உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; முன்னாள் எம்.பி., பிரக்யா தாக்கூர் விடுதலை

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; முன்னாள் எம்.பி., பிரக்யா தாக்கூர் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மாலேகானில் 2008ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேரையும் என்ஐஏ கோர்ட் விடுவித்தது.மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்., 29ல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jt25ky00&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர்,சுவாமி அம்ருதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.இந்த வழக்கு விசாரணை, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. மொத்தமுள்ள, 323 சாட்சிகளில், 130 பேரிடம், விசாரணை கடந்த ஏப்ரலில் முடிவடைந்து விட்டது. 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி இன்று (ஜூலை 31) தீர்ப்பை அறிவித்தார்.இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ''மாலேகானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை'' என நீதிபதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2025 19:12

நீதி வென்றது.


Rathna
ஜூலை 31, 2025 18:31

பாகிஸ்தானிய ஜிஹாதி ஆதரவு குற்றவாளிகளை காப்பாற்ற தனது வோட்டு வங்கியை காப்பாற்ற புனையப்பட்ட வழக்கு. அப்பாவிகளின், ராணுவ வீரர்களின் வாழ்க்கை 18 வருடங்கள் கேள்வி குறி ஆக்கப்பட்டது.


sribalajitraders
ஜூலை 31, 2025 16:46

பிஜேபி எழுதி குடுத்த தீர்ப்பை நீதிபதி வாசித்தார்


Anand
ஜூலை 31, 2025 17:14

சில தினங்களுக்கு முன் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்தபோது யார் எழுதி கொடுத்த தீர்ப்பை நீதிபதி வாசித்தார்? மூடிட்டு போவியா..


என்றும் இந்தியன்
ஜூலை 31, 2025 16:35

நடந்தது 2008 வழக்கின் தீர்ப்பு 2025ல். அறிவு என்பதே சுத்தமாக இல்லையா இந்த அநீதிபதிகளுக்கு. வழக்கு தீரப்பு இவ்வளவு நாளில் என்று சொல்ல வக்கில்லாத இவர்களெல்லாம் படித்த அறிவிலிகள். இதற்கு ஒரு உதாரணம் சொல்வேன். இந்த அநீதிபதிகள் இறந்த பிறகு மேல் உலகில் சென்று அவர்களுக்கு ஒரு வேலை அதாவது சட்டத்திருத்தம் என்று கொடுத்தால் "கர்ப்பிணிகள் பிள்ளை பெறும் காலம் 9 மாதத்திலிருந்து 25 வருடம்" என்று மாற்றப்படும். வழக்கு - உரையாடல் - தீர்வு மிக மிக அதிகப்படியாக 3 மாதம் என்று நிர்ணயிக்கப்படவேண்டும். இன்று வரை இந்தியாவின் அநீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.8 கோடி?????இதுக்கெல்லாம் விடிவு முடிவு என்றைக்காவது வருமா???


beindian
ஜூலை 31, 2025 16:19

பாபர் மசூதி இடிப்பு, மக்க மஸ்ஜித் குண்டு வெடிப்பு , மலேகான் குண்டு வெடிப்பு , எதிலும் யாருமே குற்றவாளி இல்லை, பயங்கரவாதிகளின் பாதுகாவலர்கள்


J.Isaac
ஜூலை 31, 2025 14:28

எத்தனை காலம் தான் ஆட முடியும் . இது ஒரு சக்கரம் .


Nagarajan D
ஜூலை 31, 2025 14:21

சரி நீதித்துறையே அந்த பெண்ணிற்கு இழைத்த அதிகாரிகள் என்ன தண்டனை கொடுத்தீர்கள்?


ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 13:37

வழக்குப் போட்ட போதும் முக்கிய விசாரணை நடந்த போதும் பெரும்பாலும் காங் ஆட்சிதான் நடந்தது. வாக்கு வங்கிக்காக உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்பாவிகள் மீது வழக்கு போட்டு சித்தரவதை செய்துள்ளனர். இதற்கு துணைபோன போலீஸ் கும்பலை தண்டிக்க வேண்டும்.


J.Isaac
ஜூலை 31, 2025 14:20

குண்டு வெடிப்பு நடந்ததா ?


Karthik Madeshwaran
ஜூலை 31, 2025 13:13

மொத்த இந்தியர்களுக்கும் தெரியும் யாரு குற்றவாளிகள் என்று... தீர்ப்பு எழுதியவருக்கும் தெரியும். இப்போதெல்லாம் தீர்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. வாங்கப்படுகின்றன. புத்திசாலிகளுக்கு புரியும்.


ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 13:55

குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்புன்னு மாற்றி கூறி ஊரை ஏமாற்றிய கூட்டத்திற்கு உண்மை தெரியும்.


J.Isaac
ஜூலை 31, 2025 14:24

அதிகமாக நீதிபதிகளின் சுயமே நீதியாகிறது


beindian
ஜூலை 31, 2025 13:11

இதென்ன பிரமாதம் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை