வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஆளுக்கொரு சட்டம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது வெறும் எழுத்தில் தான்.
13 ம் தேதி ரிடையர்டு ஆகும் போது ராஜினாமா செய்வார். கடிதம் நான்கு நாட்களுக்குப் பிறகு தலைமை நீதிபதிக்குப் போகும். அத்துடன் ஊற்றி மூடப்படும்?
கொலிஜியத்தை முதலில் ஒழிக்கவேண்டும். தேர்வு வைத்து நீதிபதிகளை நியமிக்கவேண்டும்.
சாதாரண குடிமகனுக்கு நடக்கும் விதியையே இவனுக்கும் பின்பற்றி இவனை கடுங்காவலில் வைக்க வேண்டும் இவன் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்து இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் இது ஒரு பாடமாக மற்ற எல்லா நீதிபதிகளுக்கும் பொருந்தும்
அமலில் உள்ள சட்ட நடைமுறைகளின்படி இவர் மீது எப்படி நடவடிக்கை பாயுமாம். போலீஸ் FIR போட முடியாது. வரும் பதிமூன்றாம் தேதி பணி ஓய்வு பெற்று வழியனுப்பு விழா நடத்தி அனைவர் பாராட்டு புகழுரைகளையும் அதோடு பணிக்கொடை பலன்களையும் முழுமையாக அன்றைக்கே பட்டுவாடா செய்வதுதான் நடைமுறையில் உள்ளது. ஊருக்கெல்லாம் உள்ள இன்னொரு சட்ட திட்டங்கள் வர்மாவுக்குப் பொருந்தாது புரிஞ்சுக்கோங்க.
இவர் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் அரசு வக்கீல். இந்தப் பணம் கட்சிப் பணமா இருக்குமா?
"அரசு அன்று கொல்லும். தெய்வம் நின்று கொல்லும்" என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. இந்த நீதிபதிக்கு என்னதான் அரவணைப்பு இருந்தாலும் இவர் ஊரில் இல்லாதபோது ஏற்பட்ட தீவிபத்தின்காரணமாக இவரது நடவடிக்கைகளை தெய்வம் வெளிகொணர்ந்து விட்டது. இனி தண்டனை மட்டுமே பாக்கி
உறுதி செய்து என்ன பலன்? "பணம் முழுவதும் எரிந்துவிட்டதால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" இப்படித்தான் தீர்ப்பு வரும்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்த்தாரு, ஆனா உண்மை வெளி வந்து விட்டது. நீதி துறை மீது சாமானியர்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.
குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தங்கர் குறிப்பிட்டது போல ஏன் இதுவரை போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை. வருமான வரித்துறை, அமலாக்க துறை விசாரணை மேற்கொள்ளவில்லை. ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தால் அதை விசாரிக்கும் நீதிமன்றம் கூட விசாரணையை போலீஸை கொண்டு நடத்துகிறது. இதிலும் அத்தகைய பாரபட்சம் அற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்போம்.
கடந்த பத்து ஆண்டுகளில் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்புகளின் இலட்சணம் தெரிந்து விட்டது. அதிக தகுதியுடையவர்களை மட்டுமே நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் கொலிஜியம் இந்த தவறுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். நேர்மையான நியாயமான நீதிபதிகள் தேர்வுமுறை மட்டுமே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். கட்டப்பஞ்சாயத்து முறையில் இருந்து இந்தியா வெளியே வர வேண்டும்.
கொலிஜியம் முறை அகற்றப்பட்டு தகுந்த மாற்று முறையில் நீதிபதி தேர்வு நடத்த வேண்டும். ஊழல் செய்த இந்த நீதிபதி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.