உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்

பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்

புதுடில்லி: பிரதமர் மோடி வரும் பிப்., 12 மற்றும் 13ம் தேதி அமெரிக்கா சென்று அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப் அதன்பின் பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அமெரிக்கா வருவதற்கும் அழைப்பு விடுத்தார். இதற்கான பணிகளில் வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டது.பிரதமர் மோடி பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்ஸ் செல்கிறார். அங்கு பாரிசில் நடக்க உள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். அந்த பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்று திரும்ப திட்டமிடப்பட்டது.இந்த தேதிகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர். அதன் படி பிப்., 12ல் பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். பிப்., 13ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளார்.இந்த சந்திப்பின் போது, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் விவகாரம், ராணுவத்துக்கான ஆயுதங்கள் கொள்முதல், வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ellar
பிப் 10, 2025 23:24

உள்ளூரில் அடங்கி இருந்திருந்தால் அல்லது சட்டப்படி அங்கே போயிருந்தால்.... அதை விட்டுட்டு கௌரவம் எங்கிருந்து?


vbs manian
பிப் 08, 2025 18:16

எந்த முகத்தோடு பார்க்கமுடியும்.


Senthoora
பிப் 08, 2025 13:01

கொலம்பியா மட்டுமல்ல, அங்கோலா என்ற ஏழை நாடும் தனது சொந்த நாட்டு விமானத்தை அனுப்பி தனது மக்களை மீட்டது.


Senthoora
பிப் 08, 2025 12:53

ஒரு தொகுதி விசா இல்லாதவர்களை அனுப்பியாச்சு. இன்னும் 408 பேரை அனுப்பப்போறாங்க. ஈரான் துறைமுகத்தை இந்தியா எடுத்த குத்தகையை டிரம்ப் ரத்து செய்து ஆப்புவைத்துவிட்டார். இனி அமெரிக்காபோய் கேவலப்படணுமா? போகமுன் இந்திய விமானங்களை அனுப்பி இந்திய மக்களை மரியாதையுடன் அழைத்துக்கொள்ளவது கவுரவம்.


venugopal s
பிப் 08, 2025 10:51

அமெரிக்க விசா இருக்கிறதா என்று பார்த்து செல்லுங்கள்!


பாமரன்
பிப் 08, 2025 09:32

நியூஸின் அந்த கடைசி பாரா செம்ம காமெடி... நம்மாளு யார்கிட்டேயாவது எதாவது டிஸ்கிஸ் அல்லது கலந்துரையாடல் செஞ்சதா சரித்திரம் இருக்கா...??? இந்த தபா விஷ்வ குரு வாய்கன்னு கோஷம் போட்டு கொடியாட்டும் கூட்டமும் கையில் காலில் விலங்கோட நம்மூர் நாமக்கல் கோழி கொண்டாரும் மினி லாரி மாதிரி ஒரு ஃப்ளைட்ல லோட் ஆக ரெடியாகிட்டு இருப்பாய்ங்க... கஷ்டம் தான்... பார்ப்போம்...


Bahurudeen Ali Ahamed
பிப் 08, 2025 11:01

கொலம்பியா அரசு தன் குடிமக்கள் அமெரிக்க அரசால் விலங்கிடப்பட்ட நிலையில் ராணுவ விமானத்தின் வாயிலாக கொலம்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டதை அவமானமாக கருதி அந்த அமெரிக்க ராணுவ விமானத்தை தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டது, பிறகு தன் நாட்டு சொந்த விமானத்தை அனுப்பி தன் குடிமக்களை அழைத்துக்கொண்டது , ஆனா இந்திய அரசாங்கத்திற்கு சொந்த விமானம் இல்லாத காரணத்தினால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை