உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வழக்கு; பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கு; பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை

பெங்களூரூ: பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்தாண்டு ஏப்ரலில் பெண்களை ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 34, பலாத்காரம் செய்யும் வீடியோ, புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் பரவின. இதைத் தொடர்ந்து, ரேவண்ணா வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த மைசூரு கே.ஆர்., நகரை சேர்ந்த, 47 வயது பெண், ஹொளேநரசிபுரா ரூரல் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fcyrb7or&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து பிரஜ்வல் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டது. மே 31ம் தேதி பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரஜ்வலை, எஸ்.ஐ.டி., குழுவினர் கைது செய்தனர். அவரிடமும் விசாரணை நடத்தினர்.அதன் பின், 123 ஆதாரங்களை திரட்டி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், 2024 இறுதியில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் 1,652 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜானன் அறிவித்தார். தீர்ப்பை கேட்டதும் கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. மேலும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Raghavan
ஆக 02, 2025 21:31

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து ஜாமீன் பெற்று வாய்தாவுக்குமேல் வாய்தா வாங்கி வழக்கை ஒரு 10 அல்லது 15 வருடங்கள் நீடித்து பிறகு கபில் சிபல் போன்றவர்களை வைத்து நீதிபதிகளையும் விலைக்கு வாங்கி அரசாங்க தரப்பில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று சொல்லுவார்கள். இதில் முட்டாள்கள் ஆக்கப்படுவது பாவம் அப்பாவி ஜனங்கள் தான்.


Ramesh Sargam
ஆக 02, 2025 19:42

Now he will approach the Supreme Court. There the judgement will be opposite. One law book. One Constitution. But different way of understanding. Finally the culprit would be set free.


முதல் தமிழன்
ஆக 02, 2025 18:32

2G ஊழல் என்பது அப்பட்டமான ஊகம். அப்படி நடந்திருந்தால் நஷ்டம் அரசுக்கு இவ்வளவு கோடிகள் என்று. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொள்ளை அடித்ததுக்கு ஆதாரம் இல்லை. ஆகையால் நிரபராதிகள். உங்களிடம் ஆதாரம் இருந்தால் கொடுக்கவும். தி மு க வை தோற்கடிக்க பின்னப்பட்ட சதி வலையே தவிர வேறொன்றும் இல்லை.


ஆரூர் ரங்
ஆக 02, 2025 18:49

ராஜா விற்ற எல்லா 2 ஜி லைசென்ஸ்களும் முறைகேடாக வழங்கப்பட்டன எனக் கூறி அனைத்தையும் சுப்ரீம் கோர்ட் கேன்சல் செய்துவிட்டது. ஊழலுக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?


திகழ்ஓவியன்
ஆக 02, 2025 19:19

அப்போ CAG சொன்ன 76500000000 கோடி ஊழல் என்ன ஆயிற்று , APEX கோர்ட் 2 G வழக்கில் வினோத் ராய் வைத்து மோடி அரசு கொடுத்த தவறான தகவல்கள் வைத்து ரத்து செய்தது , இதை பின்னாளில் வினோத் ராய் மன்னிப்பு கேட்டாரே , தவறான தகவல் கொடுத்த ஒன்றிய அரசு மீது CONTEMPT வழக்கு பதிவு சீயானும்


Rajan A
ஆக 02, 2025 19:21

காமெடி. என்ன செய்தி என்ன எழுதுகிறோம்னு தெரியாம 200 ரூபாய்க்கு ஊளையிடும் உபிஸ்


Chandradas Appavoo
ஆக 02, 2025 18:08

குஜராத் கலவரத்திற்கு காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை.


ஆரூர் ரங்
ஆக 02, 2025 18:50

கலவரத்திற்கு மூல காரணம் கோத்ரா ரயில் எரிப்புதான். ரயிலை எரித்து கலவரத்துக்கு வித்திட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு ஜெயிலில் உள்ளனர்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 02, 2025 19:56

குஜராத் கலவரம் ஏற்படுத்தியவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா..... அவர்கள் காரணம் என்று கூறும் நீங்கள் அருகில் இருந்து பார்த்தீரா ??? நான் சொல்லுகிறேன் குஜராத் கலவரத்திற்கும், மாலேகான் குண்டு வெடிப்புக்கும் காரணம் திரு.அப்துல் கலாம் என்று.....ஏற்றக்கொள்வீர்களா ??? எதிர் கட்சிகள் அனைவரும் ஒற்றை மனிதன் நேர்மையான அரசியல்வாதி, முக்கியமாக தேசப்பற்றுள்ள ஒருவரை நாக்கிலும் , எண்ணத்திலும் கொஞ்சம் கூட ஈரமே இல்லாமல் எதிர்பதென்பது எவ்வளவு மோசமான செயல்.....!!!


Gnana Subramani
ஆக 02, 2025 18:07

பிரசன்னாவிற்காக ஜி தேர்தல் பிரசாரம் செய்தார்


Srprd
ஆக 02, 2025 17:19

This guy should not be granted bail under any circumstances. He has done a very abnormal crime which shocks humanity. But if someone who wilfully caused a loss of Rs.176000 crore walked out of jail, contested elections and even became an M.P. , nothing is impossible in our legal system.


Tamilan
ஆக 02, 2025 17:11

தர்மசாலாவில் 300 பேர் தன் பிள்ளைகள் உறவினர்களை காணோம் என்று புகார் அளித்துள்ளனர் . கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 1000 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் . இங்கு இந்துமதம் தோன்றியதிலிருந்து கோவில் வந்ததிலிருந்து ஒரு லச்சம் பேர் பாலியல் பலாத்காரம், வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம். இந்து மதவாத அரசுகளோ பாராமுகமாக எதையும் கண்டுகொள்ளவே இல்லை. ஆயிரம் ஆண்டுகள் களைத்து தொடர்ந்த வழக்குகளையும் குழி கோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் . இதையெல்லாம் உலகம் மன்னிக்காது


ஆரூர் ரங்
ஆக 02, 2025 17:27

அப்போ இடையில் அதிகபட்சமாக இருந்த மதசார்பற்ற காங்கிரஸ் கூட்டணி அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனவா?. ஏக்கர் கணக்கில் பொய். இன்னும் 100 நூபுர் சர்மா வந்தாலும் திருந்தமாட்டீர்களா ?


SENTHIL NATHAN
ஆக 02, 2025 20:15

சுலுதானுகளும் மகளாயர்கலும் வெறியாட்டம் ஆடி அகண்ட பாரதத்தை மூன்றாக பிரித்து விட்டணர்.


நிக்கோல்தாம்சன்
ஆக 02, 2025 21:46

இப்படி செய்வதெல்லாம் ஒரு மதத்தின் வேலைதான் அது ஒரு வெளிநாட்டு மதம் அய்யா , காஸ்மீரில் , பங்களாதேஷில் நடந்து கொண்டிருப்பவையை நீங்க கண்டித்திருந்தா உங்களின் கருத்தில் ஒரு நியாயம் இருந்திருக்கும் , இப்போ உங்களின் வன்மையை மட்டும் வெளிப்படுத்தியுள்ளேர்கள்


ஆரூர் ரங்
ஆக 02, 2025 17:07

பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து கொண்டு ஷாப்பிங் போகலாம்.


Tamilan
ஆக 02, 2025 17:03

பாஜவின் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே அதிக பட்ச தண்டனை கிடைக்கின்றன . பூஷன், உபி பாஜ பாலியல் குற்றவாளி போன்ற பற்பல பாஜாகாரர்களுக்கும், மலேகான் குண்டு வெடிப்பு போன்ற இந்துமதவாத பயங்கரவாதிகளுக்கும், குஜராத் கலவர இந்துமதவாத கற்பழிப்பு , கொலை உள்பட யாருக்கும் எந்த தணடனையும் கிடைப்பதில்லை . அனைவரும் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டுவிட்டதனார். அப்படிப்பட்ட அரக்கன் ராட்சசன் சர்வாதிகாரி மோடி , பாஜ அரசு


ஆரூர் ரங்
ஆக 02, 2025 17:30

திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் ஊழல் வழக்கில் தண்டனை அறிவிக்கப்படும் முன்பே இறந்து விட்டார். பொன்முடியும் மனைவியும் கோர்ட் தயவி‌ல் தண்டனை நிறுத்தப்பட்டு போலீஸ் அப்பீல் செய்யாததால் வெளியில் உள்ளார்கள். இன்னும் நிறைய உண்டு.


Tamilan
ஆக 02, 2025 16:56

எதிர்கட்சிகளுடன் பாஜவும் சேர்ந்து தன் தோழமை கட்சிகளை முதுகில் குத்துவதுதான் அனைத்துக்கும் காரணம்.


முக்கிய வீடியோ