உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலணி வீசிய வழக்கறிஞர் நீக்கம்

காலணி வீசிய வழக்கறிஞர் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின், 71, உறுப்பினர் பதவியை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நேற்று அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, வழக்கு விசாரணைக்காக சமீபத்தில் கூடியது. அப்போது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், காலில் அணிந்திருந்த காலணியை திடீரென கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீசினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், காலணி வீசிய வழக்கறிஞரை கைது செய்தனர். தலைமை நீதிபதி விடுவிக்க சொன்னதால், விடுவித்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் நேற்று கூடியது. அப்போது, தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ராகேஷ் கிஷோர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அருண், சென்னை
அக் 10, 2025 19:15

செய்யலை செய்பவனைவிட ஏவியவன் குற்றவாளி


அப்பாவி
அக் 10, 2025 06:07

71 வயசாயிடிச்சு. இனிமே என்ன என்ன?


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2025 05:16

ஆனால் செருப்பை விட அதிக பலம் வாய்ந்த சொற்களை வீசிய காவாய் நீக்கம் செய்யப்படமாட்டார் அப்படித்தானே ?


ramesh
அக் 10, 2025 10:01

உங்க கட்சிக்காரருக்கு ஆதரவாக தீர்பளித்தால் நல்லவர் அப்படித்தானே .


Kasimani Baskaran
அக் 10, 2025 04:01

நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது. புத்த மதம் தழுவிய பின்னரும் தான் ஒரு தலித் என்று இந்து மதத்தை கேவலப்படுத்தியவரை என்ன செய்யப்போகிறீர்கள்?


புதிய வீடியோ