உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒருங்கிணைந்த பென்சன் திட்டம்; நெறிமுறைகள் வெளியிட்டது மத்திய அரசு

ஒருங்கிணைந்த பென்சன் திட்டம்; நெறிமுறைகள் வெளியிட்டது மத்திய அரசு

புதுடில்லி:ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்துக்கான நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.தேசிய பென்சன் திட்டத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலர்கள், தொழிலாளர்களுக்கு, ஒருங்கிணைந்த பென்சன் என்ற வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்து, 2019ல் அறிவிப்பு வெளியிட்டது.இந்த வாய்ப்பை தேர்வு செய்த தொழிலாளர்கள், அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தின் விதிமுறைகள், தகுதிகள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.ஒருங்கிணைந்த பென்சன் திட்ட தகுதிகள் வருமாறு:ஒரு தொழிலாளி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலை பார்த்திருந்தால், அவர் ஓய்வு பெற்ற நாளில் இருந்து பென்சன் வழங்கப்படும்.FR 56 j விதிப்படி, கட்டாயப்படுத்தி ஓய்வு அளிக்கப்பட்ட தொழிலாளிக்கு, அந்த ஓய்வு நாள் முதல் பென்சன் வழங்கப்படும்.25 ஆண்டுகள் பணியாற்றியபிறகு, தானாக முன் வந்து ஓய்வு பெற்றால், அவரது இயல்பான ஓய்வுக்கால தேதிக்கு பிறகு பென்சன் வழங்கப்படும்.பணி நீக்கம் செய்யப்பட்டாலோ, ராஜினாமா செய்தாலோ ஒருங்கிணைந்த பென்சன் வழங்கப்படாது.திட்டத்தின் பயன்கள்குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முழுமையான பென்சன் வழங்கப்படும். ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் பென்சனாக வழங்கப்படும்.பணிக்காலம் குறைவாக இருக்கும் பட்சத்தில், அதற்கு தகுந்தபடி பென்சன் கணக்கிட்டு வழங்கப்படும்.குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், அதற்கு மேலும் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் மாதாந்திர பென்சன் கட்டாயம் வழங்கப்படும்.25 ஆண்டுகள் பணியாற்றி, தானாக முன் வந்து ஓய்வு பெறுபவர்களுக்கு, அவர் இயல்பாக ஓய்வு பெற வேண்டிய தேதியில் இருந்து பென்சன் வழங்கப்படும்.பணி ஓய்வு பெற்ற பிறகு, பென்சன்தாரர் இறந்து விட்டால், அவருக்கு கடைசியாக வழங்கப்பட்ட பென்சனில் 60 சதவீதம் அவரது சட்டபூர்வ மனைவிக்கு வழங்கப்படும்.பென்சனர் மற்றும் அவரது மனைவிக்கு, அகவிலைப்படி நிவாரணம் உண்டு என்பது உள்ளிட்ட நெறிமுறைகள் இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 05:02

இப்போ ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் , ppf , nps என்று போயி கொண்டிருப்பவர்கள் நிலை? உதாரணம் அரசு கல்லுரியில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் பின்னர் ஒரு காலத்தில் அந்த கல்லூரி யூனிவர்சிட்டி ஆனதென்றால் ?


Alagesan Ram
ஜன 25, 2025 22:04

A very good project, a project produced for the welfare of the workers. Thank you very much.


Alagesan Ram
ஜன 25, 2025 22:02

மிக அருமையான திட்டம் தொழிலாளர் நலனுக்காகவே உற்பத்தி செய்த திட்டம். மிக்க நன்றி


Venkatachalapathy
ஜன 25, 2025 21:36

அரசு ஊழியர்களை ஏமாற்றும் ராஜதந்திரம்


sankaranarayanan
ஜன 25, 2025 20:59

ஒருங்கிணைந்த பென்சன் என்ற வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்து, 2019ல் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ஓய்ஊதியம் இத்திட்டம் ஓய்வுபெற்ற அரசுடைமையாக்காப்பட்ட வங்கிகளிலிருந்து ஓய்வுபெற்றோர்களுக்கு மட்டும் ஏன் வழங்கவில்லை அவர்கள் மட்டும் என்ன அந்நியர்களா. இனியாவது அவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்படியாக மாற்றி அமையுங்கள் இந்தியாவிலேயே அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் ஓய்ஊதியம்தான் மிக மிக குறைவு யாருமே கண்டுகொள்வதில்லை. அவர்கள் அடிப்படை ஓய்ஊதியம் இருபத்தைந்து ஆண்டுகளாக மாற்றப்படாமல் அதே அடிப்படை ஓய்ஊதியம்தான் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் பஞ்சப்படி மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது இப்போதாவது பிரதமரின் செவிக்கு யாராவது எடுத்துச்சொல்லி சரி செய்வார்களா


GMM
ஜன 25, 2025 19:59

ஓய்வு பெறுவதற்கு 12 மாத சம்பளம் பதில் 24, 36 மாதம் பென்ஷன் வழங்க எடுத்து கொள்ள வேண்டும். லஞ்சம் வாங்கி, பதவி உயர்வு கொடுப்பர் . பென்சனர் சட்ட பூர்வ மனைவி மறுமணம் புரிய கூடாது. தொழிலாளர், அரசு ஊழியர் பணியில் பெண் இருந்து இருக்க கூடாது. பெற்றோர் ,பிள்ளை இருந்தால், அவர்களுக்கு மனைவி இருக்கும் வரை பென்ஷன் பணத்தை பகுத்து கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தொழில் அல்லது அரசு பணி கொடுக்க வேண்டும். அனைத்து மாநில நிர்வாகம் அமுல்படுத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை