உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒலிபெருக்கிகள் இல்லா நகரமானது மும்பை

ஒலிபெருக்கிகள் இல்லா நகரமானது மும்பை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் உள்ள வழிபாட்டு தலங்களில் இருந்த ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதை அடுத்து ஒலிபெருக்கிகள் இல்லாத நகரமாக மாறியுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியான குர்லாவை சேர்ந்த குடியிருப்போர் சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள மசூதிகளில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுவதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஜனவரியில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒலி மாசு விதியை மீறும் ஒலிபெருக்கிகளை அகற்ற போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள மத வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டிருந்த, 1,500 ஒலிபெருக்கிகளை போலீசார் அகற்றினர். இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பர்தி நேற்று கூறியதாவது: முதல்வர் தேவேந்திர பட்னவிசின் அறிவுறுத்தல் படி முறையான மற்றும் தன்னிச்சையற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒலி பெருக்கிகள் இல்லாத நகரமாக மும்பை மாறியுள்ளது. எந்த மத கட்டமைப்பையும் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒலி பெருக்கிகளை அகற்றும் முன் சமுதாய மற்றும் மதத்தலைவர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் சந்தித்து பேசினோம். நிரந்தர ஒலிபெருக்கிகள் மீதான தடை தான் இப்போது அமலில் உள்ளது. எனினும் மத விழாக்களின் போது ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்த தற்காலிக அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ram pollachi
ஜூன் 29, 2025 21:43

சாலையோர, தள்ளு வண்டி வியாபாரிகள் பதிவு செய்யப்பட்ட ஒலிகளை சிறிய ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அலற விட்டு பொதுமக்களுக்கு தொல்லை தருகிறார்கள்....


kr
ஜூன் 29, 2025 18:06

There is a Supreme Court judgement on this. Still not clear why this has to be done separately in every state via an appeal in respective high courts. So, is the model government in TN just waiting for a case to show up in Madras High Court, and wait for court to issue directives in this regard. Why wait for orders from high court. Is it the risk of loosing votes in upcoming assembly elections


Suppan
ஜூன் 29, 2025 13:32

பல வருடங்களாகவே கூறப்பட்டுவந்த ஆசான் ஆப் இப்பொழுது உபயோகத்துக்கு வந்துள்ளது. நமாஸ் செய்வோருக்கு அந்தந்த நேரங்களில் நினைவூட்டு செய்யும் இந்த ஆப்.


Ramesh Sargam
ஜூன் 29, 2025 13:20

இதுபோன்று பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலமாக அரசியல் மாநாடு நடத்துபவர்களை கண்டிக்கவேண்டும். தடை செய்யவேண்டும்.


V RAMASWAMY
ஜூன் 29, 2025 09:54

This verdict should be implemented in all places all over the Nation.


RK
ஜூன் 29, 2025 09:50

எங்கள் வீட்டின் பக்கத்தில் மிக அருகில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைத்து அதிகமான சப்தத்துடன் மார்கத்தினர் அலறுவது வீட்டில் சிறு குழந்தைக்கும் வயதான நோய்யுற்றவருக்கும் அதிகமான பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றங்கள் ஓலி மாசுபாடு தமிழ்நாட்டிலும் தடை செய்தால் புண்ணியமாக இருக்கும்.


Kasimani Baskaran
ஜூன் 29, 2025 08:34

ஒலிபெருக்கிகள் ஒரு பக்கம் என்றாலும் சாலையோரத்தில் வசிப்போர் தாங்கொணா துயரம் அனுபவிக்கிறார்கள். சாலையில் அராஜகம் செய்வோர் சிங்கப்பூரில் கூட முன்னர் அதிகம் உண்டு - அரசின் கெடுபிடியால் நிறைய பேர் திருந்திவிட்டார்கள். அதே போல அங்கும் ஓட்டுனர்களுக்கு நற்பண்புகளை கற்பிக்க வேண்டும்.


MUTHU
ஜூன் 29, 2025 08:26

அதோடு சத்தமாய் கண்றாவி பாட்டு போட்டுக்கிட்டு போற பேருந்துகளை தடை செய்யணும்


Kalyanaraman
ஜூன் 29, 2025 08:00

அனைத்து நகரங்களிலும் இதை அமல்படுத்த வேண்டும். ஒலிபெருக்கி கண்டுபிடிப்பதற்கு முன், மின்சாரம் வருவதற்கு முன் சமய வழிபாடு நடைபெற்றதுபோலவே பின்பற்றினால் அனைவருக்கும் நலம்.


A. JOSEDAVID
ஜூன் 29, 2025 07:59

It should be follow to all religion places not only in Mumbai. then it is successful . still some of the places too noisy . beside to my home weekly got loud songs it is disturbing my children studies.


முக்கிய வீடியோ