உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்வி துறையில் முஸ்லிம் அமைப்புகள் தலையிடுவதால் அமைச்சர் எரிச்சல்

கல்வி துறையில் முஸ்லிம் அமைப்புகள் தலையிடுவதால் அமைச்சர் எரிச்சல்

திருவனந்தபுரம்: “கல்வி விவகாரத்தில் மத அமைப்புகள் தேவையில்லாமல் தலையிடக்கூடாது,” என, கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார். கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு நடப்பு கல்வி ஆண்டில், 220 கற்பித்தல் நாட்களுக்கு தேவையான நேரத்தை பெறுவதற்காக, மாதத்தில் 16 நாட்களுக்கு வெள்ளிக்கிழமை தவிர, காலை மற்றும் மதியத்தில் தலா 15 நிமிடங்கள் என, பள்ளி நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டித்து, மாநில கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டது.இதற்கு, கேரள முஸ்லிம்கள் ஆதரவு பெற்ற, 'சமஸ்தா கேரள ஜெம்- - இய்யத்துல் உலமா' என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.https://www.youtube.com/embed/spk00Cve9Kcஇந்த விவகாரம் தொடர்பாக, கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி நேற்று கூறியதாவது:நீதிமன்ற உத்தரவுப்படியே பள்ளி வேலை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. இதை எதிர்ப்பவர்கள், நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். தேர்வுகள் அல்லது பள்ளி நேரங்களை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒதுக்கி வைக்க முடியாது.கடந்த காலங்களிலும், இதுபோல பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அனைத்தையும் நாம் ஏற்றுக்கொண்டால், பள்ளிகளை நடத்துவது கடினமாகி விடும். கல்வித் துறையில் மத அமைப்புகள் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. அதை எந்த காரணத்திற்காகவும் ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.கேரள பள்ளிகளில், மாணவ - மாணவியரின் மன அழுத்தத்தை போக்கவும், உடல் நலத்தை பேணவும், 'ஜூம்பா' எனப்படும், நடனம் வாயிலாக செய்யப்படும் உடற்பயிற்சியை மாநில கல்வித் துறை சமீபத்தில் துவங்கியது. இதற்கும் முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், அதை கேரள கல்வித் துறை திட்டவட்டமாக நிராகரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

HoneyBee
ஜூலை 11, 2025 11:34

இப்படி தைரியமாக பேசுங்கள் அமைச்சரே... எங்க மாநிலத்தில் தான் ஓட்டுக்காக மைனாரிட்டி சப்போர்ட் செய்து படிப்பறிவு இல்லாதவர்கள் ஆக்கி ₹200 குவார்ட்டர் பிரியாணி கூட்டமாக வைத்துள்ளார்கள்...


Malarvizhi
ஜூலை 11, 2025 10:44

மன அழுத்தத்தை போக்க, உடல் நெளிவு சுளிவுடன் இருக்க, யோகாசனம் செய்வதுதான் சிறந்த முறை. ஆனால், அதை சொல்லிக் கொடுத்தால், நல்ல பெயர் பிரதமர் மோடிக்கு போய்விடுமோ என்ற கவலை போலிருக்கிறது.


Muralidharan raghavan
ஜூலை 11, 2025 11:55

கேரளாவை பொறுத்தவரையில் சிறுபான்மை மதத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களை மீறி எந்த அரசும் செயல்பட முடியாது.


புதிய வீடியோ