உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டுகட்டாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி வீட்டில் போலீஸ் சோதனை

கட்டுகட்டாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி வீட்டில் போலீஸ் சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ் : டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய சம்பவத்தில் இன்று அவரது வீட்டில் போலீஸ்படை சோதனை நடத்தியது. டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. டில்லியின் துக்ளக் சாலையில், இவர் வசிக்கும் அரசு பங்களாவில், கடந்த 14-ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது, வீட்டின் ஓர் அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது.நாடு முழுதும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டது.மேலும் இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.இந்நிலையில் யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது குறித்து மூத்த நீதிபதி உபாத்யாயா தலைமையிலான 3 நீதிபதிகள அடங்கிய குழு விசரணை நடத்தி அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நீதிபதிகள் குழு உத்தரவின் பேரில் இன்று டில்லி போலீஸ் படை டில்லி துக்ளக் சாலையில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தியது. சோதனை முடிந்து வெளியே வந்த போலீசாரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அவர்களிடம் பேட்டி அளிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 27, 2025 15:16

வக்கீல்களுக்கு படித்து நீதி மன்றத்தில் வாழ்வாதாரம் என்ற பெயரில் வாதாடும் வக்கீல்கள் நீதிபதிகள் ஆனால் நியாயம் எங்கிருந்து கிடைக்கும். நீதிபதியான வக்கீல் வீட்டில் பணம் தான் நிறைந்து கிடக்கும். இந்த நீதிபதி தீர்ப்பு எழுதிய அனைத்து வழக்குகளையும் மீண்டும் தூசி தட்டி வெளியில் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் எந்த நீதிபதிக்கும் செக் ரிட்டர்ன் வழக்குகளை விசாரிக்க தெரியாது. செக் ரிட்டர்ன் வழக்குகளை வைத்து சந்தோஷமாக வாழ்பவர்கள் வக்கீல் தான்.


Varuvel Devadas
மார் 27, 2025 11:14

In my view, based on my experience in our country, he will be set free after some time from all the ges levelled against him by stating that the ges are not proved, and thereby he is found innocent.


Appa V
மார் 26, 2025 21:18

ரிசர்வ் வங்கி ED வருமான வரி மூணு அமைப்புகளுடன் நிதி அமைச்சர் பேசி அறிக்கை விட வேண்டும்


கண்ணன்,மேலூர்
மார் 26, 2025 20:10

குதிரை ஓடிவிட்ட பின் லாயத்தை பூட்டி என்ன பிரயோஜனம்?


Ramesh Sargam
மார் 26, 2025 19:31

நீதிபதிகளே முறைகேடாக பணம் ஈட்டினால், நீதி எங்கே நிலைநாட்டப்படும்?


Raghavan
மார் 26, 2025 20:12

ஒரு பழமொழி சொல்லுவார்கள் : வக்கீலை வாடகைக்கு எடுப்பதைவிட நீதிபதியை விலைக்குவாங்குவதே மேல்" இப்போது நாடு அப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. எ கா : அணில் அமைச்சர் வழக்கு , தங்க முடி அமைச்சர் வழக்கு, 2 ஜி வழக்கு போன்றவைகள். நீதிபதிகள் தவறு செய்தால் நீதிபதிகளே விசாரணை . இது எப்படி இருக்கு ?


Appa V
மார் 26, 2025 23:00

வழக்கில் ஒரு தரப்பு நீதிபதியை சந்தித்து ஐந்து லட்சம் தந்தது ..மறுநாள் அடுத்த தரப்பு நீதிபதியை சந்தித்து பத்து லட்சம் தந்து தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள கேட்டுக்கொண்டது .. கோர்ட்டில் நீதிபதி ரெண்டாவது பார்ட்டியை அழைத்து ஐந்து லட்ச ரூபாயை திருப்பி கொடுத்து தான் ரெண்டு பேருக்குமே நியாயமாக நடந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார் என்று சொல்வதுண்டு


புதிய வீடியோ