உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகா கும்பமேளா: 144 ஆண்டுகளில் அரிய நிகழ்வு; பக்தர்கள் குவிகின்றனர்

மகா கும்பமேளா: 144 ஆண்டுகளில் அரிய நிகழ்வு; பக்தர்கள் குவிகின்றனர்

பிரயாக்ராஜ்: இன்று உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக துவங்குகிறது. வழக்கமாக கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. ஆனால், இன்று (ஜனவரி 13) நடக்க உள்ள கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த மகா கும்பமேளா காலத்தில் நான்கு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும். இதன் காரணமாக இந்நிகழ்வு மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.

45 கோடி பேர்

இன்று துவங்கி பிப்.26 வரை 45 நாட்கள் நடக்கும் மகா கும்பமேளாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இந்தியாவின் பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜய்ன், நாசிக் போன்ற நான்கு புனித இடங்களில் கும்பமேளா நடைபெறும். இந்தாண்டு உ.பி., மாநிலத்தின் பிரயாக்ராஜில் நடக்க உள்ளது.உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து பக்தர்களும், துறவிகளும் மஹா கும்பமேளா தினத்தில் கங்கையில் புனித நீராட உள்ளனர். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் என அழைக்கப்படும் திரிவேணி சங்கமத்தில் நீராட உள்ளனர். அவ்வாறு நீராடுவதால் இப்பிறவியின் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பல்வேறு புனித நதிகளில் நீராடல்

கும்பமேளா நிகழ்வின் போது இந்தியாவின் பல்வேறு புனித நதிகளில் பக்தர்கள் நீராடுவார்கள்.உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கங்ககை நதியிலும், ம.பி.,யின் உஜ்ஜயினில் சிப்ரா நதியிலும், மஹாராஷ்டிராவிலுள்ள நாசிக்கில் கோதாவரியிலும், உ.பியில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை நதியிலும் மக்கள் புனித நீராடுவார்கள்.

நான்கு வகையான கும்பமேளாக்கள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது கும்பமேளா என்றும், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது அர்த்த கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது பூர்ண கும்பமேளா மற்றும் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது மஹா கும்பமேளா என்று அழைக்கப்டுகிறது.

வெவ்வேறு தேதிகளில் நடக்க உள்ள ஸ்நானங்கள்

ஜனவரி 13 அன்று முதலாவதாக நடக்கும் ஸ்நானம் பவுச பூர்ணிமா ஸ்நானம், ஜனவரி 15ல் மகர சங்கராந்தி ஸ்நானம், ஜனவரி 29ல் மவுனி அமாவாசை ஸ்நானம், பிப்ரவரி 3ல் வசந்த பஞ்சமி ஸ்நானம், பிப்ரவரி 12ல் மாசி பூர்ணிமா ஸ்நானம் மற்றும் பிப்ரவரி 26ல் மஹா சிவராத்திரி ஸ்நானம் என்றும் பக்தர்களாலும் துறவிகளாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

கும்பமேளா தோன்றிய கதை

புராண கதையின் படி அமிர்தத்தை பெறும் முயற்சியில் பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை அசுரர்களிடமிருந்து கைப்பற்ற மஹா விஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார். அமிர்தத்தை தேவர்களிடம் சேர்க்க முயன்ற போது அமிர்தத்தின் பல துளிகள் பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜயின், நாசிக் போன்ற இடங்களில் சிதறி விழுந்தன. அதன் காரணமாக அந்த நான்கு இடங்களும் புனித ஸ்தலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் புனித நீராடுவதால் மோட்சம் கிடைக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.Gallery

பல்வேறு நிகழ்ச்சிகள்

கும்ப மேளா அன்று அகாராஸ் பாரம்பரிய ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். ஊர்வலத்தின் போது யானைகள், குதிரைகள், தேர்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இந்நிகழ்வின் போது நாக சாதுக்கள் கலந்து கொண்டு பல மத சடங்குகளை பின்பற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

karthik
ஜன 14, 2025 16:50

ஏன் சாமி எங்க நம்பிக்கை , எங்க வாழ்வியல் அது தவறு என்று சொல்ல மற்றும் அதை கேலி செய்ய உங்களுக்கு யாரு அந்த அதிகாரத்தை கொடுத்தது? பிடிக்கவில்லை என்றால் , உங்க வேலையை பாருங்க, குடும்பத்த கவனிங்க...தீய முக குண்டர்கள் மற்றும் கேடுகெட்ட ஈவேரா ஜென்மங்கள் எங்க மெக்கா மதீனா போறவங்ககிட்ட போய் இதே மாதிரி கருத்த சொல்லுங்க......சொல்லி தான் பாரேன்....ஒருத்தர் இருக்க மாடீங்க, கேடு கேட்ட ஜென்மங்க. ஒரு காலம் வரும் அப்போ மொத்த ட்ராவிடியா நம்பிக்கைகள் காணாமல் போகும், ஊழல் இல்லாத, எல்லோருக்கும் பொதுவான, எல்லோரையும் அரவணைத்து செல்லும் இளைஞர்கள் கையில் ஆட்சி இருக்கும்.


Oru Indiyan
ஜன 13, 2025 21:59

சென்னை மெரினாவில் ஒரு சில ஆயிரம் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்காமல் ஐந்து பேரை கொலை செய்த திராவிடிய அரசுக்கும் அவங்க ஜால்ராக்களுக்கும் இப்படிப்பட்ட நிர்வாகத்தை குறை சொல்லத்தான் தெரியும்


Chakkaravarthi Sk
ஜன 13, 2025 19:50

,பாவபுண்ணியம் என்பது நம் பிக்கை உள்ளவருக்கு தான்.அகில உலகத்திலும் இதில் எள்முனை அளவு கூட நம்பிக்கை இல்லாதவர் பல ஆயிரம் கோடி. நாம் நினைப்பது போல நதியில் நீராடி விட்டால் எல்லாம் சரியாகி விடாது. ஆகவே கவலைப்பட ஒன்றுமில்லை. சீச்சீ அந்த பழம் புளிக்கும், எனக்கு வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கலாமே


Svs Yaadum oore
ஜன 13, 2025 19:21

தமிழ்நாட்டில் , இங்கே ஆன்மீக குருக்கள் , கோவில் பூஜை செய்யும் பிராமணர்கள் , பூசாரிகள் ஜனங்களுக்கு , எந்த விதமான உண்மையான ஆன்மீக விளக்கங்கள் , சொல்லுவதில்லையாம் . . .இதற்கு காரணம் ப்ராம்மணர்களா?? ....ஊர் ஊராக சென்று எளிய தமிழில் மக்களுக்கு ஆன்மீகம் தமிழ் மொழி கற்று கொடுத்தது கிருபானந்த வாரியர் ஸ்வாமிகள் ....அப்பேற்பட்ட அவரை கேவலப்படுத்தி இந்த விடியல் திராவிடனுங்க அவருக்கு செய்த மரியாதை இந்த நாடே அறியும் ...இங்குள்ள பள்ளி படத்தில் அப்ரஹாமிய மத கருத்துகளை நுழைப்பது என்பது இங்குள்ள பிராமணர்கள் செய்ததா ??....பள்ளி பாடத்தில் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் நீக்கப்பட்டது ...சில மாதங்கள் முன்பு பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்யக்கூடாது என்று தடை போட்டது விடியல் அரசு ...இதற்கெல்லாம் இங்குள்ள சைவ மடங்கள் என்ன செய்தது ??...அந்த மடங்கள் பிராமணர்கள் கிடையாதே ....இப்படியே போனால் தமிழ் கலாச்சாரம் சீரழிந்து டாஸ்மாக் போதை ஹாப்பி ஸ்ட்ரீட் என்று நடு ரோட்டில் பெண்களை கேவலப்படுத்தும் சம்பவங்கள்தான் நடக்கும் ...


Sudha
ஜன 13, 2025 18:55

பஞ்ச மா பாதகத்தையும் செய்து விட்டு கும்பமேளாவில் பாவம் தீர்த்துக் கொள்ள நினைப்போரை பகவான் அழைத்து கொள்ளட்டும்


ஆரூர் ரங்
ஜன 13, 2025 21:58

சில்லறைக் காசு தசம பாகம் கொடுத்து சீட்டு வாங்கி விட்டால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்புவதை விமர்சிக்க மாட்டீர்கள்.


ravi
ஜன 13, 2025 17:43

மற்ற மதங்களில் பெரிய புருடாக்கள் உள்ளன. அதை கேட்க முடியுமா உங்களால். பெரிய நாசா விஞ்ஞானி பேச வந்துவிட்டார்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 16:45

மாடசாம்பிராணிகளுக்கு பாடம் எடுத்து தான் ஆக வேண்டும். ஆங்கிலம் தெரியுமா உனக்கு? NASA வின் அறிவிப்பு இணையத்தில் இருக்கிறது, பாரு : The last time all eight planets aligned was on December 28, 2022. In 2025, there will be three planetary alignments, including one where all the planets will be on the same side of the Sun. இதையும் பாருங்கள் :: January 18, 2025: Six planets will align: Mercury, Mars, Jupiter, Uranus, Neptune, and Saturn. February 28, 2025: All planets will be on the same side of the sun. August 29, 2025: Six planets will align: Mercury, Venus, Jupiter, Uranus, Neptune, and Saturn. 144வருடமாம், 4 கோள்கள் ஒரே நேர்கோட்டில் 12 வருஷத்துக்கு ஒரு முறை வருமாம். போங்க சார். அறிவியல் வளர்ந்து விட்டது. நீங்கள் 144 வருஷம் பின் தங்கி இருக்கிறீர்கள்.


veera
ஜன 13, 2025 18:02

அறிவிலி வைகுண்டம்...The Purna Kumbh Mela is held every 12 years at the four sacred sites, attracting millions of devotees and pilgrims. Maha Kumbh Mela is celebrated in Prayagraj marking the completion of 12 Kumbh Mela cycles, occurring once in 144 years.


veera
ஜன 13, 2025 18:02

The Purna Kumbh Mela is held every 12 years at the four sacred sites, attracting millions of devotees and pilgrims. Maha Kumbh Mela is celebrated in Prayagraj marking the completion of 12 Kumbh Mela cycles, occurring once in 144 years.


gopi
ஜன 13, 2025 18:07

keeping hindu name why you putting your nose hear....ask your parents and then put comments..


Sivagiri
ஜன 13, 2025 15:16

கும்பமேளா என்றால் என்ன , ? அதனால் ஏன் நதிகளில் நீராட வேண்டும் ? , அதிலும் கங்கை யமுனை சரஸ்வதி முக்கூடலில் நீராடுவது என்ன சிறப்பு ? . . எந்தெந்த கும்பமேளாக்களில் எந்தெந்த நதிகளில் நீராடுவது , அது ஏன் ? என்ற ஆன்மீக மற்றும் இயற்கை உண்மை விவரங்கள் .,. வடக்கே , பெரும்பாலான நீராடும் மக்களுக்கு , தெரிந்து உள்ளது , அங்கே ஆன்மீக குருக்கள் , மக்களுக்கு தெளிவாக விவரமாக , சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் . . . . ஆனால் , அதற்கு நேர்மாறாக தமிழ்நாட்டில் , இங்கே ஆன்மீக குருக்கள் , என்றால் கோவில் பூஜை செய்யும் பிராமணர்கள் , பூசாரிகள் , மட்டுமே . . . அவர்கள் ஜனங்களுக்கு , எந்த விதமான உண்மையான ஆன்மீக விளக்கங்கள் , சொல்லுவதில்லை . . . இவர்களை பொறுத்தவரை , எந்த திருவிழா , விசேஷ நாட்களாக இருந்தாலும் , வரிசையாக கோவிலுக்கு வர வேண்டும் , சாமியை பார்க்க வேண்டும் , அவர் தீபாராதனை காணிப்பிப்பார் , தொட்டு கும்பிட்டு விட்டு , காசை போட்டு விட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டும் , . . . அவ்வளவுதான் ஜனங்களுக்கு சொல்லி கொடுக்கிறார்கள் , இங்கே உள்ள ப்ராமணர்களுக்கே அவ்வளவுதான் தெரிகிறது , அதற்கு மேல் தெரிந்தாலும் அவர்கள் , எதையும் செய்வதில்லை , ஜனங்களுக்கும் சொல்லிக் கொடுப்பதில்லை , ஜனங்களுக்கு ஏன் தெரிய வேண்டும் , என்று போயி விடுகிறார்கள் . . அவ்வளவுதான் ஜனங்களுக்கும் தெரியும் , எதோ கர்மா வினை . . என்று மட்டும் ஜனங்களுக்கு , புரிந்து கொள்கிறது . . . அதை விட்டால் , கொஞ்சம் ராமாயணம் கொஞ்சம் மஹாபாரதம் கதைகள் , அதுவும் டீவியில் காண்பித்த கதைகள் மட்டுமே . . விட்டால் பெருமாள் அவதார கதைகளில் சில பிட்டுகளை மட்டும் அதாவது , விஷ்ணு மோஹினி அவதாரத்தில் அமுத கும்பத்தில் இருந்து கொஞ்சம் பூமியில் சிந்தி விட்டது , அதுதான் கும்ப மேளா , என்று பத்திரிக்கைகளில் போடுவார்கள் . . இதனால் எல்லாம் ஆன்மிகம் நிலைக்காது , திராவிஷ கும்பல் , கன்வெர்ட்டிங் கும்பல்தான் செழித்து வளரும் . . .


இறைவி
ஜன 13, 2025 17:28

சிவகிரி, இங்குள்ள சாஸ்திரிகளும் குருக்கள்களும் மக்களுக்கு இம்மாதிரி பெருமைகளை சொல்லக் கூடியவர்கள்தான். ஆனால் எத்தனை பேர் உட்கார்ந்து கேட்க விரும்புகிறீர்கள். பிறந்த நாள், புது வருடம் என்று ஏதாவது ஒரு நாள் கோவிலுக்கு வருவீர்கள். சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று நீங்களே தரிசன டிக்கட் வாங்கி பார்த்து விட்டு வந்து விடுவீர்கள். எவ்வளவு பேர் குருக்கள்களிடம் தலப்பெருமை பற்றியும், தர்ம வாழ்வு பற்றியும் கேட்டிருக்கிறீர்கள். முன்பு கிராமங்களில் அந்தணர்கள் நிறைய இருந்தார்கள். கோவில்களில் உற்சவ காலங்களில் இதிகாச புராண சொற்பொழிவுகள் நடக்கும். அப்போது இம்மாதிரி விஷயங்கள் எல்லாம் சொல்லப்படும். இன்று அக்ரகாரங்கள் இல்லை. அந்தணர்கள் இல்லை. எல்லோரையும் கேவலப் படுத்தி விரட்டியாகி விட்டது. நான்கு கோவில்களுக்கு ஒரு குருக்கள் மாதம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு மணி அடிக்கிறார். மக்கள் தட்டில் போடும் காசுதான் அவர்களுக்கு வாழ்வாதாரம். சொல்வது யாவர்க்கும் எளிது. வாழ்வின் மறு பக்கத்தை பாருங்கள். வட இந்தியாவில் இன்றும் வயதில் மூத்தோர்களை சந்தித்தால் காலை தொட்டு வணங்குவார்கள். அதுவும் பிராமணர்கள் என்றால் கண்டிப்பாக ஆசீர்வாதம் கேட்பார்கள். இங்கு பிராமணர்களை கேவலம் செய்து வைத்திருக்கிறோம். தர்ம சாஸ்திரம் என்று ஒரு நூல் உண்டு. அது முக்கியமாக அந்தணர்களும் மற்றவர்களும் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியை சொல்கிறது. தமிழிலும் ஆசாரக்கோவை என்று ஒரு நூல் உண்டு. வாங்கி படிக்கவும். அதைப் படித்தபின் உங்களுக்கே நீங்கள் வாழும் வாழ்வின் மீது வெறுப்பு வரும். நம் முன்னோர்கள் அப்படி ஒரு கட்டுப்பாடான வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள்.


தமிழ்வேள்
ஜன 13, 2025 19:31

ஆப்ரஹாமிய அடிமை தமிழகம் சாராயம் போதை சினிமாவில் மட்டுமே கிளுகிளுப்பு அடைந்தால் போது...மண்ணாகி மட்டையாகி எதற்கும் லாயக்கு அற்று விளங்காமல் போனால் தான் தமிழ் கலாச்சாரம் கோவில்கள் சிதைத்து அழிக்கப்பட்டு பின் ஆப்ரஹாமிய மதங்கள் நிலைத்து நிற்கும் என்ற எண்ணத்தால் திருட்டு திராவிட இயக்கம் அண்ணா துரை ராம் சாமி கருணாநிதி வகையறாக்கள் மூலம் வாட்டிகன் வகையறாக்களின் செயல்திட்டம் செயல்படுவதால், ஆன்மிக வாதிகள் அவமானம் செய்யப்பட்டு ஓட்டி விடப்பட்டு தமிழனுக்கு ஆன்மிகம் பற்றிய அறிவு மொண்ணை ஆகிப்போனது.. அதனால் இப்படி பட்ட கேள்விகள்..... இன்னும் சிறிது காலத்தில் தமிழகம் பண்பாடு இன்றி சிதறி விலங்காண்டி நிலைக்கு செல்வதை தடுப்பது கடினம்.. அந்த நிலைதான் காங்கிரஸ் திராவிடம் ஆப்ரஹாமிய தேச விரோதிகளின் குறிக்கோள்...


தமிழ்வேள்
ஜன 13, 2025 20:38

இங்கே ஆன்மீகர்கள் சொல்வதை யார் காது கொடுத்து கேட்கிறார்கள்? திராவிட உளறல்களை கேட்டு அதே போல் அர்த்தம் கெட்ட தனமாக விதண்டாவாதம் குதர்க்கம் நிறைந்து மதம் பண்பாடு வழிபாடு வாழ்க்கை முறைகளை கேவலப்படுத்தும் எள்ளி நகையாடும் விதமாகத்தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன..அப்புறம் யார் நிதானமாக யதார்த்தமான முறையில் விளக்கம் தருவார்கள்?.... திராவிட கழிசடை பண்பாட்டால் அழிந்த தமிழகம் இது....திருந்த வாய்ப்பு அதிகம் இல்லை


அசோகன்
ஜன 13, 2025 15:02

ஜூபிட்டர் சூரியனை ஒவ்வொரு முறை சுற்றி முடிக்கும் போது வருவது prayagara கும்பமேலா 12 வருடங்களுக்கு ஒருமுறை. 144 ஆண்டுக்கு ஒருமுறை 4 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருவது அதுவே இப்போது நடப்பது. இதெல்லாம் பல ஆயிரம் ஆயிரம் வருடங்களாக நடந்து வருகிறது ஹிந்து மதத்தில்...... கோல்களை இப்போ 14ஆம் நூற்றாண்டில் தான் கண்டு பிடித்தார்கள் வெளிநாட்டினர். இது எதுவும் தெரியாத கொத்தடிமை கூட்டம் வயிறுமுட்ட சாராயம் குடிச்சிட்டு நமக்கு பாடம் எடுக்க வந்துடுவானுங்க.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 16:43

மாடசாம்பிராணிகளுக்கு பாடம் எடுத்து தான் ஆக வேண்டும். ஆங்கிலம் தெரியுமா உனக்கு? NASA வின் அறிவிப்பு இணையத்தில் இருக்கிறது, பாரு : The last time all eight planets aligned was on December 28, 2022. In 2025, there will be three planetary alignments, including one where all the planets will be on the same side of the sun. 144வருடமாம், 4 கோள்கள் ஒரே நேர்கோட்டில் 12 வருஷத்துக்கு ஒரு முறை வருமாம். போங்க சார். அறிவியல் வளர்ந்து விட்டது. நீங்கள் 144 வருஷம் பின் தங்கி இருக்கிறீர்கள்.


vivek
ஜன 13, 2025 14:27

let india help canada


புதிய வீடியோ