உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி

ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குல்சார் ஹவுஸில், ஒரு நகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தின் முதல் மாடிக்கு தீ பரவியது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் தீ மளமளவென பரவியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kwvkxp5q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொலைபேசியில் பேசி, அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நிவாரணம் அறிவிப்புஇது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

raja
மே 18, 2025 17:41

சமீப காலமாக நமது இந்தியாவில் ஆங்காங்கே தீ விபத்துக்கள் அதனால் பலி என்று செய்திகள் அடிக்கடி வருவதை பார்த்தால் இவைகள் சதி வேலைகளாக இருக்குமோ என்று சந்தேகம் வருவதை தவிர்க்க முடிய வில்லை ...


Krishnamurthy Venkatesan
மே 18, 2025 12:00

fire safety norms ஐ பின்பற்றாத வணிக வளாகங்கள், high raise buildings போன்றவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.


A P
மே 18, 2025 19:32

கட்டுப்பாடுகளை எந்த ஒரு தீய அரசியல் வியாதியும் கொண்டு வர மாட்டான். அப்படிக் கொண்டு வந்தாலும், அதில் புறங்கை நக்குவது போல, தனக்கு ஏதாவது மிஞ்சுமா என்று கணக்கு போட்டுத்தான் கொண்டு வருவான். நல்ல அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பது தண்ணியினால் மட்டை ஆகிற கெட்ட குடிமகன்களால் ஆகாது.


Krishnamurthy Venkatesan
மே 18, 2025 12:00

இனிமேலாவது fire safety norms ஐ பின்பற்றாத வணிக வளாகங்கள், high raise buildings போன்றவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். இதை முழுமையாக பின் பற்றாதவர்களின் லைசென்ஸை cancel செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எல்லா மாநிலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.


புதிய வீடியோ