உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்துார் :பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்

ஆபரேஷன் சிந்துார் :பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பிறகு பிரதமர் மோடி, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vzkpr2it&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து, பயங்கரவாதிகளுக்கு துணைபோன பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறுஅதிரடி நடவடிக்கையை இந்தியா எடுத்தது.பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.இதை எதிர்த்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்த தாக்குதலில் நிலை குலைந்த பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்தம் செய்ய முன் வந்தது. தன் இலக்குகள் அடையப்பட்டுள்ளதால் இந்திய ராணுவமும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விளக்கம் அளிப்பதற்காக, இன்று இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பிறகு நாட்டு மக்களிடம் முதன் முறையாக இன்று இரவு பேசுகிறார்.பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, போர் நிறுத்தம் பற்றி பல்வேறு சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் பிரதமர் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mr Krish Tamilnadu
மே 12, 2025 19:31

நமது மனிதநேய மாண்பு உலகையே மாற்றி விட்டது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் மட்டும் என்ற தெளிவு. நாம் ஜெயம் என்றாலும், போர் பாக்.குக்கு எதிரான போர் எங்கள் விருப்பம் அல்ல என்ற தெளிவு. உடனடி கட்டுகோப்பான அமைதி. இந்திய தரப்பில் போர் தகவல்கள் காக்கப்பட்டன, இருந்தாலும் பொய்யுரைக்காத நேர்மை. உலககே வியக்கிறது, ஆச்சரியப்படுகிறது நமது மனித நேய பண்புகளை பார்த்து. உடனே, ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தை. உடனே அமெரிக்கா, சீனா வரிவிதிப்பு பேச்சுவார்த்தை. உலக சிக்கல்கள் தான் தான் என்ற இறுமாப்புகள் நீங்கி, முடிவுகளை நோக்கி வருகின்றன.வெல்டன் இந்தியா.


P.Sekaran
மே 12, 2025 18:21

இனி பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் இங்கு உயிர்பலி கொடுத்தால் அடுத்த நொடி தீவிரவாதிகளை கண்காணித்து அவர்கள் மீது ஏவுகணை தாக்குதல் தொடுக்கவேண்டும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்வரை அவர்களுடன் எந்த உதவிகளையும் செய்யாமல் இருந்தால் அவர்கள் இறங்கி வருவார்கள்


Columbus
மே 12, 2025 18:14

Remember what happened when he addressed the nation on Nov 08, 2016.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 18:11

பத்து வருசமா ராணுவ பலத்தைப் பார்த்துப் பார்த்து பெருக்கிய பாஜக அரசு .... இது இல்லன்னா, நடக்கலைன்னா ஹிந்துக்களோட சேர்ந்து மூர்க்க கும்பலும் பரலோகம் போயிருக்கும் .... பன்றிஸ்தானின் அணுவாயுத ஏவுகணைகள் விலக்கி பார்க்காமயே மொத்தமா முடிச்சு விட்டிருக்கும் ....


Barakat Ali
மே 12, 2025 17:45

அடுத்து ராணுவ பலத்தில் இரண்டாவதாக வருவதே நமது உடனடி நோக்கமாக இருக்க வேண்டும் .... ஊழல்வாதிகளின் சொத்துக்களைப்பறித்து அரசுடமை ஆக்குங்கள் ....


Palanisamy T
மே 13, 2025 06:54

ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆரம்பித்துவிட்டால் அப்புறம் நாட்டை ஆளுவதற்கு ஆட்சியாளர்களே இல்லாமல் போய்விடும். மக்களும் இலவசங்களை வாங்க முடியாமல் தவித்தே போய்விடுவார்கள் தேவையா இது?


RAMAKRISHNAN NATESAN
மே 12, 2025 17:32

ஜி க்கு / பாஜகவுக்கு இனி வரும் தேர்தல்களில் வாக்கு வங்கி கூடிருமோ ? பதற்றத்தில் , டீம்கா , காங்கிரஸ் மற்றும் அவர்களின் அடிமைகள் ....


VSMani
மே 12, 2025 17:25

மோடிஜி வாழ்க இந்தியாவின் இரும்பு மனிதர்கள் வல்லபாய் படேல், இந்திரா காந்தி , வாஜ்பாய், மோடிஜி


சமீபத்திய செய்தி