உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைனர் பெண் கடத்திக்கொலை; மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

மைனர் பெண் கடத்திக்கொலை; மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மைனர் பெண், கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. கற்பழிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளதால், மீண்டும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது.மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான போராட்டங்கள் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், பயிற்சி வகுப்புக்கு சென்ற மைனர் பெண் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவது: தெற்கு 24 பர்கானா மஹிஷாமரியை சேர்ந்த மைனர் பெண், பயிற்சி வகுப்பிற்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என நேற்று இரவு எங்களிடம் புகார் அளித்தனர். புகார் அளித்த உடன், துரிதமாக செயல்பட்டு, விசாரணையை துவக்கினோம். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பல்வேறு காயங்களுடன் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேற்கொண்டு விசாரணை நடத்தி, 19 வயதான மொஸ்தாகின் சர்தார் என்பவரை கைது செய்துள்ளோம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ளவர்கள் போராட்டத்தை துவக்கினர். போலீஸ் வளாகத்திற்கு தீ வைக்கப்பட்டது. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.மத்திய அமைச்சரும், மாநில பா.ஜ., தலைவருமான சுகந்தா மஜூம்தார் கூறுகையில், ''அந்த பெண் கடத்தப்பட்டு, கற்பழிப்புக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டுள்ளார். முதல்வர் மம்தா ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இல்லை. மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியாமல் மம்தா திணறி வருகிறார்,'' என்றார்.போலீஸ் தரப்பில், 'உடற்கூராய்வு அறிக்கைக்காக, காத்திருக்கிறோம். அதுவரை கற்பழிப்பு என உறுதியாக சொல்ல முடியாது' என்றனர்.இச்சம்பவம் மாநில அரசுக்கு தலைவலியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sundararajan
அக் 07, 2024 05:56

குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்ட பின் அல்லது யாரையாவது போலியாக ,குற்றவாளி என்று நிறுத்திய பின் அவருக்காக வாதாட கபில் சிபல் என்ற மனசாட்சியற்ற நபர் வருவார் குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் செல்வார்.நாமும் செய்தியைக் கடந்து விடுவோம்.நீதிமன்றத்திற்கு இதுவும் ஒரு கூடுதல் வழக்கு.... மீண்டும் ஒரு குற்றம் என நிகழ்ந்த சம்பவங்கள் தொடரும்.எப்போது பிணை கொடுக்காமல் தொடர்ந்து விசாரித்து மரண தண்டனை கொடுக்கிறார்களோ, அதுவரை இந்த குற்ற சதவிகிதம் குறைய வாய்ப்பில்லை.எப்படியும் வெளியே வந்துவிடுவோம் எனும் நம்பிக்கை , குற்றவாளிகளிடம் உள்ளது.அதை வேரறுக்கும் வரை கடினம் .


Sathyanarayanan Sathyasekaren
அக் 06, 2024 04:09

எரிக்கப்படவேண்டியது போலீஸ் ஸ்டேஷன் அல்ல. குற்றவாளியின் வீடு மற்றும் அவனுக்கு மதத்தின் அடிப்படையில் ஆதரவு கொடுக்கும் அரசியல் வியாதிகளின் வீடுகள்.


சபிதா, பெங்களூரு
அக் 05, 2024 20:47

கபில் சிபல் மாதிரி ஆட்கள் இருக்கும் வரை இது தொடரும்...


Ramesh Sargam
அக் 05, 2024 20:37

நாட்டில் இப்பொழுது உள்ள சட்டங்கள் மாற்றப்படும்வரை இதுபோன்ற கொடுமைகள் தொடரும். இதற்கு முடிவு காணவேண்டியது மதிதியில் ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள், நீதிமன்ற மூத்த நீதிபதிகள், மேலும் சட்டவல்லுனர்கள்.


Lion Drsekar
அக் 05, 2024 19:25

ஆங்கிலத்தில் ஒரு சொல் I WONT ALLOW YOU TO TALK IN THE CLASS, it can be used I wont allow "you" to talk in the class, I womt allow you to talk in the class similarly சம்பவம் எதுவாக இருந்தாலும் எல்லாமே அவரவர்கள் பயன்படுத்தும் வழியைப் பொறுத்து எல்லாமே . எதற்க்காக மக்கள் பிரநிதிகள் ? எதற்க்காக எத்தினைத்துறைகள் என்றெல்லாம் கேட்கத்தோன்றும் , ஆனால் நாம் எதிர்பார்ப்பது போல் எதையுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனடியாக எதையுமே எதிர்பார்க்க முடியாது . அதற்குள் அடுத்தது வந்துவிடும் , பிறகு கஞ்சி பழங்கஞ்சிதான் . பாதுகாக்கவேண்டிய அனைவருமே மக்களை மறந்து, காலை முதல் மாலைவரை வெய்யில் மழை பாராமல் , எந்த பதவியில் இருந்தாலும் சாலைகளின் இருபுறம் மற்றும் தூங்குபவர்கள் இடங்களில் பணியில் அமர்த்தப்படுவதுபோல் , மக்களுக்கும் அளித்தால் நன்றாக இருக்கும் , வந்தே மாதரம்


Govinda raju
அக் 05, 2024 19:16

சட்டங்கள் கடுமையாக்கபட்டு உடனடி தீர்ப்பு கூறி நடவடிக்க எடுக்காவிடில்.கட்டுபடுத்த முடியாது


RAMAKRISHNAN NATESAN
அக் 05, 2024 19:00

போலீஸ் தரப்பில், உடற்கூராய்வு அறிக்கைக்காக, காத்திருக்கிறோம். அதுவரை கற்பழிப்பு என உறுதியாக சொல்ல முடியாது என்றனர் ...... ஆர் ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் சிதைத்து கொல்லப்பட்ட நிகழ்வில் போஸ்ட்மார்ட்டம், FIR ஆகியவற்றில் தில்லாலங்கடி செய்த போலீஸ் சொல்கிறது .....


சமீபத்திய செய்தி