உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்!: அயோத்தியில் கோலாகலம்

எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்!: அயோத்தியில் கோலாகலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷமே ஒலித்தது. பல நூற்றாண்டு கனவான ராமர் கோவிலின் திறப்பால் பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா இன்று (ஜன.,22) கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த சிறப்பு வாய்ந்த விழாவில் பங்கேற்று, குழந்தை வடிவிலான ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். விழாவை காண நாடு முழுவதும் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஹிந்து அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அயோத்தியில் குவிந்தனர்.துறவியர், மடாதிபதிகள், சாதுக்கள் எல்லாம் மொத்தமாக அயோத்திக்கு வந்துவிட்டதால், அவர்களாலும், அவர்களது பக்தர்களாலும், தொண்டர்களாலும் எங்கும் காவி அணிந்தவர்களின் கூட்டமே காணப்பட்டது. அதேபோல் லட்சக்கணக்கான பக்தர்களும் இந்த கோலாகல விழாவை காண வருகை தந்துள்ளனர். மதியம் 12:20 மணிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு குழுமியிருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் எழுப்பிய ஜெய் ஸ்ரீராம் கோஷம் விண்ணைப் பிளந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

g.s,rajan
ஜன 22, 2024 22:14

இந்தியாவில் வறுமையும் ஏழ்மையும் ஒழியட்டும் ,பசி பட்டினியால் மக்கள் எவரும் வாடக் கூடாது அந்த ராமபிரான் அருளால் நாடும் நாட்டு மக்களும் செல்வச் செழிப்பு பெற வேண்டும் .


Seshan Thirumaliruncholai
ஜன 22, 2024 20:06

பக்தி என்றால் மூட பக்தி சிறந்தது. இந்த பக்தி பாரதத்தின் தென் பகுதியில் குறைவு என்பது எதார்த்த உண்மை. பாரத்தின் வடபகுதியில் இருந்து வருபவர்கள் கற்பூரத்தட்டில்கையில் கிடைத்த காசுபோடுவார்கள் ஆனால் நாம் உண்டியலில் நோட்டாக போடுகிறோம் ஆனால் திரு க்கோயில்களில் கைங்கரியம் செய்பவர்களுக்கு பையில் துழாவி சில்லறை காசுகளைபோடுகிறோம் தானம் அறிந்து செய் என்பார்கள். அதுபோல் திருக்கோயில்களில் கைங்கரியம் அர்ச்சகார் நாயனம் வாசிப்பவர் தரையை கூட்டி சுத்தம்செய்பவர் ஸ்ரீ பாதம்தாங்கிகள் போன்றவர்களுக்கு கொடுங்கள். அரசு தயவை நம்பிருப்பதால் அச்சஉணர்வு உள்ளது என்பது உண்மை.


வெகுளி
ஜன 22, 2024 19:27

ஹிந்துக்களின் மறுமலர்ச்சி இனிதே தொடங்கியது... இனி அந்நிய பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது என்பதை தீயசக்திகள் உணர்ந்து திருந்த வேண்டும்....


கனோஜ் ஆங்ரே
ஜன 22, 2024 17:30

போதும்யா... என்ட் கார்டு போடுங்கப்பா..? எத்தனை நாளைக்குத்தான் இதையே வச்சி செய்வீங்க...


Mohan
ஜன 22, 2024 16:29

மக்களே நான் இப்பொழுது வட நாட்டில் தான் உள்ளேன் ....இங்க ராத்திரியெல்லாம் ஸ்ரீ ராம ஸ்ரீ ராம் னு ஒரே பஜனை தா....வெடி சத்தம் , வண்டிகள் எல்லாம் ராம கொடிகள் (காவி) , இதை நம் தென் இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது .... காலையில் இருந்து ஹோமம், பஜனை, எங்கும் காவிமயம் ..மனசு கண நிமிடமும் ராம நாமத்தை விட்டு பிரிய விடல அவ்ளோ சிறப்ப இருக்கு இங்க ... தமிழ் மக்கள் இந்த மாதிரி கொண்டாட குடுத்துவெக்கலேன்னு தோணுது ...நன்றி


கனோஜ் ஆங்ரே
ஜன 22, 2024 17:37

அய்யா மோன்சாமியோவ்.... “தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் உண்மையான பக்திமான்கள். வேட்டுவ குலத்தில் பிறந்த கண்ணப்ப நாயனார் முதல் அரசனான திருமிழிசை ஆழ்வார்கள் வரை அனைவருமே உண்மையான பக்திமான்கள். அவர்கள் உபதேசித்த திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம் போன்ற நாமாவளிகளை படித்து அதன்படி தியானித்து... மிருகங்களாய் மாறாமல், மனிதனாய் இருந்து முக்தி அடைய விரும்புவர்கள்... தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறியர்களும் அல்ல... மததுவேஷிகளும் அல்ல... காட்டுமிராண்டிகளும் அல்ல... மிருகங்களும் அல்ல... தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பதினெட்டாம்படி கருப்பனுக்கு கிடா..வும் வெட்டி சாமி கும்முடுவான்... மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்க வருகிறப்ப கற்பூர ஆரத்தியும் காட்டுவான்... மதுரை மீனாட்சியை நெஞ்சுருக அமைதியாக வழிபடுவான்... தமிழன் மனிதனாய் பிறந்து... மனிதனாய் வாழ்பவன்... அவன் பிறக்குறப்ப மிருகவெறியனாக பிறப்பதுமில்லை, மிருகமாய் மாறி தன் மனிதகுலத்தைச் சேர்ந்தவர்களையே கொல்லுவதில்லை.... தமிழ்நாட்டுக்காரன் குடுத்து வைக்கலைன்னா பரவாயில்ல... நீ கொடுத்து வச்சிருக்கயில்ல... போய், காவி கோவணம் கட்டிட்டு மிருகமாய் ருத்ர தாண்டவம் ஆடு...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2024 19:16

இப்ப புரியுதா, சனாதனத்தை ஒழிப்பேன்னு சொன்னா ஏன் வடக்கன்ஸ் ஆப்படிக்கிறாங்க ன்னு .....


Godyes
ஜன 22, 2024 14:01

இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சி இல்லாமல் அப்போதே பாஜக இருந்திருந்தால் முழு சுதந்திரம் இந்துக்களுக்கு கிடைத்திருக்கும். இந்திய மக்களை சிறுபான்மை பெரும்பான்மை என காங்கிரஸ் காரன் பிரித்ததால் இந்துக்களை திட்டினால் சிறுபான்மைகள் ஓட்டு கிடைக்கும் என்று கணக்கு போட்டு அண்ணாதுரை திராவிடன் என்ற அனாமதேய பெயரில் கட்சி ஆரம்பித்து இப்போது இந்துக்களை பகுத்தறிவு என்ற பெயரில் முட்டாளாக்கு கின்றார்கள்.


தமிழ்வேள்
ஜன 22, 2024 13:48

ஜெய் ஸ்ரீ ராம் ..ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் .......


Muthu Kumar
ஜன 22, 2024 13:31

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்


Gopinathan S
ஜன 22, 2024 13:22

இன்னைக்கு கையிலேயே பிடிக்க முடியல....


Anand
ஜன 22, 2024 14:03

இன்னும் நீ ....


Godyes
ஜன 22, 2024 13:00

ஜெய் ஸ்ரீராம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை