உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்படும் ‛அக்னிகுல் காஸ்மோஸ்' எனும் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்தது. சிறிய ரக ராக்கெட்டுகளை தனியார் பயன்பாட்டுக்கு ஏவுவதற்காக அந்நிறுவனம் அதை அமைத்தது. அந்த வகையில், ‛அக்னிபான் சார்டெட்' என்ற ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்தது. 300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அந்த ராக்கெட் 700 கி.மீ., தொலைவு வரை செல்லக்கூடியது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில முறை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், செமி கிரையோஜெனிக் மூலம் இந்த ராக்கெட் இன்று ( மே 30) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Varadarajan Nagarajan
மே 30, 2024 12:10

விண்வெளித்துறை மற்றும் ராணுவ தளவாடங்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி போன்றவற்றில் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது ஸ்டார்ட்டப் நிறுவனங்களும் சிறப்பாக செயல்படுவது பாராட்ட தக்கது. புதிய கண்டுபிடிப்புகளுடன் மென்மேலும் துடிப்புடன் செயல்பட வாழ்த்துக்கள். அரசாங்கமும் இவர்களை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகின்றோம்


Ramesh Sargam
மே 30, 2024 11:54

வாழ்த்துக்கள் இந்த சாதனையில் பங்கேற்ற அனைவருக்கும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை