வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன இருந்தாலும் பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை / அடியாள். பாக்கிற்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தான் எடுக்கும். நமது தாக்குதலில் அமெரிக்காவும் எஃப் 16 மறைமுகமாக அடிவாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஸ்ரீநகரில் பாதாமி பாக் கன்டோன்மென்ட் ராணுவ முகாமில் ஆய்வு செய்தார்.அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது: உலகளவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை சமீபத்தில் நம் ராணுவம் நிகழ்த்தி காட்டியது.எத்தனை பேர் பலியாகினர் என்பதை எண்ணும் பொறுப்பை எதிரிகளுக்கு கொடுத்துவிட்டோம்.நம்முடைய நோக்கம் என்ன, அதை எவ்வளவு துல்லியமாக தாக்குதல் நடத்தினோம் என்பதை இந்த ராணுவ நடவடிக்கை வாயிலாக உலகுக்கு காட்டியுள்ளோம்.அணு ஆயுத மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.அதே நேரத்தில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று பொறுப்பு இல்லாமல் பாகிஸ்தான் கூறியதையும் இந்த உலகம் பார்த்துள்ளது.இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இவ்வாறு பொறுப்பில்லாமல், முரட்டுத்தனமாக செயல்படும் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்பதே அந்தக் கேள்வி. இது தொடர்பாக, ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணு சக்தி முகமை ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவ வீரர்களிடையே பேசியபோது, ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது:நம் அண்டை நாடான பாகிஸ்தானை பற்றி என்ன சொல்வது. பிச்சை எடுத்து, பிச்சை எடுத்து, தற்போது பாகிஸ்தான் எங்கு நிற்கிறதோ, அங்கிருந்து பிச்சை எடுப்பவர்கள் வரிசை துவங்கும் நிலை உருவாகியுள்ளது.சமீபத்தில், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் பணம் வாங்கியுள்ளது. அதே நேரத்தில் உலகெங்கும் உள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, ஐ.எம்.எப்., அமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பணம் கொடுக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
என்ன இருந்தாலும் பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை / அடியாள். பாக்கிற்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தான் எடுக்கும். நமது தாக்குதலில் அமெரிக்காவும் எஃப் 16 மறைமுகமாக அடிவாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.