வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இங்கு பணம் வாங்கி கொண்டு கூவுபவர்கள் கருத்துக்கள் அதிகம் பதிவிட படுகின்றன என்கிற சந்தேகம் வருகிறது.
சட்டம் என்னவோ நல்ல சட்டம் தான், அதைப் பயன்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையே! அது தானே பிரச்சினையே!
அமித் சா சிறையில் இருக்கவில்லையா ? சிறைக்கு போக ஆசையா?
சிறையிலிருந்த இந்து மத காப்பிய கதாநாயகர்களின் மதம் நாட்டுக்கு தேவையா என்பதையும் மக்கள் முடிவு செய்வார்கள்
மக்கள் முடிவு செய்யட்டும்...
நாட்டு மக்களின் நலனுக்காக சிறை சென்றிருந்தால் அது பரவாயில்லை. ஆனால் ஊழல், குற்றங்கள் பல செய்து மக்களை சுரண்டி தின்று சிறை சென்றிருந்தால், அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது.
சரியில்லை. அதெப்படி சிறை சென்ற ஒரு குற்றவாளி நாட்டை, மாநிலத்தை ஆளமுடியும்?
பிரக்யா சிங்கிற்கு பதவி கொடுத்தபோது இனித்ததோ???
அந்த சன்யாசி ஜாமீனில் வந்து பின்பு தான் உறுப்பினர். Tharpodhu வழக்கும் தள்ளுபடி ஆகிவிட்டது. அவர் மந்திரியும் இல்லை. இந்த பாராளுமன்றத்திலேயே காஷ்மீரில் வென்ற சிறையில் உள்ள எம் பி பதவி ஏற்றுள்ளார். தற்போதைய சட்ட வடிவம் மந்திரியாக உள்ளவர்களுக்குதான்.
உங்க ஆளுங்களும் சிறை செல்லும் நாள் வரும்.
30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு என்பது பாஜக, எதிர்க்கட்சிகளின் மீதான பழிவாங்குதல் அல்லது அடக்குமுறை.. ஊழல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருப்பவர் குற்றவாளி அல்ல. அவர் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. தீர்ப்பு வரும்வரை பொறுமை காக்க தான் வேண்டும். நாளை குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி என்று தீர்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள் ? அவருக்கான அநீதிக்கு யார் பொறுப்பு ? ஒரு நிரபராதியை தண்டிப்பது தவறுதானே ? இந்து தர்மமே இதை ஏற்காதே ??
அரசியல் திருடர்கள் பல பேர் நிலைமை, பெண்கள் விஷயத்தில், கூலி கொலைகளில், பொருளாதார குற்றங்களில், மனிதாபிமானம் இல்லாத குற்றங்களில் முதன்மையாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டியது தேவை. MP, MLA கோர்ட் வழக்குகளுக்கு கால நிர்ணயம் நிர்ணயிப்பது அவசியம். இதை தவிர தன்னைத்தானே யோக்கியமான கட்சி என்று சொல்லி கொண்டு அரசியல் அமைப்பு புத்தகத்தை தூக்கி காமிப்போர், இதை ஆதரிப்பது தானே முறை?