உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வங்கதேசத்தில் கிறிஸ்துவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர்: போப் பகிரங்க குற்றச்சாட்டு

 வங்கதேசத்தில் கிறிஸ்துவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர்: போப் பகிரங்க குற்றச்சாட்டு

வாடிகன் சிட்டி: வங்கதேசம் உட்பட பல நாடுகளில் கிறிஸ்துவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, போப் லியோ கவலை தெ ரிவித்துள்ளார் . கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் 16ம் லியோ, சமூக வலைதளத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: உலகின் பல்வேறு பகுதிகளில், கிறிஸ்துவர்கள், பாகுபாட்டையும், துன்புறுத்தலையும் அனுபவிக்கின்றனர். குறிப்பாக வங்கதேசம், நைஜீரியா, மொசாம்பிக், சூடான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அனைத்து வன்முறைகளும் முடிவுக்கு வரவும், பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படவும் நாம் பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு கூறியுள்ளார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சிறுபான்மையினரை பாதுகாக்க முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தோல்வியடைந்திருப்பதை போப் லியோவின் சமூக வலைதள பதிவு எடுத்துக்காட்டுகிறது. கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கு, ஹிந்துக்கள், பவுத்தர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மேலும், வழிபாட்டு தலங்களும் முஸ்லிம் குழுக்களால் குறி வைத்து தாக்கப்படுவது சகஜமாகியுள்ளது. கடந்தாண்டு, ஆகஸ்ட் 5 முதல் 2025 ஜ னவரி 8ம் தேதி வரையிலான காலகட்டத்தில், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான 134 வன்முறை சம்பங்கள் நடந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rathna
நவ 18, 2025 12:30

பாவ மன்னிப்பில் இந்தியாவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் 2 கோடி பேருக்கும் அதிகம். இதிலே கோவா முதலிடம் வகிக்கிறது. கொலைகாரன் அவ்வளவு பேரையும் புனிதர் பட்டம் கொடுத்து மேல் தூக்கி வைத்து விட்டான். இவர்கள் அமைதி வழி மர்ம சமூகத்துடன் ஹிந்துக்களை வேரெடுப்பதில், எதிர்ப்பதில் மற்ற நாடுகளில் கூட்டு. இப்போது தான் உணர்வு வந்து இருக்கிறது. ஹிந்துக்களை பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் கொலை செய்தால் அனைத்து ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் எல்லாவற்றையும் மூடி கொண்டு இருக்கும். இப்போது தனது சமூகத்தினரை கொல்வதால் கூச்சல் போடுகிறார்கள்.


MUTHU
நவ 18, 2025 12:51

முதலில் எதிர்ப்பு சொல்ல தெரியாத எந்த படைப்பும் பூமியில் வாழத்தகுதியற்றது. சிறு எறும்பு கூட மாபெரும் விலங்கு தன்னை கொன்றுவிடும் என்று தெரிந்தாலும் கட்டாயம் கடிக்கும். மனிதனுக்கும் இது பொருந்தும். இந்துக்கள் முதலில் அழக்கூட தெரியாது. ஒப்பாரி வேண்டுமானால் வைப்பர். எதையும் அமைதி என்று பொறுத்துக்கொண்டு சென்று விடுவர். எதிர்ப்புகளை ஒன்றிணைக்க தெரியாது. கிறிஸ்தவர் அப்படியல்ல.


Muralidharan raghavan
நவ 18, 2025 12:53

கரெக்ட்


கண்ணன்
நவ 18, 2025 12:15

வங்க தேசத்தில் பெரும்பான்மையற்ற மதம் சார்ந்தவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள் என்று இவர் சொன்னால் உண்மையிலேயே இவர் ஒரு மத தலைவர் எனக் கொள்ளலாம் ஆனால் இப்படிப் பேசுவது இவரை மதவாதி என்று முத்திரை குத்த ஏதுவாகும்


Rathna
நவ 18, 2025 12:41

ஹிந்துக்கள் படும் கஷ்டத்தை பற்றி வாடிகன் கருத்து சொல்வதில்லை. இந்திரா காந்திக்கு பிறகு இந்திய அரசே வாடிகன் கைக்கு போய் விட்டது. நாட்டின் வடகிழக்கு பகுதியில் 80% பேர் அவர்களால் போலி வாக்குறுதிகள் அளித்து - நோயை குணப்படுத்துகிறோம், வெளி நாட்டு வேலை, பண உதவி, வீடு கட்டி தருகிறோம் என்று பொய் சொல்லி மதம் மாற்றம் செய்யப்பட்டனர். அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் குடியேற்றப்பட்டனர். உலகம் முழுவதும் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அவர்களால் கொல்ல பட்டவர்கள் 15 கோடி பேருக்கு மேல் இருக்கலாம்.


duruvasar
நவ 18, 2025 12:05

ஐரோப்பாவில் மதமாற்றத்திற்கு ஒத்ததுகொள்ளாத மற்ற மதத்தினர் எதனை லட்சம் பேர் கிருத்துவர்களால் கொல்லப்பட்டார்கள் என்ற வரலாறு போப் ஐயாவுக்கு தெரியுமா.


veeramani
நவ 18, 2025 10:23

முதலில் பங்களாதேஷ் பகிர்ஸ்தான் நாடுகளில் இந்துக்கள் கொடுமை படுத்தப்படுகிறார்கள் இந்து பெண்கள் கட்டாய மத மாற்றம் செய்து கற்பழிக்கப் படுகிறார்கள் . அதனை கேட்டு சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்


Muralidharan raghavan
நவ 18, 2025 12:57

அவர் இந்துமதத்தின் தலைவராக இருந்தால், பொதுவாக சிறுபான்மையினரை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்திருப்பார். ஆனால் அவர் கிறிஸ்தவ தலைவர் ஆயிற்றே. இந்தியாவில் ஹிந்துக்கள் பெருமான்மையாக உள்ளவரை நாடு அமைதியாகவும் மதச்சார்பற்ற நாடாகவும் இருக்கும். என்று சிறுபான்மை மதங்கள் பெரும்பான்மை ஆகிறதோ பிறகு இந்த நாட்டில் அமைதி இருக்காது


ஜிது
நவ 18, 2025 09:54

மம்தா அடுத்த தேர்தலில் உங்களை பிரச்சாரம் செய்ய அழைப்பார்.


Krishna
நவ 18, 2025 08:34

He Must also Raise Pros Against All WorldWide Atrocities-Genocides Against NativePagans incl Hindus by AntiHumanity WhiteWestEuropean Expansionists, Islamic Fundamentalists & CommunistDictatorships


Muralidharan raghavan
நவ 18, 2025 12:58

correct


c.mohanraj raj
நவ 18, 2025 07:33

ஆனால் இவன் இந்துக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதை சொல்வதில்லை


SUBBU,MADURAI
நவ 18, 2025 08:24

அவர்களுக்கு அதாவது கிறிஸ்தவர்களுக்கு வந்தா ரத்தம் நமது இந்துக்களுக்கு வந்தா தக்காளி சட்னி...


Anand
நவ 18, 2025 11:45

அதாவது, இவர் மனித நேயத்தை கடைப்பிடிப்பவர் அல்ல, மதவெறியை கடைபிடிப்பவர்.


Modisha
நவ 18, 2025 07:32

மற்ற எந்த மதத்து மனிதர்களோடு ஒத்துப்போகாத ‘மனித நேய‘ அன்பு மதம் இது. மனிதகுல விரோதி.


பிரேம்ஜி
நவ 18, 2025 07:24

இந்துக்களும் துன்புறுத்தப்படுகிறார்கள்! அதையும் சேர்த்து சொல்லுங்கள் அய்யா!


Ramesh Sargam
நவ 18, 2025 07:21

போனவாரம்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆப்பிரிக்கா வின் ஒரு நகரத்தில் கிறிஸ்துவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இப்பொழுது கிறிஸ்துவ மத குரு வங்கதேசத்தின் மீது அதே குற்றம் சுமத்துகிறார். இந்தியாவில் மட்டும்தான் எல்லா மதத்தினரும் சரிசமமாக மதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி, மற்றமதத்தினர் இங்குள்ள ஹிந்துக்களுக்கு அதிக பிரச்சினைகள் கொடுக்கின்றனர். குண்டுவைத்து அப்பாவி மக்களை கொள்கின்றனர். கள்ளவோட்டு போட்டு நேர்மையில்லாத அரசியல் கட்சியினருக்கு உதவி புரிகின்றனர்.


சமீபத்திய செய்தி