| ADDED : ஆக 28, 2024 09:19 PM
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் அக்கட்சியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qxra9x5r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.கடந்த ஜூனில் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சம்பாய் சோரன் பதவி விலகினார் . பின் சம்பாய் சோரன் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாயின.இந்நிலையில் இன்று ஜார்க்கண்ட் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை , பிர்சாமுண்டா விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும், அதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்தில் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் 30-ல் பா.ஜ.,வில் இணைய உள்ளார்.