உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வன்முறையை காரணம் காட்டி தடியடி நடத்துவதை அனுமதிக்க முடியாது!. நீட் போராட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

வன்முறையை காரணம் காட்டி தடியடி நடத்துவதை அனுமதிக்க முடியாது!. நீட் போராட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

-டில்லி சிறப்பு நிருபர்- 'நாட்டின் எந்தப் பகுதியில் போராட்டம் நடந்தாலும், அதை காரணம் காட்டி போலீசார் மிதமிஞ்சிய பலத்தை பயன்படுத்துவதையோ, தடியடி நடத்துவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கான உத்தரவாதத்தை அரசியலமைப்பு வழங்கி இருக்கிறது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20ம் தேதி பார்லி.,யை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை விரட்டியடித்தனர். மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போராட்டம் நடந்த மறுநாளே, பிரதமர் இல்லத்தை காங்கிரஸ் தலைவர்கள் முற்றுகையிட முயன்றதால், இந்த விவகாரம் தேசிய அளவில் பூதாகரமானது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பதற்றமான சூழல் உருவான நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. இந்நிலையில், டில்லி ஜந்தர் மந்தர் உள்பட நாடு முழுதும் 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது மிதமிஞ்சிய போலீசார் குவிக்கப்பட்டது, மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல், போராட்டத்தின்போது காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாட்டு மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கான உத்தரவாதத்தை அரசியலமைப்பு வழங்கி இருக்கிறது. ஒரு இடத்தில் போராட்டம் நடக்கிறது என்பதற்காகவே, போலீசார் மிதமிஞ்சி பலத்தை பயன்படுத்துவதையோ, தடியடி நடத்துவதையோ ஏற்க முடியாது. அதே போல், போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதையும் ஏற்க முடியாது. போராட்டங்களின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கவும், அதே வேளையில் போராட்ட உரிமையை பாதுகாக்கவும், நாடு முழுதும் சீரான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஜனநாயக செயல்முறைக்கு சுயகட்டுப்பாடும், ஒழுக்கமும் அவசியம். போலீசார் எல்லை மீறி செயல்பட்டிருந்தால், அது தொடர்பாக நடுநிலையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் சரி; பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் சரி; இருதரப்பினரின் உயிரும் முக்கியமானது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது, ஆஜரான வழக்கறிஞர் பவுசியா ஷக்கீல் என்பவர், ''பீஹாரில் போராட்டக்காரர்கள் மீது ஏ.கே.,47 ரக துப்பாக்கியை போலீசார் பிரயோகித்தனர்,'' என, குற்றஞ்சாட்டினார். மற்றொரு மூத்த வழக்கறிஞரான விகாஷ் சிங், மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு நடுநிலையான முறையில் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றாக சேர்த்து இன்று விரிவாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். டில்லி உயர் நீதிமன்றத்தில் இதே விவகாரம் தொடர்பாக கடந்த 22ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசும், டில்லி போலீசாரும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், போராட்ட களத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள், வீடியோ ஆதாரங்களை அழிக்காமல் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

HoneyBee
ஜூலை 28, 2026 16:57

அப்ப அவகளுககு டீ சமோசா வாங்கி தரலாமா???


M S RAGHUNATHAN
ஜூலை 28, 2026 10:51

அரசுகளுக்கு ஒரு வேண்டுகோள். யாராவது அல்லது கட்சிகள் அல்லது அமைப்புகள் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் காவல் துறை அவர்களிடம் நீங்கள் முதலில் நீதி மன்றங்களின் அனுமதி பெற்று வாருங்கள் என்று சொல்ல வேண்டும். காவல் துறை போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த நீதிபதி/ நீதிபதிகளிடம் போராட்டத்தை அவர்கள் நேரில் வந்து பார்வை இட வேண்டும். நீதிபதி தான் காவல் துறைக்கு செய்தி அனுப்பி எத்தனை காவலர்கள் தேவை, அவர்கள் லத்தி, துப்பாக்கி போன்றவற்றை எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். போராட்டத்தில் வன்முறையோ அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால் எந்த விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்பார்வை செய்யும் நீதிபதிகள் எழுத்து மூலம் உத்தரவு இட வேண்டும். இதெல்லாம் செய்ய முடியுமா என்று நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும், ஒரு கருத்து சொல்லும் முன். நீதிபதிகள் நீதி பரிபாலனம் மட்டும் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் ஆக மாறக் கூடாது.


ellar
ஜூலை 28, 2026 09:21

சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் போராட்டங்கள் வன்முறையாக மாற இருந்த பொழுது நீதி அரசர்கள் காவல்துறைக்கு என்ன கேள்வி கேட்டார்கள் என்பது மறந்து விட்டதா அத்தோடு அமைதியான போராட்டத்தில் இருந்து மனிதர்கள் ஏன் பாராளுமன்றத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள் அது அமைதியான போராட்டம் தானா என்பதை நீதியரசர் கவனித்தாரா


M S RAGHUNATHAN
ஜூலை 28, 2026 09:00

MLA கள் , MP கள் ஆகியோரின் வாகனங்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டார். கோயில்களில் எதற்கு vip களுக்கு சிறப்பு மரியாதை, சிறப்பு தரிசனம் என்று கேள்விகள் எழுப்பிய நீதிபதி, எதற்கு சுங்க சாவடிகளில் தனி வழிப் பாதை அமைக்க கேட்டதை தட்டி கேட்கவில்லை.


Krishna
ஜூலை 28, 2026 08:56

Courts, RulingGovts& Opposition Parties Must Not Do CheapPolitics Encouraging Useless-Divisive-Disruptive Gangs incl CJP, Women, SCs etc etc


renga rajan
ஜூலை 28, 2026 08:28

இந்த மூட்ட பூச்சி தான் கரப்பான்பூச்சி களப்பிவிட்டது. இதை நசுக்க வேண்டும் முதலில்.


c.k.sundar rao
ஜூலை 28, 2026 08:10

tell us how to control


Sundaran
ஜூலை 28, 2026 07:57

வன்முறை நடந்தால் இந்த நீதிபதிக்கு தெரிவியுங்கள். அவர் வந்து வன்முறையாளர்களிடம் பேசி சமரசம் செய்து வைப்பர். அவர் வரும்வரை எது நடந்தாலும் கண்டு கொள்ளாதீர்கள்.


N Srinivasan
ஜூலை 28, 2026 07:51

So.... SC has directed the Govt not to use HIT against the cockroaches..... Good


Ganesh Kumar
ஜூலை 28, 2026 03:58

நம் நாட்டின் சீர்கேட்டுக்கு காரணமே நீதிபதிகள் தான் வன்முறையை கடைபிடிக்கும் மக்களுக்கு மாலை போட்டு மரியாதையை செய்ய வேண்டுமா என்ன? நீதித்துறை மாறா விட்டால் நம் நாடு கீழ் நோக்கித்தான் போகும் நீதித்துறை மட்டுமே நம் நாட்டின் அழிவுக்கு காரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை