வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆதாரம் இருக்கிறதா என்று காங்கிரஸ் இப்பொழுது ஒரு கேள்வி கேற்கும். பொதுவாக அரசியல்வாதிகள் ஆதரவு இல்லாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை.
தானே: போதைப்பொருள் விற்றதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க் கார்கேவுக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு மிகவும் நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி லிங்கராஜ் கன்னி. இவர் கல்புரகி தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். குல்பர்கா தக்ஷின் தொகுதி எம்.எல்.ஏ., அல்லமபிரபு பாட்டீலுடனும் மிகவும் நெருக்கமானவர். இவர் தானே நகரில் போதைப்பொருள் விற்ற போது மஹாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 120 கோடீன் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவைச் சேர்ந்த அமைச்சருக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதாரம் இருக்கிறதா என்று காங்கிரஸ் இப்பொழுது ஒரு கேள்வி கேற்கும். பொதுவாக அரசியல்வாதிகள் ஆதரவு இல்லாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை.