வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மிக அருமையான முக்கியமான சிந்திக்க வேண்டிய திட்டங்கள் நன்றிகள் அதேசமயம் சில பணியாளர்கள் மாசம் பல லட்சங்களை சம்பளமாக பெறுகிறார்கள் ஆனால் அவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் 18 மணி நேரம் என்று வேலை பார்க்கிறார்கள் ஆனால் சிலருக்கு வேலையும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் 8000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் பல லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்களை பணி நேரம் குறைத்து ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் பணி என்று ஆக்கிக்கொண்டு சம்பளத்தை மூன்றில் ஒன்று என்று ஆக்கிவிட்டு அந்தப் பணியை இதுபோன்று மூன்று பேருக்கு வழங்க முடியும் இதைப் பற்றியும் சிந்திப்பது நல்லது
இவ்வளவு செய்ய நினைக்கும் ஒன்றிய அரசு, தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாமே. ஆனால் தொழிலாளர்கள் பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேல் அதிகாரிகளும், முதலாளிகளும் விடுமுறை எடுத்துக் கொண்டு அனுபவிக்கிறார்கள். மே 1 உழைக்கும் தொழிலாளர் தினமா, அல்லது ஓய்வெடுக்கும் முதலாளி மற்றும் அதிகாரிகள் தினமா?
காம்ரேடுகள் எங்கே? ஏன் சைலென்ஸ்?
சினிமா இன்டஸ்ட்ரியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் இதன் பயன் கிடைக்குமா? நேரடியாக கிடைக்குமா? சி
பன்னிரண்டு மணி நேர வேலை மற்றும் மாநிலத்திற்கு ஏற்ற தொழிலாளர் சட்டம் கொண்டுவரவேண்டும். பீகார் போன்ற தொழில்துறை இல்லாத மாநிலங்களில் ஊழியர்களுக்கு ரெண்டு சதவீத பி எப் போட்டாலே போதும் போன்ற தொழில்களுக்கு ஏற்ற சட்டம் வரவேண்டும். அப்போது தான் தொழில்கள் வீக்கான மாநிலத்திற்கு போகும். மேலும் உபி பீகார் போன்ற மாநிலத்திற்கு சென்றால், ஐந்தாண்டுகளுக்கு வரி கட்ட தேவை இல்லை போன்ற சட்டங்கள் உடனடியாக தேவை.
12 மணிநேரம் வேலை என்பது உழைப்பை சுரண்டும் அயோக்கிய தனம்...எட்டு மணிநேர வேலை... எட்டு மணிநேர ஓய்வு.. எட்டு மணிநேர குடும்ப உறவு சமூக உறவுகள் பேணுதல் என்ற சமன்பாடு மட்டுமே சரியான ஒன்று.. சட்டப்படி 12 மணிநேரம் வேலை என்பது நடைமுறையில் 16. முதல் 18 மணி நேரம் வரை கட்டாயம் ஆக்கப்படும் அபாயம் உள்ளது..
தொழிலாளர்கள் நல சட்டம் சரி. நிறுவன நல சட்டம் வேண்டாமா? ஒரு ஓட்டலுக்கும் அடுத்த ஓட்டலுக்கும் இடை வெளி வேண்டாமா ? வியாபாரம் முடக்கும் நடை பாதை கடைகள் அகற்ற வேண்டாமா? முதல் நிறுவனம் ஆட்சேபணை இல்லை என்றால் தான் அது போன்ற பிற கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும். வருமானம் இருந்தால் தான் சட்ட ரீதியாக செயல் பட முடியும். நீதிபதி பணி விதிகள் மற்றும் நீதிமன்ற ஒழுங்கு முறைகள் பற்றி சட்டம் எப்போது அமுலுக்கு வரும்.?
மிகவும் நல்ல விஷயம். கம்யூனிஸ்ட்கள் எதிர்காலம் இனி வரும் காலங்களில் ஏதும் இல்லை என்பதை நாம் உணர முடியும்
தகர உண்டியல்களுக்கு வேலை அம்போதானா?