உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டம்!

புதுடில்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை(எஸ்ஐஆர்) வரும் அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

எதிர்ப்பு

பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஜூன் இறுதியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பீஹார் முழுதும் தேர்தல் கமிஷன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்தனர். அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏழு லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்ததும், உயிரிழந்தவர்களின் பெயர்கள்,நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர்,வேறு பட்டியலில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆலோசனை

இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக நேற்று( செப்.,09)ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கூடுதல் சிஇஓ( வாக்காளர் பட்டியல் தலைமை அதிகாரி), துணை சிஇஓ மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுடன் தலைமை சிஇஓ ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பது குறித்தும் பூத் மட்டத்தில் அதிகாரிகள் நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

விரைவில்

மற்றொரு ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை வாக்காளர் பட்டியல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி உள்ளது. அதில், வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த முறை நடந்த திருத்தப் பணிகளின் தகவல்கள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை அக்டோபர் மாதம் முதல் மேற்கொள்வது என தேர்தல் கமிஷன் முடிவு எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. பீஹார் தேர்தல் முடிவதற்குள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.பீஹார் தவிர மற்ற மாநிலங்களில் இந்த பணிகளின் போது வாக்காளர்கள், கையெழுத்திட்ட படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியிருக்கும். அதில் வயது, குடியுரிமைக்கான ஆவணங்களை இணைக்க வேண்டியிருக்கும். மற்ற தகவல்களுக்கு ஆவணங்களை இணைக்க தேவையருக்காது என தெரிகிறது.இந்தப் பணிகள் ஒரு மாதம் நடக்கும் என தெரிகிறது. இதற்கு அடுத்து வாக்காளர்கள் ஆட்சேபனை தெரிவிக்க 25 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இதன் பிறகு 2026 ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Balu Rajasegaran
செப் 15, 2025 10:22

மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய இடங்களில் வாழும் வடமாகாண தொழிலாளர் 2024 லோக்சபா தேர்தலில் முதலில் தமிழ் நாட்டில் வாக்கு பதிவு செய்தனர். பிறகு அவர்களுடைய சொந்த ஊரில் போய் வாக்கு பதிவு செய்தனர். பா.ஜ.பா அவர்களுடைய போக்குவரத்து செலவுகள் மற்றும் ரூபாய் 5000/- முதல் ரூபாய் 10000 வரை கொடுத்தார்கள். தலைவரே நீங்கள் ஒரு கிணற்று தவளை என்பதை நிரூபணம் செய்து இருக்கிறீர்கள். நன்றி.


ManiMurugan Murugan
செப் 10, 2025 23:12

அருமை வரவேற்கிறேன்


sivaguru
செப் 10, 2025 20:09

என்னிடம் குடியுரிமைக்கென்று எந்த ஆவணமும் இல்லையே.. நாடோடிபோல்.. பல வருடங்களாக.. வாடகை வீட்டில்.. நானும் என் மூதாதையர்களும்.. தமிழகத்தின் பல ஊர்களில் வசித்துள்ளோம்..நான் எவ்வாறு குடியுரிமையை நிருபிக்க வாய்ப்புள்ளது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 10, 2025 20:33

பிறப்பு சான்றிதழ்,பெற்றோர் மறைந்திருந்தால் அவர்களின் இறப்பு சான்றிதழ்கள், வெவ்வேறு ஊர்களில் வசித்ததற்கான சான்றுகள், பள்ளி சான்றிதழ் இப்படி பல உண்டு. ஒன்றுமே இல்லாமல் இருக்கிறேன் என்பது நம்பும்படி இல்லை. ஏதோ வீம்புக்கு குற்றம் சொல்லவேண்டும் என்ற எண்ணமே உங்கள் கருத்தில் பிரதிபலிக்கிறது.


vadivelu
செப் 11, 2025 10:34

ரேஷன் கார்டு வைத்துள்ளீர்களே, மாதம் ரூ 1000 உரிமை தொகை வாங்குறீங்களே, வாக்கு அடையாள அட்டை இருக்கே, படித்த பள்ளி சர்டிபிகடே இருக்கே, பக்கத்துக்கு வீட்டுக்காரர் நீங்க பல வருடங்களாக இருப்பதை சொல்வாரே, பிறந்ததற்கான சான்றிதழ் இருக்குமே, வங்கி கணக்கு இருக்குமே, ரூ 200 வாங்க கொடுத்த சர்டிபிகடே போதுமே, கலர் துண்டு போதுமே, வெளி நாடுகளுக்கு போன டிக்கட் இருக்குமே, ஏற்கனவே வோட்டு போட கொடுத்த சீட்டு இருக்குமே... இதெல்லாம் இருந்தாலே உன்னிடம் ஆதாரம் இருக்கும் கவலை வேண்டாம்.


தாமரை மலர்கிறது
செப் 10, 2025 19:21

நாடு முழுவதும் பங்களாதேஷிகள்,ரொஹின்யா முஸ்லிம்கள்,இலங்கை தமிழர்கள், வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை செய்பவர், இறந்தவர்கள், இரண்டுக்கு மேல் போலி வாக்கு கொண்டவர்கள் என்று இருபத்தைந்து கோடிக்கு மேல் தவறான போலி வாக்குகள் உள்ளன. அனைத்தையும் நீக்க வேண்டிய கடமை தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.


சிவம்
செப் 10, 2025 18:55

வாக்காளர் அடையாள மை வைப்பதுடன், கைரேகையையும் பதிவு செய்து விட்டால், இரு முறை வாக்கு செலுத்துவதை ஒழிக்கலாம்.


Modisha
செப் 10, 2025 18:41

அது மட்டும் போதாது . திமுக சார்பு அடிமை அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடியில் Amara கூடாது .


Artist
செப் 10, 2025 18:49

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தாதால் கடுப்பில் இருக்கிறார்கள்


மனிதன்
செப் 10, 2025 21:06

ஆமா,அப்பத்தான் நோகாம நொங்கு சாப்பிடலாம்... பீகார் மாதிரி பல லட்சம் வாக்குகளை கரெக்ட் பண்ணலாம்....


sankaranarayanan
செப் 10, 2025 18:25

பிரிட்டிஷ் குடியுரிமையும் இந்திய குடியுரிமையும் வைத்திருப்பவரை முதலில் பதவி விலக்க சட்டம் அனுமதிக்க வேண்டும் இல்லை அவரே பதவி தானாகவே விலகவேண்டும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்


Sakthi
செப் 10, 2025 17:53

இதை சென்ற சட்ட மன்ற தேர்தலில் செஞ்சி இருந்தால் ரொம்ப நல்ல இருந்து இருக்கும்


GMM
செப் 10, 2025 17:36

படிவங்களை பூர்த்தி செய்து வயது, குடியுரிமைக்கான ஆவணங்களை இணைக்க, தகுதியான குடிமகன் வாக்குரிமை பெற முடியும். காங்கிரஸ், திராவிட ஓட்டு திருட்டு நாடுமுழுவதும் முடிவுக்கு வரும். மத்திய அரசில் ஊழல் இல்லை. ஆகவே மதவாத பிஜேபி. தேர்தல் ஆணைய ஊழல் இல்லை. ஆகவே ஓட்டு திருட்டு என்று காங்கிரஸ் புரட்டு. இந்திய போஸ்ட் ஊழல் இல்லை. என்ன பெயர் ராகுல். சுமார் 100 கோடி வாக்காளர்கள். திராவிட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் தேர்தல் பணி இருந்தால் பட்டியலில் சேர்க்க 5000, நீக்க 1000. ஓட்டு போட 10000. வெற்றி அறிவிக்க சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டணம் ஏலம். 2G ஊழலை விட எத்தனை மடங்கு?


Narayanan Muthu
செப் 10, 2025 19:30

முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கும் இந்த சங்கிகளுக்கு சுய சிந்தனையே கிடையாதா. ஞானேஷ்குமாரின் சொதப்பல் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் vote chori நடந்துள்ளதை பாமர மக்களும் புரிந்து கொண்டார்கள். இனி கொண்டையை மறைப்பது வேஸ்ட்


மனிதன்
செப் 10, 2025 21:09

மத்திய அரசில் ஊழல் இல்லை...?தேர்தல் ஆணைய ஊழல் இல்லை....? சும்மா கிச்சுகிச்சு மூட்டாதே தம்பி...


Rengaraj
செப் 10, 2025 17:27

ஆதார் எண் கண்டிப்பாக வாக்காளர் அடையாள எண்ணுடன் இணைக்கப்படவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில ஒரே வாக்காளர் இருப்பதை அடையாளம் கண்டு அவர்கள் நீக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட் வழங்கப்பட்ட அனைவரின் பாஸ்ப்போர்ட் எண்ணுடன் பான்கார்டு, ஆதார் இணைக்கப்பட்டிருக்கும். எனவே ஆதார், பாஸ்போர்ட், பான்கார்டு ஆகியவற்றையும் வாக்காளர் எண்ணுடன் இணைப்பது மிகவும் பயனளிக்கும். பாஸ்போர்ட் வழங்கப்பட்டவர்களின் லிஸ்ட் பூத் வாரியாக இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பெயரில் அவர்களின் குடும்பத்தார் அல்லது அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் போலியாக இங்கே வோட்டுப்போடுவதை தடைசெய்ய வசதியாக இருக்கும்.


Artist
செப் 10, 2025 18:52

பொதுவாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான் இந்த பணியில் அமர்த்தப்படுவார்கள் ..


vadivelu
செப் 11, 2025 10:36

நாராயாணா உருட்டாதே மணி சப்தம் ஓவரா இருக்கு.


சமீபத்திய செய்தி