமைதியுடன் கூடிய முன்னேற்றத்தால் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். அதே சமயம், தேவைப்படும் நேரத்தில் சக்தியின் பயன்பாடும் இருக்கும்.பாரத் மாதா கீ ஜெய்!இவ்வாறு அவர் பேசினார்.பிரதமரின் பேச்சுக்கு சில மணி நேரங்கள் முன், 'போர் நிறுத்தத்துக்கு நானே காரணம்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கம் போல பெருமை பேசினார். ஆனால், தன் உரையில் டிரம்ப் குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் பிரதமர் மோடி சாதுர்யமாக தவிர்த்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Sekar
மே 13, 2025 18:34

நமது பிரதமர் அவர்களின் ஒவ்வொரு செயல்களும் மிகவும் சிறப்பாக உள்ளது. நமது ராணுவம் மிக திறம்பட அற்புதங்களை செய்துள்ளது. அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள். அதே சமயம், நாம் இனி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு பிரச்சனை காலங்களில் கை கொடுப்போர் மிகவும் குறைவு மேலும் நமது எதிரிகளுக்கு துணை நிற்போர் ஏராளம். நாம் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது. நம் நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்குவிக்க வேண்டும். நம் நாட்டின் தொழில் நுட்ப திறனை மேம்படுத்த வழி செய்ய வேண்டும். நாம் கணடறிந்த சிறந்த தொழில் நுட்பங்களை நமக்கே அறியாமல் நம் எதிரிகளுக்கு விற்று விடக் கூடாது. இவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலை உயர உயர மிகவும் பணிவுடன் மற்றும் மிக அமைதி காத்து வளர்ச்சியை நோக்கி முன் செல்ல வேண்டும். வாழ்க பாரதம். வளர்க பாரதத்தின் புகழ்.


Barakat Ali
மே 13, 2025 16:18

இவை தான் இந்திரா காந்தி 1971ஆம் போரில் நிகழ்த்திய சாதனைகள் ஆகும். 1. பத்து லட்சங்களுக்கு மேல் பாகிஸ்தான், பங்களாதேஷ் அகதிகளை இந்தியாவின் உள்ளே விட்டது. 2. இந்திய இராணுவத்தின் கைகளைக் கட்டிப் போட்டது. 3. 1971 போரைக் காரணமாகக் காட்டி இந்தியாவில் அரசியல் செய்தது. 4. சரணடைந்த பாகிஸ்தானுக்கு ஆதரவான சிம்லா ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. 5. சரணடைந்த பாகிஸ்தானிடம் இருந்து முழுமையாக காஷ்மீரை கைப்பற்றாதது. 6. சரணடைந்த பாகிஸ்தானுக்கு கைப்பற்றிய நிலங்களை மீண்டும் பாகிஸ்தானுக்கே வழங்கியது. 7. பத்து லட்சங்களுக்கு மேல் ஊடுருவியர்களால் சுமார் 3845 இந்திய வீரர்களை பலி கொடுக்கப்பட்டது. 8. 54 இராணுவ வீரர்கள் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையிலிருந்து மீட்கப்படாமல் "மிஸ்ஸிங் இன் ஆக்ஷன்" Missing in Action என்று கருதப்பட்டு இந்திராவால் ஆவணப்படுத்தப்பட்டனர். எத்தகைய கொடூரம் இது??? உயிரோடு இருந்தவர்களை மீட்க வக்கின்றி மரணித்தவர்களாக அறிவித்தார் இந்திரா. 9. ஆனா பாருங்க இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் வீரர்களை மீண்டும் பாகிஸ்தானிடமே ஒப்படைத்தார் இந்திரா. 10. அப்போது கூட பாகிஸ்தானில் கைதியாக உள்ள இந்திய வீரர்களை திருப்பித் தர சொல்லி இந்திரா நிர்பந்திக்கவில்லை. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்திற்கு 2204 கிலோமீட்டர்கள் ஆகும். பாகிஸ்தானும் வங்க தேசமும் அவரவர் எல்லைக்குச் செல்ல இந்தியாவின் 2200 கிலோமீட்டர்களைக் கடந்தே ஆக வேண்டும். இதை பாகிஸ்தானால் எவ்வாறு நிர்வாகம் செய்ய முடியும்??? பாகிஸ்தான் வங்கதேசம் பிரிவு என்பது இயற்கையால் நியமிக்கப்பட்டது ஆகும். இந்திரா நிர்வாகத்தில் திறமை வாய்ந்தவராக இருந்திருந்தால் 10 லட்சங்களுக்கும் மேற்பட்ட அகதிகளை பாரதத்தில் கால் வைத்திருக்க விட்டிருக்க மாட்டார். இராணுவத்தின் கைகளையும் கட்டிப் போட்டிருக்க மாட்டார். நிலைமை கை மீறிப் போகவே, இராணுவக் கைகளை அவிழ்த்துவிட்டு நடவடிக்கை எடுத்தார். இந்த போர் சூழலிலும் கூட ரஷ்யாவின் கையை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்க வைத்தார். நமது இந்திய இராணுவம் கஷ்டப்பட்டுக் கைபற்றிய "கராச்சி" உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் பாகிஸ்தானுக்கே கொடுத்தார். இந்தியாவின் பகுதிகளை தாரை வார்ப்பதில் கைதேர்ந்த குடும்பம் காங்கிரஸ் குடும்பம்.


Bala
மே 13, 2025 19:04

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் குளறுபடிகளை பரக்கத் அலி அருமையாக விளக்கியிருக்கிறார் . வாழ்த்துக்கள்


krishna
மே 13, 2025 19:57

BARAKATH ALI-KKU BIG SALUTE.UNGALAI PONDRA UNMAI PESUM DESA PATTRU ULLA GEMTLEMAN UNGAL MADHAYHIL PAARPPADHU MIGA MIGA ARIDHU.VAAZHTHUKKAL.


M S RAGHUNATHAN
மே 13, 2025 11:21

Equating terror act from the Pak soil against India , as an act of war against the nation is a very shrewd statement.


M S RAGHUNATHAN
மே 13, 2025 11:20

No doubt, Mr Modi can be called VISWAGURU. He called the nuclear bluff of Pakistan tematically and effectively.


Madras Madra
மே 13, 2025 11:06

தங்க தலைவன் மோடி பல கோடி நூறாண்டு வாழணும்


Maruthu Pandi
மே 13, 2025 10:38

நன்றி பிரதமர் அய்யா. இனி இந்தியாவில் இல்லை பாரதத்தில் நீங்களே நிரந்தர பிரதமராக இருக்க வேண்டும். இனி பாக்கிஸ்தான் இப்படி ஒரு தாக்குதல் நடத்த அஞ்ச வேண்டும் . நன்றி அய்யா. ஜெய் பாரத்


ஆரூர் ரங்
மே 13, 2025 09:25

இப்போது கூட 20 சதவீத காஷ்மீரிகள் தீவீரவாத ஆதரவு மனநிலையில் உள்ளார்கள். தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் மதப் பஞ்சாயத்துகள் அடைக்கலம் கொடுப்பது நெடுங்காலமாக நடக்கிறது. பகல்காம் பயங்கரவாதிகள் இதுவரை பிடிபடாமல் தப்பிப்பதற்கு இதுதான் காரணம். எல்லா பயங்கரவாதிகளையும் அழிக்க வேண்டுமெனில் முழு பாகிஸ்தான் ராணுவத்தையும் அழிக்க வேண்டும். ஏனெனில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் வேறுபாடில்லை.. அதற்கு முயன்றால் 52 இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்கும். பொருளாதார ரீதியில் மடக்குவது போல பல்முனை தாக்குதல்தான் ராஜதந்திரம்.


SIVA
மே 13, 2025 08:57

இதற்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு நான் தான் தாக்கினேன் என்று சொல்வார்கள், முதல் SURGICAL STRIKE நடந்த பின் இப்போது நடந்த பஹல்கம் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்க வில்லை, முன்பு இதை நாங்கள் தான் செய்தோம் இனியும் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்று வீடியோ வரும், இப்ப எல்லாரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள், இனி பிஜேபி ஆட்சி இருக்கும் வரை பேசாம இருந்தால் தான் உயிர் வாழமுடியும் என்று அவனுக்கு தெரிந்து உள்ளது, இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் வீர வசனம் பேசிய தீவிரவாதிகள் இன்று எங்கே ....


Barakat Ali
மே 13, 2025 08:34

தெளிவான, அளவான பேச்சு... தேவையான எச்சரிக்கை கடுமையாக விடப்பட்டது .... திருந்தினால் அவர்களுக்கு நல்லது .... இல்லாவிட்டால் அவர்களுக்கு அழிவு ....


இறைவி
மே 13, 2025 07:16

வெவ்வேறு பெயர்களில் அரச குடும்பத்து பாதம் தாங்கிகள் இங்கு புலம்புவதையும், வழக்காடு மன்றம் போல கேள்விக் கணைகள் தொடுப்பதையும், அதுவும் அந்த கேள்விகள் ஆரம்ப பள்ளி மாணவனுக்கு உண்டான அறிவுத்திறன் அளவுக்கே உள்ளதையும், பார்க்க பார்க்க மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கட்சியாக பார்க்காமல் மோடி என்ற தனி மனிதனின் முயற்சியில் கடந்த பதினொரு ஆண்டுகளில் பாரதம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பாருங்கள். இன்று எவ்வளவு மோசமாக இருந்தாலும் உங்கள் கருத்துக்களை வெளியிட முடிகிறதே. கடந்த அறுபது வருடங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை செய்திருக்கும் பணியையும் மோடி அவர்கள் கடந்த பதினொரு வருடத்தில் செய்திருக்கும் முன்னேற்றங்களையும் ஒப்பிட்டு பாருங்கள். இம்மாதிரி காசுக்கு கருத்து போட உங்களுக்கே வெட்கமாக இருக்கும்.


Barakat Ali
மே 13, 2025 16:06

வெட்கப்பட்டா திருட்டு கழகத்துக்கு அடிமையா இருக்க முடியுங்களா ????