உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்கள் ஆடை குறித்து விமர்சனம் மீண்டும் சர்ச்சையில் ம.பி., அமைச்சர்

பெண்கள் ஆடை குறித்து விமர்சனம் மீண்டும் சர்ச்சையில் ம.பி., அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்:பாஜ., மூத்த தலைவரும், மத்திய பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியா, பெண்கள் உடைகள் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ம.பி.,யில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

சர்ச்சை

இம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருப்பவர் கைலாஷ் விஜய்வர்கியா. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் சிக்குவது வழக்கம். கடந்த 2022ல், இந்துாரில் நடந்த ஹனுமன் ஜெயந்தி நிகழ்வில், 'பெண்களை தெய்வ வடிவமாக பார்க்கிறோம். ஆனால் இப்போதுஉள்ள பெண்கள் அப்படி தெரிவதில்லை. அவர்கள் சூர்ப்பணகை போல இருக்கின்றனர். 'கடவுள் உங்களுக்கு அழகான உடலைக் கொடுத்திருக்கிறார், குறைந்தபட்சம் ஒழுக்கமான ஆடைகளை அணியுங்கள்' எனப் பேசினார். இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், மீண்டும் பெண்கள் ஆடை குறித்து கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

தெய்வத்தின் வடிவம்

இந்துாரில் நடந்த பொது நிகழ்ச்சியில் கைலாஷ் விஜய்வர்கியா பேசியதாவது:குறைவாகப் பேசும் தலைவர் நல்லவர் என்பது போல, 'குறைவான ஆடைகளை அணியும் பெண் மிகவும் அழகாகக் கருதப்படுகிறார்' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், நான் அதை ஏற்கவில்லை. ஒரு பெண் தெய்வத்தின் வடிவம் என நம்புகிறேன். மெல்லிய ஆடைகளை அணியும் பெண்களை கவர்ச்சிகரமானவர்களாக நான் பார்க்கவில்லை. சில நேரங்களில் பெண்கள் என்னுடன், 'செல்பி' எடுக்க வருவர். நான் அவர்களிடம், அடுத்த முறை சரியான உடையில் வாருங்கள், பின் புகைப்படம் எடுப்போம் என்று சொல்லி அனுப்புவேன். இவ்வாறு அவர் பேசினார்.இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 06, 2025 14:08

கவனிக்கவும் ....... இவர் பொதுவாக அனைத்துப் பெண்களையும் சொல்லவில்லை ..... அப்படிச் சொல்லியிருந்தால் மட்டுமே பேச்சு ஆட்சேபத்துக்குரியது ..... திமுகவின் அடிமைகள் இவர் பாஜக ஆளும் மாநிலத்தின் அமைச்சர் என்பதை வைத்துக் கருத்திடுகிறார்கள் .... தமிழகத்தில் பெண்கள் வீட்டில் மட்டுமல்ல .... தெருமுனை வரை கூட நைட்டி அணிந்து வருகிறார்கள் ..... இதை எப்படிப்பார்க்கிறீர்கள் ??


Sivak
ஜூன் 06, 2025 13:10

ஒழுக்கமாக உடை அணிய சொன்னா அது சர்ச்சையா ?? இன்றைய பெண்கள் ஒழுக்கமற்று மதிக்க தக்க வகையில் இல்லவதவர்களாக உள்ளனர்.


தமிழன்
ஜூன் 06, 2025 12:28

இது போன்ற அமைச்சர் தமிழ் நாட்டில் இல்லை..


ரவி
ஜூன் 06, 2025 11:13

சரியாக சொன்னார்


Chandru
ஜூன் 06, 2025 09:17

We are respected by the western countries only for our culture and it s a pity that the so called modern thinking and dress culture among the youth has only ended up in chaos. It is said that THE END OF EDUCATION IS CHARACTER and this has taken a beating totally.


முருகன்
ஜூன் 06, 2025 09:12

தவறு


Padmasridharan
ஜூன் 06, 2025 08:16

நல்லது சொன்னா யார் கேட்கறாங்க. முழுவதுமாக மூடிய பார்ஸலுக்கும், கிழிந்துபோன பார்ஸலுக்கும் மதிப்பு வேற வேற அய்யா. இதே உடையில் கோவில்களுக்குள்ளே தரிசனமும் செய்ய வந்துவிடுகின்றனர். ஆண்களும் கூட, கால் டிரௌசர்ஸ் போட்டுகொண்டு. ஆள் பாதி ஆடை பாதி என்னது போய் ஆள் கால் உடம்பு முக்கால் என்றாக்கி விட்டுருக்கிறார்கள்.


HoneyBee
ஜூன் 06, 2025 08:06

அவர் கருத்தில் என்ன தவறு உள்ளது. அரைகுறை உடைகளுடன் வெளிவந்த பெண்கள் தான் இதற்கு வெட்கப்பட வேண்டும். உடல் அழகை ஊரு மொத்தம் காட்ட கூடாது. இது நம் கலாச்சாரத்தில் இல்லை


Thravisham
ஜூன் 06, 2025 07:57

பெண்களை பார்த்தால் மரியாதை தரத் தோன்றும் உடைகளை அணிய வேண்டும். பெரும்பாலான இளைஞர்கள் தாடியும் கொண்டைகளுடனும் அலைகிறார்களே அது மிகவும் அசிங்கமாக உள்ளதே அவர்களை பற்றி பெண் அமைப்பினர் ஏன் கேள்வி எழுப்புவதில்லை?


N Sasikumar Yadhav
ஜூன் 06, 2025 07:57

அமைச்சர் மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன கருத்து ...களுக்கு தவறாக தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை