உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சவுதிக்கு அணுசக்தி திறன் பகிரப்படும்: பாக்., அமைச்சர்

சவுதிக்கு அணுசக்தி திறன் பகிரப்படும்: பாக்., அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே சமீபத்தில் 'பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்' கையெழுத்தானது. 'இதன் அடிப்படையில் சவுதிக்கு அணுசக்தி திறன்களை பாகிஸ்தான் வழங்கும்' என, அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் மேற்காசிய நாடான சவுதி அரேபியா இடையே சமீபத்தில் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

முக்கியத்துவம்

இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில், எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினாலும் அது இரு நாட்டின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக சவுதிக்கு அணுசக்தி திறன்களை வழங்குவோம் என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். அணுசக்தி பரிமாற்றம் குறித்து வெளிப்படையாக ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை என்றாலும், சவுதிக்கு அணுசக்தி திறன்களை பாகிஸ்தான் வழங்கும் என அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார். மேலும், பிற அரபு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைய முடியுமா என்ற கேள்விக்கு, இதற்கு, முன்கூட்டியே பதிலளிக்க முடியாது எனவும், ஆனால், ஒப்பந்தத்திற்கான கதவுகள் மூடப்படவில்லை என்பதை மட்டும் தான் உறுதியாக கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை இந்தியாவிடம் இருந்து தன் நாட்டை பாதுகாக்க மட்டுமே அணுசக்தியை வைத்துள்ளதாக தெரிவித்து வந்த பாகிஸ்தான், தற்போது அணு ஆயுதங்களை அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கும் என கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அச்சுறுத்தல்

இருப்பினும், இந்த ஒப்பந்தம் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பில் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்பால், பாதுகாப்புக்காக அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற தன் நிலையை சவுதி வெளிப்படுத்தி உள்ளது. இஸ்ரேல், ஈரானிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு புதிய, சக்திவாய்ந்த பாதுகாப்பை சவுதிக்கு இது கொடுக்கும் என நம்பப்படுகிறது. மேலும், முஸ்லிம் நாடுகளின் ராணுவ கூட்டணியான 'இஸ்லாமிய நேட்டோ' உருவாக்கத்திற்கான பேச்சுக்கு இது வலு சேர்ப்பதாக மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராமகிருஷ்ணன்
செப் 20, 2025 13:11

சவுதியிடம் பிச்சை எடுக்க பாகிஸ்தான் புதுசா வழி கண்டு பிடித்து விட்டது. ஆயுதம், தொழில் நுட்பம் தர்ரோம், நீங்கள் சோத்தை போடுங்கடா.


naranam
செப் 20, 2025 12:51

பல ஆண்டுகளுக்கு முன்பு எண்பதுகளில் இஸ்ரேல் பாகிஸ்தானின் அணு ஆயுதக் கூடங்களை தாக்கி அழித்து விட இந்தியாவிடம் இஸ்ரேலின் போர் விமானங்களுக்கு எரி பொருள் நிரப்பிக்கொள்ளும் உதவியைக் கெஞ்சிக் கேட்டதாக ஒரு செய்தி இருக்கிறது. அதை அப்போது செய்திருந்தால் இப்போது இந்த பிரச்சனை தலையெடுத்திருக்காது. வழக்கம் போல காங்கிரஸ் ஆட்சி அந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளாமல் தவற விட்டதன் பலன் இப்போது நம் தலையில் விடிந்திருக்கிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 20, 2025 09:59

பாகிஸ்தான் தொழில்நுட்பங்களை எந்த எந்த நாடு பயன் படுத்துகிறதோ அந்த அந்த நாடுகள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்.


ஆரூர் ரங்
செப் 20, 2025 09:11

சொந்த அணு ஆயுதம் எதுவும் இவர்களிடம் கிடையாது. எல்லாம் அங்கு வைத்திருந்து மேற்பார்வை செய்வதுதான். ஆபரேஷன் சிந்தூரில் அவற்றினருகே குண்டு தாக்குதல் நடத்திய ஆத்திரம்தான் போட்ட வரிக்கு காரணம்.


கண்ணன்
செப் 20, 2025 08:48

இவர்களுக்கு என்ன தெரியும் வேண்டுமானால் சௌதி அதை அமெரிக்காவிடமிருந்து நேரடியாகவே பெறலீமே! இந்த அளவுதான் இவர்களின் அறிவு


பெரிய குத்தூசி
செப் 20, 2025 08:42

சவூதி ராணுவம் என்பது பொம்மை போன்றது. அரபு பொடியன்ஸ் துப்பாக்கியை தூக்கமுடியாம முக்கிகிட்டு நிப்பானுக. ஜஸ்ட் ஷோ கேஸ் பொம்மை ராணுவம், போலீஸ். ஒரு ரவுண்டு துப்பாக்கியாலே சுட்டால் போய் குப்புஸ் சையும் சுலைமானி டி யம் வெச்சிக்கிட்டு போய் ஒளிஞ்சிகிடுவானுக. சவூதி ராணுவத்தை ராணுவமா பார்க்க தகுதியில்லை, பொம்மை கையில் துப்பாக்கி. அவோலோதான். சொகுசா இருக்கற ஆளுங்க, சாக தயாராக இல்லாத அமெரிக்காவின் ஹை டெக் ஆயுதம் வைத்திருந்தாலும் பயன்படுத்த தெரியாத கூமுட்டைகள் சவுதி ராணுவம், அடுத்த அடி பாகிஸ்தானை அடிக்கும் போது இந்தியாவின் மூலோபாயத்தை அறிவீர்கள். எதுவும் தெரியாமலே வாழக்கை முடிந்து விடும். இப்போதைக்கு கூலிப்படை பாக் பூனை பாதுகாப்பாக இருக்கிறோம் என தன்னை தானே ஏமாற்றி கொண்டு கண்ணை மூடிக்கொள்ளலாம்.


GMM
செப் 20, 2025 08:26

விஷ முறிவு மருந்து போல், இந்தியா அணு குண்டுகளை வழி மறித்து செயல் இழக்க, அணு கதிர் வீச்சின் வீரியதை குறைக்க செய்யும் தொழில் நுட்பம் ஆராய வேண்டும். உலகில் அணு ஆயுதம் இனி எளிதில் பரவும். ஆக்கிரமிக்க பட்ட பாகிஸ்தான், வங்கதேச போன்ற நாடுகள் ஒழிக்க பட வேண்டும். அல்லது இவை வல்லரசு கண்காணிப்பில் இருக்க வேண்டும். வீட்டோ அதிகாரம் செயல் இழந்து விடும். எரி பொருள் விற்பனை மூலம் வளரும் பொருளாதார தீவிர வாதம் முடங்க உலகம் பண்ட மாற்ற முறையை அங்கீகரிக்க வேண்டும். குரங்குக்கு பூமலையை பயன் படுத்த தெரியாது.


Kanns
செப் 20, 2025 08:23

Its Chinas FusedOut NuclearBomb Loaned to Pak thou USA helped Pak Nuclear Program as part of its Divisive-DestructiveConspiracies.


Nathan
செப் 20, 2025 07:23

ஆகா என்ன ஒரு ராஜதந்திரம். அமெரிக்கா என்ன பிடுங்கி கொண்டு இருக்கிறது அனு ஆயுதம் இப்போது கடைசரக்காக மாறிவிட்டது


Kasimani Baskaran
செப் 20, 2025 07:22

இஸ்ரேல் பாகிஸ்தானை இனி மகா விரோதி நாடு என்று கருதும். இந்தியாவுக்கு ஏற்கனவே பாக்கிகள் விரோதிகள்தான் - ஆனால் அமெரிக்காவுக்கு அணுவாயுதங்களை பதுக்கி வைக்க இடம் கொடுக்கும் பாகிஸ்தான் அதிமிகு நட்பு நாடு. அமெரிக்காவால் பாகிஸ்தானை அப்படியே விட்டு விட முடியாது - ஏனென்றால் சீனாவையும் இந்தியாவையும் ஒரே இடத்தில இருந்து கண்காணிக்க வேறு வசதியில்லை. மியான்மரில் இராணுவத்தளம் அமைக்கும் வரையாவது பாகிஸ்தான் வேண்டும். இந்தியா கவலைப்படாமல் பாகிஸ்தானை அடித்து உடைக்க இதைவிட சரியான நேரம் இல்லை. காஷ்மீரை முழுவதுமாக மீட்டு விடலாம்.


பெரிய குத்தூசி
செப் 20, 2025 08:44

இந்த கோர்த்து வாங்குதலை செய்வதே அமெரிக்கா நரி. இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கறாங்களாம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2025 08:53

ஆமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை