உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம்; பிரதமர் மோடி புகழாரம்

அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம்; பிரதமர் மோடி புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கலாம் கண்ட கனவை, வலிமையான இந்தியாவை கட்டி எழுப்புவோம் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்த நாளை பல்வேறு தரப்பினரும் நினைவு கூர்ந்து நாட்டுக்கு கலாம் ஆற்றிய பங்களிப்பை போற்றி வருகின்றனர்.அந்த வகையில், பிரதமர் மோடியும் கலாம் பிறந்த நாளில் அவரின் வலிமையான இந்தியா என்ற கனவை கட்டி எழுப்புவோம் என்று கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு; டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். இளைய தலைமுறையினரின் மனங்களைத் தூண்டி, பெரிய கனவு காணவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை தூண்டியவராக அவர் நினைவு கூரப்படுகிறார்.வெற்றிக்கு பணிவும், கடின உழைப்புமே மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட கனவான வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் மனிதநேயமிக்க இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்.இவ்வாறு பிரதமர் மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Indian
அக் 15, 2025 14:54

வடை , பருப்பு வடை ...


Venugopal, S
அக் 15, 2025 19:37

கலாம் என்றால் கலகம் என்று கேவலமான செயலை செய்த கட்சி எது என்று முட்டு திலகம் யாரையும் காணோம்...அவ்ளோ விசுவாசம்...


Ramesh Sargam
அக் 15, 2025 11:25

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. தமிழகத்தில் பிறந்து மடிந்த ஒரு உத்தம புருஷன் அந்த அப்துல் கலாம் அவர்கள். உத்தம புருஷன் கலாம் பிறந்தநாளை கொண்டாட மறந்துபோகும். திமுக, தமிழக மக்களுக்கு உண்டான சாபம்.


M Ramachandran
அக் 15, 2025 10:59

இதற்கு தீ மு கா எதிர்ப்பு தெரிவிக்கும். காரநம் விடியலின் அப்பா டாக்டர் அப்துல் கலாம் ஐயாவை இத்தாலி சோனியா இந்தியா அதுவும் தமிழக முஸ்லிமை பிடிக்க வில்லை. பதவியில் ஒட்டி கொண்டு இருக்கவும் தன் நலனுக்கு நிறைய மந்திரி பதவிகள் பெற்றிடவும் தன மகனுக்கு குடும்ப நலனுக்கு மந்திரி பதவி கிடைக்கவும் சோனியா தேவை பட்டார். அவர் விருப்பம் தீ முகா விருப்பமாகி விட்டது.அப்பொ முஸ்லிம்களுக்காக அழுவது நீலி கண்ணீர். தன் கூடும்ப சுய நல திற்கு எதுவும் செய்ய கூடிய கும்பல் குடும்ப ஆட்சி தீ மு க தீ மு க. பொய் பித்தலாட்டம் திருட்டு கொள்ளை


ஈசன்
அக் 15, 2025 10:51

அடடா, மோடிஜி, கலாம் அய்யா என்ன ஒரு காம்பினேஷன். தற்போது கலாம் அய்யா இருந்திருந்தால், மோடிஜி அவரை தான் மீண்டும் ஜனாதிபதி ஆக்கியிருப்பார்.


N S
அக் 15, 2025 10:17

இளைய தலைமுறையினரின் மனங்களைத் தூண்டி, பெரிய கனவு காணவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை தூண்டிய அவர் நினைவு இங்கு தலைமுறை தலைமுறையாக பதவி சுகம் காணும் தமிழின காவலர்களால் மதிக்கப்படவில்லையே


R Dhasarathan
அக் 15, 2025 10:08

வளர்ந்த பாரதம் மனவளர்ச்சி அடைந்த பாரதம், இது தான் அவரின் கனவு


முக்கிய வீடியோ