உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உமர் அப்துல்லா ஓட்டம்: ராகுல் வாட்டம்

உமர் அப்துல்லா ஓட்டம்: ராகுல் வாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காந்திநகர்: ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சமீபத்தில், குஜராத் சென்றார். பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், காஷ்மீர் செல்லும் சுற்றுலா பயணியர் குறைந்துவிட்டனர்.இதை சமாளிக்கவும், தன் மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சியடையவும் குஜராத் சென்றிருந்தார் ஒமர். சுற்றுலாத்துறை தொடர்பான அரசு மற்றும் தனியார் அமைப்புகளை சந்தித்து, 'காஷ்மீரில் அமைதி நிலவுகிறது; எனவே, குஜராத்தில் இருந்து சுற்றுலா பயணியர் அங்கு வர வேண்டும். அத்துடன், குஜராத்திற்கும், ஜம்மு - காஷ்மீருக்கும் இடையே, பொருளாதார ரீதியாக நல்ல உறவு உள்ளது' என, பேசி உள்ளார்.அதன்பின், சபர்மதி ஆசிரமத்தில் உள்ள காந்தி சிலைக்கும், ஒற்றுமையை பிரதிபலிக்கும் சர்தார் வல்லபபாய் படேல் சிலை உள்ள இடத்திற்கும் சென்று மரியாதை செய்துள்ளார். தினமும் காலையில், 'ஜாகிங்' செய்வதை வழக்கமாகக் கொண்டவர் ஒமர். காலையில், குஜராத் தலைநகர் ஆமதாபாதின், சபர்மதி நதிக்கரை வழியாக ஜாகிங் மேற்கொண்டார்; இதை சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார்.இதைப் பார்த்த பிரதமர் மோடி, உடனே, சமூக வலை தளத்தில், 'கேவடியாவில் உள்ள சர்தார் படேல் சிலைக்கு மரியாதை செய்து, தேசத்தின் ஒற்றுமைக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்' என பதிவிட்டு, ஒமரைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். இது குறித்து ராகுலிடம் கேட்டபோது, 'ஒமர், பா.ஜ., பக்கம் சென்றுவிட்டார்' என்றார். ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இப்போது ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. மீண்டும், மாநில அந்தஸ்து கொண்டு வரவே, ஒமர், பா.ஜ.,வுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல செயல்படுகிறார். தெலுங்கானாவை பிரிக்க, சந்திரசேகர் ராவும் இப்படித்தான் பா.ஜ.,வை ஆதரித்தார். ஆனால், தெலுங்கானா தனி மாநிலமாக ஆன பின், பா.ஜ.,வை உதைத்து தள்ளிவிட்டார்' என, வேறு மாதிரி கூறினாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

M Ramachandran
ஆக 03, 2025 15:13

எல்ல பயலுகளுக்கும் கரையாக பயலுக. சொந்த நனமைய்யக்கா பாடு படும் ராகுலுக்கு தேர் பாணியில் பதிலும் கொடுக்கிறார்கள் அவர் நண்பர்களாக நினைத்தவர்கள்.இந்த மூக்கறுப்பு பத்தாது ரத்தம் சொட்டனும். அப்போது தான் பிற வலி தெரியும்


Jack
ஆக 03, 2025 12:26

முயற்சி செய்கிறாரோ என்னமோ


Rathna
ஆக 03, 2025 12:23

முதுகில் குத்துவதை வரைக்கு நிகழ்வுகள் மூலம் நிரூபித்து உள்ளது.


Ramesh Sargam
ஆக 03, 2025 12:17

முதலில் சசி தரூர். இப்பொழுது உமர். இதற்கு முன்பு பலர் காங்கிரஸ் என்கிற தொழுவத்திலிருந்து ஓட்டம். இனி காங்கிரஸ் கட்சியில் கடைசியாக இருக்கப்போவது சோனியா, ராகுல், ப்ரியங்கா மட்டுமே.


G Mahalingam
ஆக 03, 2025 14:06

காங்கிரஸ் கட்சியில் இருந்து முத்த தலைவர்கள் விலகினால் காங்கிரஸ் சொத்து சுமார் 1 லட்சம் கோடியை சோனியா ராகுல் பிரியங்கா ஆட்டைய போடலாம் என்று எதிர்பார்க்கின்றனர். அடிமைகளுக்கு கிள்ளி கொடுபார்கள்.


vivek
ஆக 03, 2025 11:00

அது எப்படி ஆர்டிஸ்ட் பரட்டை நீ போடும் கருத்து எல்லாம் உனக்கே திரும்புது


Oviya Vijay
ஆக 03, 2025 10:08

இந்த தலைப்பப் பார்த்தவுடன போக்கிரி படத்துல நெப்போலியன் பிரஸ்மீட் சீன் தான் ஞாபகம் வருது... ஆக்சிடென்ட்ல லாரி டமால். டிரைவர் பனால்னு எழுதினது நீதான... அப்படின்னு ஒரு போலீஸ் அதிகாரியா அந்த படத்துல நடிச்சிருந்த நெப்போலியன் ஒரு பத்திரிகை நிருபர பார்த்துக் கேக்குற மாதிரி இருக்கு...


vivek
ஆக 03, 2025 10:59

நடப்பது எதுவும் நல்லதுகில்லை...எதற்கும் எசிஜி , எக்ஸ்ரே எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க....இதயம் பத்திரம்


vivek
ஆக 03, 2025 11:02

உனக்கு ஓபிஎஸ் போதாதா...அவரு நூறு உமர் சமம்


Jack
ஆக 03, 2025 12:23

ஒரு உபியா முட்டுக்கொடுக்கறது எவ்வளவு கடினம் என்று இருந்து பார்த்தால் தான் புரியும் ..ஒரிஜினல் பெயரிலும் கருத்து போட்டா வீட்டில் தலை காட்டறதும் கஷ்டம்


SUBBU,MADURAI
ஆக 03, 2025 15:48

அப்பத்துக்கு மதம் மாறிய பயல்கள் நான் இந்துதான் என்று ஒப்பாரி வைப்பான்கள் வழக்கம் போல இந்த ஓவிய விஜய் நீண்ட நெடிய கதை சொல்லுவார் அதை நாம் நம்ப வேண்டும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 03, 2025 09:36

மோடிக்கு மக்கள் கூட்டம் ..


SUBBU,MADURAI
ஆக 03, 2025 09:30

காஷ்மீரில் தேர்தலில் இந்த ஒமர் அப்துல்லாவின் கட்சி ஜெயிப்பதற்கு முன்பு வரை அதாவது 2024 ம் ஆண்டு தேர்தல் வரை அங்குள்ள அனந்த்நாக், பெஹல்காம் உள்ளிட்ட பல இடங்களில் நம் இந்திய ராணுவத்தினர் பதினைந்து அடிக்கு ஒருவர் என்று பாதுகாப்பு படை ரோந்து மற்றும் அங்குள்ள லோக்கல் போலீஸின் பாதுகாப்பும் போடப் பட்டிருந்தது. ஆனால் காஷ்மீரில் இந்த ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி ஜெயித்த பின்பும் இந்திய உளவுத்துறையான ரா கொடுத்த தகவலின்படி ஒமர் அப்துல்லாவின் கட்சி காஷ்மீரில் ஆட்சி அமைந்தாலும் அங்கு பாதுகாப்புக்கு போடப் பட்டிருந்த இராணுவத்தை விலக்கிக் கொள்ள கூடாது என்ற உத்தரவையும் மீறி இது எங்கள் மாநில உரிமையில் தலையிடுவதாகும் எனவே ராணுவத்தை விலக்க வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்ற ஒமர் இந்திய ராணுவத்தை விலக்கி கொள்ள வைத்தார். அதுமட்டுமல்ல அப்போது அனந்த்நாக்கில் அப்போது SSP ஆக இருந்த ஆனந்த் என்பவரையும் (இந்த ஆனந்த் என்பவர் போலீஸாக இருந்தாலும் ஐந்து மிலிட்டரி அவார்டு வாங்கியிருக்கிறார்) சரியாக இந்த பெஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன் வேறு இடத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணியது இந்த ஒமர் அப்துல்லாவின் அரசு எனவே அங்கு முழுக்க முழுக்க பாதுகாப்பை சிதைத்ததற்கு காரணம் கண்டிப்பாக இந்த ஒமர் அப்துல்லாதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதற்கு பின் மூன்று நாட்கள் கழித்துதான் பெஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தது.


M Ramachandran
ஆக 03, 2025 15:10

நல்ல தகவலை கொடுத்துள்ளேர்கள் நண்பரே.


புதிய வீடியோ