உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.25 லட்சம் லஞ்சம்; சிக்கினார் என்.ஐ.ஏ., அதிகாரி; தட்டி தூக்கியது சி.பி.ஐ.,

ரூ.25 லட்சம் லஞ்சம்; சிக்கினார் என்.ஐ.ஏ., அதிகாரி; தட்டி தூக்கியது சி.பி.ஐ.,

பாட்னா: பயங்கரவாத குற்றச்சாட்டில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற ரூ.2.5 கோடி லஞ்சம் கேட்ட, என்.ஐ.ஏ., அதிகாரி, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.பீஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த தொழில் அதிபர் ராக்கி யாதவ். இவர் மீது உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த வழக்கு உள்ளது. இந்த வழக்கை என்.ஐ., ஏ., அதிகாரி அஜய் பிரதாப் சிங் விசாரித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர், 2.5 கோடி லஞ்சம் தராவிட்டால், குடும்பத்தினரையும் வழக்கில் சேர்த்துவிடுவேன் என ராக்கி யாதவ்-ஐ மிரட்டி உள்ளார். ராக்கி யாதவ் முதற்கட்டமாக, ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அஜய் பிரதாப் சிங் பணம் பறிப்பதாக, தொழில் அதிபர் ராக்கி யாதவ் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பின்னர் லஞ்சம் பெற்ற என்.ஐ.ஏ., அதிகாரி அஜய் பிரதாப் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜய் பிரதாப் சிங்கிற்கு சொந்தமான பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பு விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ., அதிகாரியே லஞ்சம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

சாண்டில்யன்
அக் 21, 2024 05:09

மோடி அரசுக்கு சில தண்டல்காரர்கள் இதில் யார் பெரியவர் என்ற கடுமையான போட்டி இருக்கும்போல இருந்தாலும் அஜய் பிரதாப் சிங் காட்ட வேண்டியதை காட்டி தப்பிவிடுவார் மதுரையில் மாட்டினவர் காளி திங்கறாரா இல்லை என்ன ஆனார்னு ஊடகங்கள்தான் தைரியமாக சொல்ல வேண்டும்


Suresh R
அக் 06, 2024 07:52

We need to clean the total tem. Confiscate all the properties of all government people including politicians, judges and government employees. Give them only decent pension for their comfor living. Whatever wealth accumulated beyond their bench mark income rest is public money. When this happens, that day onwards corruption will disappear


M.Srinivasan
அக் 05, 2024 13:19

என்ன இது??


Thirumal Kumaresan
அக் 04, 2024 16:49

அந்த அதிகாரியை உடனடியாக துளக்கில் போட வேண்டும்


M.Srinivasan
அக் 05, 2024 13:20

அப்படியா ??


வைகுண்டேஸ்வரன்
அக் 04, 2024 16:27

எல்லா மந்திரிகளையும் திருட்டு கைக்கூலியே என்று ஒரு வாசகர் ஏன் திட்டறார்??


வைகுண்டேஸ்வரன்
அக் 04, 2024 16:09

எதுக்கு எல்லா அமைச்சர் களையும் கைக்கூலி என்கிறார்??


ஆரூர் ரங்
அக் 04, 2024 14:11

ஒரு ஆசீர்வாதிக்கபட்ட காவல்துறை அதிகாரி மீது பாஸ்போர்ட் மோசடி புகார்கள் உள்ளன. அவர்களால் அமைந்த அரசு காப்பாற்றுகிறது. அதைப்பற்றி பேசாமல் எங்கோ நடந்த லஞ்சப் புகாருக்கு 200 உ.பிஸ் பொங்கல் ஏன்?.


Mani . V
அக் 04, 2024 13:22

தட்டித் தூக்கி? ஒரு வருடம் கழித்தோ, சில மாதங்கள் கழித்தோ விடுதலை செய்து விடுவீர்கள்.


வைகுண்டேஸ்வரன்
அக் 04, 2024 13:08

இப்போ எழுதுங்க, சவுக்கியதார் ஆட்சி, சாமிப்புள்ள அரசாங்கம், ஏழைத்தாயின் மகன் ஆட்சி... எழுதுவீங்களா? எவனாவது அஞ்சோ பத்தோ லஞ்சம் வாங்கினா, திராவிட விடியல் அரசு ன்னு எழுதறவங்க இப்போ எழுதுங்க....


Dharmavaan
அக் 04, 2024 14:31

அஞ்சோ பத்தோ வாங்கித்தான் ஆசியாவிலேயே பெரும் பணக்காரனாகி விட்டானா எல்லா மந்திரியும் ஆயிரம் கோடி கணக்கில் சொத்து சேர்த்தானா திருட்டு கைக்கூலியே


Barakat Ali
அக் 04, 2024 16:56

வெகுண்டு சாரே ...... என் ஐ ஏ மேல பயங்கர சூடாயோ ?? எந்தா விசேஷம் ??


Shunmugham Selavali
அக் 04, 2024 13:05

Anybody proved as guilty due to accepting bribe, the salary he/she got in their service from day one to day last (proved guilty) to be recovered by all means including selling his/her properties. Next should be imprisoned to their whole life time. Their family members who benefited should also be imprisoned for life time. Unless the punishment is heavy, people will not be good.


முக்கிய வீடியோ