நிதி நிறுவனம் மீது வழக்கு பதிய உத்தரவு
புதுடில்லி:நிறுவன பங்குகளை மாற்றுவதற்காக, இறந்தவர் கையெழுத்தைப் போட்ட நிதி நிறுவனம் மற்றும் அதன் மற்றொரு பங்குதாரர் மீது வழக்குப் பதிவு செய்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுடில்லியில், 'ஜெனிசிஸ் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்தை திரிப்த் சிங், நரேஷ் கர்க், கோபால் பிஷ்ட் மற்றும் பன்வாரிலால் சபூ ஆகியோர் நடத்துகின்றனர். இதில், பன்வாரி லால் சபூ 2016ம் ஆண்டு ஏப்.,7ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, மே மாதம் 3ம் தேதி அவரது கையெழுத்தை போலியாக போட்டு, 'ஈக்விட்டி பங்குகள்' மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவி, ஜெனிசிஸ் நிதி நிறுவனம் மற்றும் அதன் மற்ற பங்குதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.