உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி

புதுடில்லி: ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் தூங்க முடியாது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xcxvfq0d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பெருமை

அப்போது, எஸ் 400 வான் பாதுகாப்பு கவசம் முன்பு நின்று பிரதமர் மோடி பேசியதாவது: முப்படைகளுக்கும் வணக்கம் தெரிவிக்கிறேன். உங்களை பார்த்து வணக்கம் செலுத்த வந்துள்ளேன். உங்களை பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. இந்திய விமானப்படையின் வீரத்தை ஒட்டு மொத்த உலகமே பார்த்தது. பாகிஸ்தான் தாக்குதலை நாம் வெற்றிகரமாக கையாண்டோம். இந்திய பெண்களுக்கான நீதியை நிலைநாட்டி உள்ளீர்கள். ராணுவ வீரர்களை உலகமே பாராட்டுகிறது. ராணுவத்தினர் நிகழ்த்திய 'ஆபரேஷன் சிந்தூர்' உலகம் முழுதும் எதிரொலித்தது.

குடிமகனின் குரல்

'பாரத் மாதா கி ஜே' என்பது நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரின் உறுதிமொழியாகும். நாட்டிற்காக வாழவும், ஏதாவது செய்ய விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகும்.நமது ட்ரோன்கள் எதிரிகளின் கோட்டையை தகர்த்த போதும், நமது ஏவுகணை பயங்கர சத்தத்துடன் இலக்குகளை தாக்கிய போதும், நமது எதிரிகள் 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்தை கேட்டனர். தினமும் சூரியன் உதயமாகும்போதும், இரவு நேரத்திலும் எதிரிகள் ' பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்தை கேட்டனர். நமது எதிரிகள் அணுகுண்டு மிரட்டல் விடுத்த போது, அவர்களுக்கு பதிலடியாக, விண் அதிர 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷம் கேட்டது. லட்சக்கணக்கான இந்தியர்களை நீங்கள் பெருமைப்பட வைத்து உள்ளனர். ஒவ்வொரு இந்திய தாய்மார்களையும் பெருமையடைய வைத்துள்ளீர்கள். நீங்கள் வரலாறு படைத்து உள்ளீர்கள்.

இடமில்லை

இந்த விமானபடை தளத்தையும், வேறு சில விமானபடை தளங்களையும் பல முறை தாக்க முயன்றனர். அவர்கள் எத்தனை முறை முயன்றாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. நமது வான் பாதுகாப்பு கவசமானது, பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் நம்மை தாக்க முடியவில்லை. இதற்காக விமானப்படை வீரர்களை வாழ்த்துகிறேன். நீங்கள் செய்த சிறப்பான பணியை அனைவரும் பாராட்டுகின்றனர்.பயங்கரவாதிகள் நம்பியிருந்த பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவை தோற்கடித்து உள்ளன. பயங்கரவாதிகள் அமர்ந்து நிம்மதியாக சுவாசிக்க பாகிஸ்தானில் எந்த இடமும் இல்லை.

எச்சரிக்கை

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் 'லட்சுமண ரேகை ' தெள்ளத் தெளிவாக உள்ளது. மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடிகொடுக்கும். இதனை சர்ஜிக்கல் தாக்குதல், விமானப்படை தாக்குதலில் பார்த்தோம்.நேற்று கூறியதைபோல், இந்தியா மூன்று விஷயங்களை முடிவு செய்துள்ளது.முதலாவது: இந்தியாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், நமது வழியில் பதிலடி இருக்கும்.இரண்டாவதாக எந்த அணுகுண்டு மிரட்டலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.மூன்றாவதாக பயங்கரவாத ஆதரவு அரசு, மற்றும் பயங்கரவாதத்தின் மூளையாக செயல்படுபவர்களை பிரித்து பார்க்க மாட்டோம். இந்தியாவின் புதிய கொள்கையை உறுதியை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒத்துழைப்பு

'ஆபரேஷன் சிந்தூர்' என்பது சாதாரண ராணுவ நடவடிக்கை அல்ல. இந்தியாவின் கொள்கை, தீர்க்கமான தன்மை மற்றும் நோக்கம் ஆகியவற்றின் சங்கமம். இந்தியா என்பது புத்தர் மற்றும் குரு கோவிந்த் சிங்கின் நிலம். நமது சகோதரிகள் மற்றம் பெண்களின் நெற்றியில் இருந்த குங்குமம் அழிக்கப்பட்டபோது, நாம் பயங்கரவாதிகளின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை அழித்தோம்.நீங்கள் பயங்கரவாதிகளை அவர்கள் முன்னாள் நின்று தாக்கி அழித்தீர்கள். நீங்கள் பயங்கரவாத முகாம்களையும் அழித்து 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றீர்கள். 'ஆபரேஷன் சிந்தூரின்' ஒவ்வொரு தருணமும் இந்திய ஆயுதப்படைகளின் திறமைக்கு சான்று. நமது ஆயுதப்படைகளின் ஒருங்கிணைப்பு உண்மையில் அற்புதமாக இருந்தது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என எதுவாக இருந்தாலும் அவர்களின் ஒருங்கிணைப்பு அற்புதமாக இருந்தது. கடலில், கடற்படை தனது ஆதிக்கத்தை காட்டியது. ராணுவம் எல்லையை வலுப்படுத்தியது. எல்லை பாதுகாப்பு படை மற்றும் பிற படைகள் அற்புதமான திறன்களை காட்டின. இந்த ஒத்துழைப்பு, இந்திய ஆயுதப்படைகளின் திறனின் வலுவான அடையாளமாக மாறி உள்ளன.

சாதனை

நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தான் தூங்காது. 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நீங்கள் நாட்டின் தன்னம்பிக்கையை அதிகரித்து உள்ளீர்கள். நாட்டை ஒற்றுமையின் நூலில் பிணைத்துள்ளீர்கள். எல்லையை பாதுகாத்து உள்ளீர்கள். நாட்டின் பெருமையை புதிய உயரத்திற்கு உயர்த்தி உள்ளீர்கள். இதுவரை இல்லாத மற்றும் கற்படை செய்ய முடியாததை நீங்கள் செய்துள்ளீர்கள்.

நாட்டின் அடையாளம்

மனித வளத்தைத் தவிர, 'ஆபரேஷன் சிந்தூரில்' தளவாடங்களின் ஒருங்கிணைப்பும் அற்புதமாக இருந்தது. பல போர்களை கண்ட இந்தியாவின் பாரம்பரிய வான்பாதுகாப்பு கவசம் ஆகாஷ் என அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இவை அனைத்திற்கும் மேலாக எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் போன்ற நவீன பாதுகாப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. வலுவான பாதுகாப்பு இந்தியாவின் அடையாளமாக மாறி உள்ளது.

போட்டி போட முடியாது

வான் மற்றும் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தள்ளன. இந்த பெருமை அனைத்தும் உங்களையே சாரும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். நமது விமானப்படை, பாகிஸ்தானுக்குள் உள்ளே இருந்த பயங்கரவாத முகாம்களையும் தாக்கி அழித்தது. 20 - 25 நிமிடங்களில், எல்லை தாண்டி இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளீர்கள். இது நவீன தொழில்நுட்ப படையில்லாமல் சாத்தியம் இல்லை.இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்துடன் பாகிஸ்தானால் போட்டி போட முடியாது. கடந்த தசாப்தத்தில், உலகின் நவீன தொழில்நுட்பம் நமது விமானப்படை மற்றும் மற்ற படைகளை அடைந்துள்ளது. ஆனால், புதிய தொழில்நுட்பம் மற்றும் சவால்கள் அனைத்தும் பெரியவை. நுட்பத்துடன் நீங்கள் தொழில்நுட்பத்தை இணைத்துள்ளீர்கள். இந்த போரில் உங்களது திறமையை நிரூபித்துள்ளீர்கள்.

பெருமை

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயங்கரவாத தலைமையகத்தை தாக்குவது தான் நமது நோக்கம். ஆனால், பாகிஸ்தான் சதி செய்து, பயணிகள் விமானத்தை கேடயமாக கொண்டு வந்தது. இது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு தெரியும். பயணிகள் விமானத்தை பாதிக்காமல் நமது இலக்கை எட்டியதற்காக உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

கெஞ்சல்

இந்திய விமானப்படை இப்போது எதிரிகளை ஆயுதங்களால் மட்டுமல்ல, தரவுகள் மற்றும் ட்ரோன்களை தடுப்பதிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளது. பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்தே, ராணுவ நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தியது. பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாம் உரிய பதிலடி தருவோம். அந்த பதிலடி நமக்கு நமது ஸ்டைலில் இருக்கும். நாம் விழிப்புடன் தயாராக இருக்க வேண்டும். தற்போது இருப்பது புது இந்தியா என்பதை எதிரிகளுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்தியா அமைதியை விரும்பும். ஆனால்,மனிதநேயத்தை தாக்கினால், புதிய இந்தியா, எதிரிகளை எப்படி தரைமட்டமாக்குவது என்பது தெரியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

V.Mohan
மே 14, 2025 08:14

நமது நாட்டு பாதுகாப்பில் பெண்களின் திறமை அதிகம் பயன்படுகிறது என பரப்புரை செய்யப்படுகிறது. ராணுவ பெண் கர்னல் குரேஷி அவர்களால் ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி தெளிவுரை தரப்பட்டது. ஆனால் இதே குரேஷி அவர்களுக்கு இந்திய ராணுவம் "பெர்மணன்ட் கமிஷன்"" தர மறுத்த போது அவர் நீதிமன்றம் சென்று தான் தனக்கான பெர்மணன்ட் கமிஷன் நியமனம் பெற முடிந்தது. நீதிமன்றமும் ராணுவத்திற்கு இந்ந விஷயத்தில் அறிவரை வழங்கியது. எனவே பெண்கள் போராடித் தான் தங்களது உரிமைகளை பெற முடிகிறது.. ஆனால் இதே


Senthoora
மே 14, 2025 04:03

இப்போ இவருக்கு டிரம்ப் ஐயாவால் தூக்கம் தொலைந்தது,


Kasimani Baskaran
மே 14, 2025 03:45

இந்த முறை எடுத்த முடிவு மிகச்சரியானது. அதே சமயம் உள்ளூரில் தேசவிரோதிகள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை ரௌண்டு கட்டி அடிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். வெறும் மோடி வெறுப்பில் உழல்பவர்களை அப்படியே விட்டு விட்டால் கூட மறை கழன்று மடிந்து விடுவார்கள்...


திருட்டு திராவிடன்
மே 14, 2025 02:43

S400 இந்தப் போரில் உபயோகப்படுத்த வில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் அதை உபயோகப்படுத்தினார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். எது உண்மையோ?


ஜெய்ஹிந்த்புரம்
மே 14, 2025 01:12

ரபேல் எண்ணிக்கை இடிக்குதாமே


SUBBU,MADURAI
மே 14, 2025 13:07

இந்திய சோற்றை தின்று சொகுசாக இங்கு வாழ்க்கையை நடத்திக் கொண்டு இந்தியாவிற்கு எதிராக வன்மத்தோடு கருத்தை போடும் உன்னைப் போன்ற ஜந்துக்கள் எல்லாம் பேசாம உங்கள் டொப்பிள் கொடி நாட்டுக்கு போயிருங்க துரோகிகளா உங்களை இனங்கண்டு சுளுக்கெடுக்கும் காலம் விரைவில் நெருங்கிக் கொண்டு இருக்கிறது அதற்குள் திருந்தினால் நல்லது.


krishna
மே 14, 2025 00:13

SINGA THALAIVAN MODI AVARGALE PAKISTHANIS MATTUM ILLAI.DESA VIRODHA MIRUGA MOORGANIN KAAL NAKKI KUMBAL DRAVIDA MODEL SAIKO KURUMA UNDI KULUKKIS KOODA. MIGA SOGAMAAGA ULLANAR. INGU UNDU KOZHUTHU PAK NENJIL SUMANDHU THIRIUM MIRUGA MOORGA KUMBAL INDHA MANNIN SAABA KEDU.


mani
மே 13, 2025 22:01

"போர் ஏற்பட்டால் இரு நாடுகளும் அழிந்து விடும்னு" ஒண்ணு கூவிக்கிட்டிருந்துச்சே, அதை எங்கப்பா காணோம்.


SUBBU,MADURAI
மே 13, 2025 20:33

இந்துக்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதி இறந்தவரின் மனைவியிடம் உன் பிரதமர் மோடிக்கிட்ட போயி சொல்லுன்னு சொன்னவன் தப்பித்தவறி உங்க யோகிகிட்ட போய் சொல்லுன்னு சொல்லியிருந்தா இந்நேரம் ஆப்ரேஷன் சிந்தூரிக்கு பதிலா ஆப்ரேஷன் தந்தூரி நடந்திருக்கும் மொத்த பாகிஸ்தானையும் வறுத்து எடுத்திருப்பார் உங்க நல்ல நேரம் இப்போது இந்தியாவின் பிரதமரா மோடி இருக்கிறார் அதனால பிழைத்துப் போங்கள்...


Priyan Vadanad
மே 13, 2025 19:57

செய்தியின் தலைப்புக்கும் நடந்து கொண்டிருப்பவற்றுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை போல தெரிகிறது. எதிரிகளின் தூக்கம் தொலைந்த நேரத்தில்தானே அவர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதை விட்டுவிட்டு நமது தூக்கத்தை கலைத்துக்கொள்ளலாமா? எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் தேவைதானே. நாட்டு மக்கள் செய்திகளை அறிந்துகொள்ளுமுன் நாடுமன்ற மக்கள் அறிந்துகொள்வது சிறப்பல்லவா?


V.Mohan
மே 13, 2025 19:23

பாக்கிஸ்தான் தூக்கம் தொலைத்தது சரிதான் நமது பாரத ராணுவம் , கடற்படை, விமானப்படை என அனைவரும் சேர்ந்து பதிலடி தந்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். அதே நேரம் பாக்கிஸ்தான் தனது நாட்டு ராணுவத்திற்கும், விமானப்படைக்குமே அதிகம் செலவழிக்கிறது. மக்கள் நலம், முன்னேற்றம் பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே சீனாவிடம் மடிப்பிச்சை ஏந்தி விமானப்படைக்கு லேட்டஸ்ட் ஏவுகணைகளையும் பைட்டர் விமானங்களையும் வாங்கி குவித்துள்ளது. A I தொழில் நுட்பத்தில் இயங்கும் சி 15 ஏவுகணையை பயன் படுத்தி நமது 5 ஜெட் விமானப்படை விமானங்களை அதில் ரபாலே ஜெட்-2சுட்டு வீழ்த்தி உள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிடுகின்றன. நம் அரசோ, விமானப்படையோ அதைப்பற்றி எந்ந செய்தியும் சொல்லாமல் இருக்கின்றன. கவலை என்ன வென்றால் 2500 கோடி விலையுள்ள ரபாலே விமானத்தை சுமார் 2.5 கோடி விலையுள்ள அந்த சி. 15 ஏவுகணை 350 கி.மி வரை துரத்தி, தானாக ரேடார் மூலம் குறி பார்த்து முன்னால் செல்லும் விமானத்தின் வேகத்தைக் கணக்கிட்டு அதை விட அதிக வேகத்தில் பறந்து அதன் ஹீட் சென்சார்கள் மூலம் எதிரியின் விமானத்தை 2 வித குண்டுகள் மூலம் அழித்துவிடும் திறன் கொண்டது. அதன் மூலம் தான் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்தி தருகின்றன. இதில் முக்கிய பிரச்னை என்ன என்றால் நம் அரசு எதிர் நடவடிக்கை எடுத்துள்ளதா? சாப்ட்வேர் திறமை மிக்க நம் நாட்டில் இது போன்ற தானாக செயல்படும் விமான ஏதிர்ப்பு ஏவுகணை தயாரிப்பது கஷ்டமா?? அதிக விலை கொடுத்து சண்டை விமானங்களை வாங்குவதை காட்டிலும் தானாக செயல்படும் திறமையும், பறக்கும் திறன் கொண்ட இந்த மாதிரி விமான எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரித்தால் அதிக நன்மையும் ஜெயிக்கும் திறனும் அதிகரிக்கும். அரசே யோசிக்குமா அல்லது விலை அதிகமுள்ள விமானங்களை காவு கொடுக்குமா???


சமீபத்திய செய்தி