உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகம், தெலுங்கானா மதுபான ஆலைகளில் இருந்து பணம்; பிரசாந்த் கிஷோர் மீது பகீர் புகார்

தமிழகம், தெலுங்கானா மதுபான ஆலைகளில் இருந்து பணம்; பிரசாந்த் கிஷோர் மீது பகீர் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''தமிழகம், தெலுங்கானாவில் உள்ள மதுபான ஆலையில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு பணம் வருகிறது'' என பாஜ எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டினார்.இது குறித்து பீஹார் பாஜ எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பாஜவின் ஓட்டுக்களை குறைக்க, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் உடன் இணைந்து சதி வேலை செய்கிறார். தமிழகம், தெலுங்கானாவில் உள்ள மதுபான ஆலையில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு பணம் வருகிறது. முதல்நாளில் இருந்தே பிரசாந்த் கிஷோர் மக்களை ஏமாற்றி வருகிறார். தனது கட்சி உருவான பின்னணி குறித்து அவர் பொய் சொல்கிறார். அவர் ஆகஸ்ட் 2022ம் ஆண்டு டில்லியில் ஜன் சுராஜ் கட்சியை உருவாக்கினார். ஆனால் அக்டோபர் மாதம் 2024ம் ஆண்டு பீஹாரில் கட்சி தொடங்கப்பட்டதாக பொய் சொல்கிறார். பொய்கள், ஏமாற்றுதல் மற்றும் மோசடி மூலம் தனது கட்சியைத் தொடங்கிய அவர் எவ்வளவு பெரிய மோசடி செய்பவர் என்று சிந்திக்க வேண்டும். ஜன் சுராஜ் கட்சியின் சட்டவிரோத நிதி மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடத்தினால் சிக்கி கொள்வார்கள். அவர் தப்பிப்பதற்கு, பிகே உதய் சிங் என்ற பப்பு சிங் மற்றும் மனோஜ் பாரதியை கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களாக ஆக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாந்த் கிஷோர் பதிலடி

இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''அவர் விளையாடுகிறார். 4 நாட்களில் வழிக்கு வந்துவிடுவார். என்னை ஏழு ஜென்மத்திலும் சிறைக்கு அனுப்ப முடியாது. சஞ்சய் ஜெய்ஸ்வால் நடத்தும் பெட்ரோல் பங்கில் மாநகராட்சி வாகனங்கள் பேரில் போலி பில் தயாரிக்கப்படுவது மக்களுக்கு தெரியும். அனைத்து பெட்ரோல் பம்ப் உரிமையாளர்களும் இந்த மோசடி குறித்து புகார் அளித்திருந்தனர். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

SUBBU,MADURAI
செப் 14, 2025 17:12

இந்த பிராந்த் கிஷோர் அமெரிக்க CIA மற்றும் Deep state ஜார்ஜ் சோரோஸின் கைக்கூலி... இவருக்கு முன்பு டில்லியின் மாஜி முதல்வர் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால்தான் Deep state ன் கைக்கூலியாக இருந்தவர்.இவர் நல்லவன் வேடமிட்டு இந்தியாவிற்கு எதிராக பல சதி வேலைகளில் ஈடுபட்டு கடைசியில் மக்களால் புரிந்து கொள்ளப் பட்டு தோற்கடிக்கப் பட்டார். அமெரிக்காவின் CIA, Deep state, மற்றும் ஜாரஜ் சோரஸின் ஓபன் சொசைட்டி இவர்களின் முக்கிய நோக்கம் இவர்களால் உருவாக்கப் பட்ட நபர் இந்தியாவில் எதுவும் சாதிக்க முடியவில்லை என்றால் அந்த நபரை அவர்கள் அப்படியே கை கழுவி ஓரம் கட்டி விடுவார்கள் அதனால்தான் இந்த கெஜ்ரிவால் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்.இப்போதைய அவர்களின் அடுத்த இலக்கு இந்த பிரசாந்த் கிஷோர்தான் இவர் இந்த நான்கு மாதத்தில் மூன்று தடவை அமெரிக்கா சென்று வந்து விட்டார் எனக்கே தெரிந்த இந்த விஷயமெல்லாம் நம் இந்திய உளவுத்துறைக்கு எப்படி தெரியாமல் போனது என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம் அதற்கு விடை விரைவில் கிடைக்கும்


Sivaram
செப் 14, 2025 16:55

சைதாப்பேட்டை தலைவர் முன்னாள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அவர்களே எப்படி பாருங்கள் இவர்கள் அபாண்டமாக குற்றம் கூறுகிறார்கள் தமிழ் குடிமகன்களுக்காக நீங்கள் எப்படி ஓய்வில்லாமல் உழைக்கிறீர்கள்


Kasimani Baskaran
செப் 14, 2025 15:37

தீம்க்காவுக்கே பொய் சொல்ல யோசனை சொன்ன மேதை... அடிமை உடன்பிறப்புக்கள் முட்டுக்கொடுப்பதைப்பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.


திகழ்ஓவியன்
செப் 14, 2025 19:05

2014 இல் முதன் முதலில் 15 L என்று பொய்யை சொல்லி கொடுத்தவர் இவர் தான்


Vasan
செப் 14, 2025 15:22

Retain the 40% votes. Split the remaining 60% votes into multiple small, small pieces. Thats the Mantra of DMK.


pakalavan
செப் 14, 2025 14:33

பாஜக காரனுங்க இப்படிதான் பொய்யா பேசுவானுங்க


நடராஜன்,சத்திரக்குடி
செப் 14, 2025 16:45

அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு உன் அறிவுக்கு மீறிய எந்த கருத்தையும் பதிவிடாதே!


venugopal s
செப் 14, 2025 13:31

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் சொல்வதையே பாஜகவினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே, அது தான் உங்கள் அடியாட்கள் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை எல்லோரும் இருக்கிறிர்களே!


rajasekaran
செப் 14, 2025 19:15

ஆதாரம் இல்லாமல் தான் நீங்கள் ஊழல் செய்கிறீர்க்ளே. இது பேர் தான் scientific ஊழல். எந்த ED , சிபிஐ வந்தாலும் உங்களை புடிக்க முடியாத அளவுக்கு ஊழல் செய்கிறீர்கள். ரஜினி சொன்னது போல் உங்களை ஆண்டவன் நினைத்தாலும் மாற்ற முடியாது.


venugopal s
செப் 14, 2025 23:31

அதேபோல் நாங்கள் பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போது குஜராத் மதக் கலவரத்தில் மூவாயிரம் சிறுபான்மை இனத்தவர்களைக் கொன்றார் என்று ஆதாரம் இல்லாமல் குற்றம் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 12:58

டீம்காவுக்கு வேலை பார்த்தவன் வேற எப்படி இருப்பான் >>>>


M Ramachandran
செப் 14, 2025 12:42

திருட்டு திராவிடணுவுக்கு வரிந்து கட்டி வேலையை செய்த போதே தெரிந்த ரகசியத்தை அமுல் படுத்த தீர்மானித்து விட்டீர்கள் யென்பது தெரிகிறது.


திகழ்ஓவியன்
செப் 14, 2025 11:27

இப்படி தான் இங்கு ஒருத்தன் தோலை உரித்து விட்டார்கள்


சந்திரன்,போத்தனூர்
செப் 14, 2025 16:50

யுனெஸ்கோ அவார்டு வாங்கிய ஈ.வெ. ராமசாமியின் தோலை ஏற்கனவே உரித்து விட்டார்களே ஒஹோ சமீபத்தில் முதல்வர் ராமசாமி படத்தை மேஜையில் வைத்து திறந்து வைத்து அவமானப் பட்டாரே அதை சொல்றியா?


MARUTHU PANDIAR
செப் 14, 2025 10:40

நிச்சயம் மறுக்க முடியாது. ஊழல் சக்திகளுக்கு வேலை செய்தவன். இப்போது கட்சி தலைவன். கட்சி நடத்துறதுன்னா சும்மாவா? அடுக்கு பணம் எங்கிருந்து வருமாம்? விசாரித்து உள்ளே தள்ளவேண்டும். தேசத்துரோகிகள் வெளியே இருந்தால் நாட்டுக்கு ஆபத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை