உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரனை நாடு கடத்தும் நடவடிக்கை துவக்கம்

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரனை நாடு கடத்தும் நடவடிக்கை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோயை, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மும்பை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா, மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்ளிட்ட பிரபலங்கள் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு உள்ளது. இவனின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய். இவன் மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலி பாஸ்போர்ட் மூலம் கென்யா தப்பிச்சென்று தற்போது அமெரிக்காவில் தங்கி உள்ளது தெரியவந்துள்ளது. பாபா சித்திக் கொலையிலும் இவனுக்கு தொடர்பு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சல்மான்கான் வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேடப்படும் நபராக இவனை மும்பை போலீசார் அறிவித்து இருந்தனர். இவன் குறித்து தகவல் தருவோருக்கு சன்மானம் தரப்படும் என தேசிய பாதுகாப்பு முகமை எனப்படும் என்.ஐ.ஏ., அறிவித்து இருந்தது.இந்நிலையில் மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீசார் துவக்கி உள்ளனர். அவன் அமெரிக்காவில் உள்ளதை அந்நாட்டு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். நாடு கடத்துவதற்கான நடவடிக்கை குறித்து மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள போலீசார், அதற்கான ஆவணத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.அவனுக்கு எதிராகவும் 'ரெட் கார்னர்' நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kalyanaraman
நவ 02, 2024 21:50

வழக்கு+ விசாரணை+ சிறையில் விசாரணைக் கைதியாகவே பல வருடங்கள் இருந்து. . . இருந்து .... ஆயுளே முடிந்து விடும். நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் ஆமை வேகத்தில் வழக்கு நடத்தும்.


krishnan
நவ 02, 2024 20:58

இந்துக்களின் strong man ஆக இவரை ஆக்கலாம். இப்போ இந்துக்கள் வெறும் கையில் முழம் போட்டு கொண்டு இருக்கிறார்கள் . அமைதி மார்க்கம் குண்டு , தண்டவாளத்தில் சிலிண்டர் , என இருக்கிறது, இந்துக்களுக்கு பிஷ்ணோய் b practical.


narayanansagmailcom
நவ 02, 2024 20:09

உடனே இவன் கதையை முடிக்க வேண்டும்


ஷாலினி
நவ 02, 2024 16:24

இவன் அமெரிக்காவில் இருப்பதற்கு பதில் இந்திய சிறைகளில் இருக்கலாம்.


லிங்கம், கோவை
நவ 02, 2024 16:18

வட இந்தியர்கள் இவரை ஹிந்துக்களின் தலைவனாகவும்... இயற்கை பாதுகாவலராகவும் பார்த்து ஒரு ஹீரோவாக போற்றுகிறார்கள்.


Duruvesan
நவ 02, 2024 18:29

ஆமாம் விடியலை திராவிடர் தந்தையாக, கட்டுசை தமிழின தலைவன் போல நீ கொண்டாடுறீயே அப்படி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை