உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் மீது பிரணாப் முகர்ஜி மகள் சரமாரி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் மீது பிரணாப் முகர்ஜி மகள் சரமாரி குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஜனாதிபதியுமான என் தந்தை இறந்தபோது, காங்கிரஸ் செயற்குழு இரங்கல் தீர்மானம் கூட நிறைவேற்ற வில்லை,'' என்று பிரணாப் முகர்ஜி மகள் சர்மிஸ்தா குற்றம் சாட்டியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kmjsyb82&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்திரா அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்தவர். மன்மோகன் சிங் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.அவர் இறந்தபோது காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதம் பற்றி அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி தற்போது புகார் கிளப்பியுள்ளார். அவர் கூறியதாவது: என் தந்தை இறந்தபோது, இரங்கல் தெரிவிப்பதற்கு கூட காங்கிரஸ் செயற்குழு கூடவில்லை. அதைப்பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்படவும் இல்லை. இது பற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு அவ்வாறு இரங்கல் தெரிவிப்பது வழக்கம் இல்லை என்றார். அது சுத்த உளறல். என் தந்தையின் டைரியில் முந்தைய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதில் முன்னாள் ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இறந்தபோது, காங்கிரஸ் குழு கூடி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்த இரங்கல் தீர்மானத்தை என் தந்தை தான் தயார் செய்துள்ளார் என்பது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது.இவ்வாறு சர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி இத்தகைய அங்கீகாரங்களை வழங்குவதாகவும், மற்றவர்களுக்கு மறுப்பதாகவும் சர்மிஸ்தா குற்றம் சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

raju
டிச 30, 2024 11:52

உங்கள் தந்தை தாணு இறுதி காலங்களில் காங்கிரஸ் கொள்கைக்கு முரணான செயலில் ஈடு பட்டர்.. பிறகு ஏன் இதை எதிர்பார்க்கிறீர்கள்


N.Purushothaman
டிச 29, 2024 07:52

தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த திறமையில்லாத இரண்டு பேத்தை ஆட்சியில திணிப்பதை போல காங்கிரஸ் கட்சியிலும் அது நடக்கிறது ....என்ன ஒரு விதியாசம்ன்னா ஆண்டவன் கருணையால் பா ஜ கட்சியால் அந்த திணிப்பு இது நாள் வரை எடுபடாமல் போய்விட்டது


Dharmavaan
டிச 29, 2024 07:23

பிரணாப் முகர்ஜி திறமையானவர் .. சோனியாவுக்கு தலையாட்டி இல்லை எனவே பிரதமர் பதவி மறுப்பு


J.V. Iyer
டிச 29, 2024 05:15

எல்லோரும் தலையாட்டி பொம்மைகளா என்ன? மண்டுவினால் நேர்மைகெட்ட குடும்பத்திற்கு எவ்வளவு நன்மை? ஜார்ஜ் சோரோஸ் அடிமைகளான இத்தாலி ராணி, மதிகெட்ட பாப்பு சொன்ன இடத்தில் கையெழுத்து போட்ட உத்தமர் அல்லவா இந்த மண்டு? உங்கள் அப்பா இப்படியா அம்மா??


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 28, 2024 23:28

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக இருந்த போது உரிய மரியாதை கொடுத்தவர் மோடி தான். ஜனாதிபதியை முறைப்படி உரிய மரியாதையுடன் சந்தித்து விளக்கங்கள் கொடுத்து பல மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் சம்மதம் பெற்று சட்டமாக்கினார்.


Kasimani Baskaran
டிச 28, 2024 22:42

வெள்ளைக்காரர்கள் ஆரம்பித்த காங்கிரசில் ஏதாவது ஒரு வழியில் வெள்ளைக்காரர்கள் தான் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பது கசப்பான உண்மை.


Rpalni
டிச 29, 2024 02:18

டேபிள் கிளீனர் ஆக வாழ்க்கையை ஆரம்பித்து ஓர் நாட்டை கபளீகரம் செய்த மங்கையை வாழ்த்தி வணங்குகிறது இன்றைய காங்கிரெஸ்


Dharmavaan
டிச 29, 2024 07:26

...அன்டோனியா இருந்ததை பிஜேபி அடிக்கடி சொல்லி காட்ட வேண்டும் எல்லா இடங்களிலும்


கிஜன்
டிச 28, 2024 22:38

திதியை எதிர்க்க .... சுவேந்துவை விட பிரணாப் மகள் சரியான தேர்வு ....


Barakat Ali
டிச 28, 2024 22:32

உங்கள் தந்தை தனது செகரட்டரியுடன் ஊழல் செய்துள்ளார் .... தேசவிரோத காங்கிரசில் இருந்த உங்கள் தந்தைக்கு இந்த அவமானமெல்லாம் மிகவும் குறைவு .... கிளம்புங்க ..... காத்து வரட்டும் ........


Constitutional Goons
டிச 28, 2024 22:06

அனைவரையும் விலைக்கு வாங்கிவிட்ட பாஜவா ? மம்தாவை ஆதரிக்கிறாரா?


B MAADHAVAN
டிச 28, 2024 21:29

ஃபெரோஸ் காந்தி குடும்பத்தினர் தலைமையில் இயக்கப்படும் காங்கிரசுக்கு, அந்தக் குடும்பத்தினரைப் பார்த்து தலையாட்டுவது தான் பிடிக்கும். வாலாட்டுவது பிடிக்காது. நடுநிலையோடு, ஶ்ரீ பிரணாப் ஜி, ஶ்ரீ நரசிம்ம ராவ் ஜி போன்றோர் செயல்பட்டால் எப்படி பிடிக்கும். சரியாக தலையாட்ட தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.. ஶ்ரீ மன்மோகன் போல் வாயை மூடிக் கொண்டு உம்மென்றாவது இருந்திருக்க தெரிந்திருக்க வேண்டும் .


M S RAGHUNATHAN
டிச 28, 2024 22:41

ஃபெரோஸ் கான் என்று இருந்திருக்க வேண்டும்


சமீபத்திய செய்தி