உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்கள் மட்டுமே நடத்தும் ஆட்டிறைச்சி கடைகள் அறிமுகம்

ஹிந்துக்கள் மட்டுமே நடத்தும் ஆட்டிறைச்சி கடைகள் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : குறிப்பிட்ட விலங்கை இறைச்சிக்காக வெட்டும் போது, இஸ்லாமிய சட்டம் முறைப்படி கடைபிடிக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய அளிக்கும் சான்று, 'ஹலால்' என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், ஹலால் முறைக்கு மாற்றாக, 'மல்ஹார்' சான்று வழங்கும் நடைமுறையை மஹாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஹலால் இறைச்சிக்கு கடைபிடிக்கப்படும் அதே விதிகள் தான், 'மல்ஹார்' சான்றுக்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், ஹிந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு மட்டுமே இந்த சான்று வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த மஹாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானா நேற்று கூறியதாவது: மல்ஹார் சான்று பெற்ற ஆட்டிறைச்சி கடைகள், 100 சதவீதம் ஹிந்துக்களால் நடத்தப்படும். அங்கு பணியாற்றுபவர்களும் ஹிந்துக்களாகவே இருப்பர். இது ஹிந்து இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். எனவே, மல்ஹார் சான்று பெற்ற கடைகளில் மட்டுமே ஆட்டிறைச்சி வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 133 )

krishnan
ஏப் 04, 2025 12:41

Now the reusable oil for DEEPAM AND OHTER BRAND LIKE SAMY ALL ARE IN THE NAME OF MUSILEEM AND HINDUS NAME BRAND SO ALL INCOMMING GOING TO MUSILM AND hINDUS ARE IN THE ROAD. WAQ BOARD LIKE TOMORROW THEY WILL INSIS TO CHANGE YOUR NAME FROM HINDU TO MUSILEEM THE TAMIL NADU GOVT ALSO AGREE


Sampath Kumar
ஏப் 03, 2025 17:05

இதுக்கு பேரு தாண் தா வெறி என்பது அவங்க செய்தல் செய்து விட்டுப்போகட்டும் ஈ ஏன் கோப்பி அடிக்கிற ? உன்னக்கு சுய புத்தி இல்லையா காலம் காலமாக இறைச்சி கடை நடத்தும் நம்மவர்கள் அவர்களின் குல தெய்வம் பேரில் தான் ஆடி வெட்டுவார்கள் அதற்கு இறைச்சி என்று ஏன் பேரு வைத்தார்கள் இறைவனின் ஏச்சி மருவி இறைச்சி என்றானது இது வரலாறு


Vasudeva
ஏப் 03, 2025 10:04

இஸ்லாமிய மக்களை தனிமை படுத்துவது போல சட்டங்கள் கூடாது, நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எல்லோரும் சகிப்பித்தன்மையுடன் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ பழகனும், அரசாங்கமே இந்த மாதிரி நடைமுறைகளை ஊக்குவிக்கக்கூடாது.


Gnana Subramani
மார் 27, 2025 16:12

இந்துக்களிடம் இருந்து மட்டும் பெட்ரோல் வாங்க உத்தரவு போட வேண்டும்


Gnana Subramani
மார் 27, 2025 16:11

இந்துக்கள் மட்டும் தயாரிக்கும் பிரியாணி கடை கூட திறக்கலாம்


MUTHU
மார் 22, 2025 17:09

jhatka food என்றொரு முறை பஞ்சாபியர்கள் புழக்கத்தில் உள்ளது. நம்மூரில் உயிர் பலியிடும் அய்யனார், அம்மன் கோவில்களில் ஆடுகளை மின்னல் வேகத்தில் வெட்டி இரத்தம் வெளியிடப்பட்டு மண்ணில் விடப்பட்டது விடும். கறியில் ரத்தம் ஒட்டிக்கொண்டுள்ள அறுபட்ட பகுதியில் மஞ்சள் பூசி விடுவார்கள். அதை போன்றது ஜட்கா food. பொதுவாக இவ்வாறு சமைக்கப்படும் கறியினை பல இடங்களில் சாப்பிட்டிருக்கிறேன். சுவை நன்றாக இருக்கின்றது என்று தான் நினைக்கிறேன். அதற்கான கால்நடைகள் நன்றாக வளர்க்கப்பட்டது கூட ஒரு காரணம். பல் இல்லா பெரிசுகள் கூட கோவில் பலியிடப்பட்ட ஆட்டுக்கறி எங்களுக்கு செரிமான பிரச்சனை எதுவும் தராது என்று சிலாகித்து கூறுவார்கள். அதன் அறிவியல் உண்மை மேற்கூறிய ஜட்கா முறை தான். மேலை நாட்டினர் கூட கோழி ஆடு பன்றிகளுக்கு சிறு மின்சார அதிர்வு உண்டு செய்து அதனை மயக்க நிலைக்கு கொண்டு சென்று பின்பு வலி தெரியாமல் அறுத்து விடுவார்கள். இதுவும் சரியான முறையே.


Ganapathy
மார் 12, 2025 12:16

இத்தனைநாள்கள் இந்த தொழில் டொமைனா இருயது...


Pandi Muni
மார் 11, 2025 19:13

ஒரு சந்தோசமான விஷயம், மாட்டிறைச்சி கலப்படம் இருக்காது


வாய்மையே வெல்லும்
மார் 17, 2025 17:33

பாண்டி சார் குல்லா ஆட்களுக்கு நிகராக உள்ளது உங்க திராவிட குசும்பு . ஹிந்துக்களுக்கு துரோகி எங்கேயும் இல்ல உள்ளேயே தான் இருக்கான்


visu
மார் 29, 2025 09:34

என்னமோ ஹிந்துக்கள் எல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் போல சொல்றீங்க அதிக பட்சம் 1% பேர் கூட மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள் இன்னமும் சொல்லப்போனால் பேரை கேட்டாலே நாலு தெரு தள்ளி போவார்கள் .திருவண்ணாமலையில் மாட்டுக்கறி விற்கும் தெரு வழியாக செல்ல நேர்ந்தது அருவருப்பான காட்சிகள்


Oviya Vijay
மார் 11, 2025 18:57

100% ஹிந்துக்களால் நடத்தப்படும் கடை என்றால் அங்கே மாற்று மதத்தவர் சென்று இறைச்சி வாங்கச் சென்றால் கூட அனுமதிக்க மாட்டார்கள் போல்... கொஞ்சமாவது திருந்துங்க...


Raja Karur
மார் 15, 2025 05:58

உனக்குலாம் பட்டால் தான் அறிவு வரும்


ديفيد رافائيل
மார் 11, 2025 17:00

"குறிப்பிட்ட விலங்கை இறைச்சிக்காக வெட்டும் போது, இஸ்லாமிய சட்டம் முறைப்படி கடைபிடிக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய அளிக்கும் சான்று, ஹலால் என்று அழைக்கப்படுகிறது." சூப்பரான விளக்கம் இத தான் எதிர்பார்த்தேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை