உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1.47 கோடி மோசடி மதுரை வீடு ஓனர் கைது

ரூ.1.47 கோடி மோசடி மதுரை வீடு ஓனர் கைது

அரியாங்குப்பம்:புதுச்சேரி, அரியாங்குப்பம் காந்திஜி நகரைச் சேர்ந்தவர் ரவிசேகர், 63. இவர், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் 'மதுரை வீடு' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இவர்,ஹோட்டல் விரிவாக்கத்திற்காக, கடலுாரில் உள்ள ஒரு இடத்தின் ஆவணங்களை கொடுத்து, புதுச்சேரி கேன்டீன் வீதியை சேர்ந்த பைனான்சியர் சங்கர், 50, என்பவரிடம் 1.47 கோடி ரூபாய் கடன் பெற்றார்.ஆவணங்களை சங்கர் ஆய்வு செய்தபோது, இடம் கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. போலி ஆவணங்களை கொடுத்து பணம் மோசடி செய்த, ரவிசேகர், அவரது மனைவி ஜெயசக்தி, மகன் அரவிந்தன் ஆகியோர் மீது சங்கர், புதுச்சேரி கோர்ட்டில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரியாங்குப்பம் போலீசார், டிச.16ம் தேதி வழக்கு பதிந்து, ரவிசேகர் உள்ளிட்ட மூவரை தேடி வந்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவிசேகரை , போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Joe Rathinam
ஜன 05, 2025 11:19

அரசு கோயில் நிலங்களின் விபரங்களை பத்திரப்பதிவு வலைத்தளத்தில் வெளியிட்டால் முறைகேடுகளை தவிர்க்கலாம்.


புதிய வீடியோ