உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் தொடரும் வன்முறை; சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் தொடரும் வன்முறை; சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லடாக்: மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கல்வியாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்.லடாக் தற்போது யூனியன் பிரதேசமாக உள்ளது. ஆனால், அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வேண்டும், மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் என்பவர் 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=raoevsd7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு மக்கள் சோனம் வாங்சுக் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முழு அடைப்பிலும் இறங்கினர். போராட்டத்தை தொடர்ந்து, வன்முறையும், கலவரமும் வெடிக்க இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் மற்றும் அதன் நீட்சியாக ஏற்பட்ட கலவரத்துக்கு சோனம் வாங்சுக்கின் அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டி, வெளிநாட்டு நிதி பெறும் பதிவை ரத்து செய்தது. ஆனால் வன்முறைக்கு தாம் பலியாக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். எப்போது தாம் கைது செய்யப்பட்டாலும் மகிழ்ச்சியே என்றும் கூறி இருந்தார்.இந் நிலையில் சோனம் வாங்சுக்கை இன்று (செப்.26) போலீசார் கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர்களை இன்று மதியம் 2.30 மணியளிவில் சந்திக்க உள்ளதாக அவர் அறிவித்து இருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, டில்லி சலோ என்ற போராட்டத்தின் போது 2024ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அப்போது அவருடன் போராட்டத்தில் இறங்கிய 120 பேரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

கூத்தாடி வாக்கியம்
செப் 27, 2025 17:39

இதைத்தான் அந்த ஊளை மூக்ககன் தெலுங்கானாவில் செய்தான் இப்போ எங்க கெடக்கான்னு தெரியல


MARUTHU PANDIAR
செப் 27, 2025 15:01

நம்ப உள்ளூர் சர்வாதிகாரியின் துடுப்புக்கு ஏன்னா துடிப்புங்கறேன். ரொம்ப சீ ஈ ஈ ...னியர் 200 பிரியாணி பொட்டலம் போல irukku.


Venugopal S
செப் 27, 2025 13:06

ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்து விட்டு சர்வாதிகாரத்தை நோக்கி நாடு போய்க் கொண்டிருக்கிறது!


indiyavai yeppothum nechikkum tamilan
செப் 27, 2025 00:30

இந்திய முழுவதும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் வின் கூட்டணி கட்சிகளின் நடவடிக்கையை மிக மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கேவலமான எண்ணத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் இவர்கள் கலவரத்தை தூண்டி விட வாய்ப்பு இருக்கிறது. இப்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.


MARUTHU PANDIAR
செப் 26, 2025 23:07

இது அமெரிக்க சீன மற்றும் இத்தாலி குடும்பத்தின் மாஸ்டர் ப்ளானின் ஒரு சிறு தொடக்கமாம். பிஹார் தேர்தலை மிகப் பெரிய அளவில் சீர் குலைக்கவும் ஓட்டு திருட்டு அது இதுன்னு சொல்லி பாஜவின் வெற்றியை தகர்க்கவும் மிகப் பெரிய சதித் திட்டம் ஏற்கனவே ரெடி பண்ணியாச்சாம். அங்கு தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் சதித் திட்டம் பல தவணைகளில் அரங்கேறுமாம். பிறகு சத்தீஸ்கர் வழியாக மற்ற இடங்களுக்கும் அராஜகத்தை பரப்ப திட்டமாம். சொல்கிறார்கள் மக்கள்.


MARUTHU PANDIAR
செப் 26, 2025 22:55

அமெரிக்காவும் ஏன் சீனாவும் தான் இங்குள்ள வேலை வெட்டி பொறுப்பு என்று எதுவுமே இல்லாத ஆனால் மக்களை ஏமாற்றி திரியும் பப்பு கும்பலுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதாவது ஒரு வெளி நாட்டில் வைத்து ஆலோசனை நடத்துமாம். எவ்வளவு கோடி டாலர் செலவானாலும் நாடு முழுதும் வன்முறை கொழுந்து விட்டு எரிய அனைத்து உதவியையும் செய்ய உறுதி அளிக்குமாம். எனவே நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த தேச துரோகிகளின் தலைவனது நடவடிக்கைகளை நிமிடத்துக்கு நிமிடம் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.


ராஜ்
செப் 26, 2025 21:07

2.7 லக்சம் உள்ள லாடகுக்கு மாநில அந்தஸ்து வேண்டுமாம் காமெடியா இருக்கு அவனை உள்ளே போட்டு குமுறுங்க அப்போ எல்லாம் சரி ஆகிடும்


தமிழ்வேள்
செப் 26, 2025 21:01

மொழிவாரி மாநிலப் பிரிவினையின் இன்னும் ஒரு கொடுமை.. மொழி மற்றும் இனக்குழு அடிப்படையில் உணர்வுகளை தூண்டி என்றும் மக்களை கொதி நிலையில் வைத்திருப்பது மொழிவாரி அரசியலின் பிரிவினை & பிளவு நோக்கம் ஆகும்.. மொழிவழி தீவிரவாதம் பிறந்தது தமிழகத்தில், திராவிஷத்தால். அதை அன்றே இரும்பு கரம் கொண்டு வேரோடுபிடுங்கி எறிந்து அழிக்காததன் விளைவு இன்று லடாக்கில் வேறு உருவத்தில் தலையெடுக்கிறது.. இனியாவது பாரத சர்க்கார் தேச பாதுகாப்பு முன்னுரிமை அடிப்படையில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பை முற்றிலும் கலைத்து விட்டு இரண்டுக்கு மேற்பட்ட மொழிசார் இனங்கள் ஒரு மாநிலத்தில் அமைவது போல பிராவின்ஸ் மாகாண முறையை கொண்டு வர வேண்டும்...


SUBBU,MADURAI
செப் 26, 2025 20:55

Leave everything else, just understand one key demand of Sonam Wangchuk. He is asking for the implementation of the 6th Schedule in Ladakh. What does it mean? If GoI wants to build a road on the LOC, theyll first have to seek permission from the local council. And if the council denies, even the Army wont be able to build it. Remember, the Leh–Ladakh route is directly connected to China. Now think, if the Army cant build roads and can’t reach the border smoothly, who will benefit the most? Not to forget, the population of Hindus in Leh-Laddakh is less than 9%.


NRajasekar
செப் 26, 2025 19:56

தன்னை முன்னிலை படுத்திகொண்டு அராஐகத்தை தூண்டிவிட்டு தனக்கே பதவி பணம் கொள்ளையடிப்பவனுக்கு சமூக ஆர்வலர் என்ற பெயர்


முக்கிய வீடியோ