உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பாணியில் பிரியங்கா; அரசியல் சாசன புத்தகத்துடன் எம்.பி.,யாக பதவியேற்பு!

ராகுல் பாணியில் பிரியங்கா; அரசியல் சாசன புத்தகத்துடன் எம்.பி.,யாக பதவியேற்பு!

புதுடில்லி: அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி, வயநாடு எம்.பி.,யாக இன்று (நவ.,28) பிரியங்கா பதவியேற்று கொண்டார். அவருக்கு அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலியை தேர்வு செய்ததன் மூலம், வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக, பிரியங்கா போட்டியிட்டு 6,22,338 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவர், 4,10,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சாதனை படைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=74xey4so&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (நவ.,28) பார்லிக்கு கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்து, அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி, வயநாடு எம்.பி.,யாக பிரியங்கா பதவியேற்றார். பார்லிமென்ட் விவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் அரசியலமைப்பு சாசன புத்தகத்தை கையில் ஏந்தி கொண்டு பேசுவதை, காங்., எம்.பி., ராகுல் வழக்கமாக கொண்டுள்ளார். அதே பாணியில், அரசியல் சாசன புத்தகத்துடன் எம்.பியாக பிரியங்கா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா பெண்களைப்போல் பிரியங்கா சேலை!

வயநாடு தொகுதியில் இருந்து பார்லிக்கு தேர்வு செய்யப்பட்ட பிரியங்கா, கேரள மாநில பெண்களை போன்று பாரம்பரிய சேலை அணிந்து பார்லிக்கு வந்தார். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள எம்.பி.,க்கள் பலரும் ஆர்வம் காட்டினர். அவர்களுடன் போஸ் கொடுத்த பிரியங்காவை காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல் போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

பேசும் தமிழன்
நவ 29, 2024 09:01

புத்தகத்தை கையில் வைத்து இருந்தால் மட்டும் போதாது.. உங்கள் பாட்டி இந்திரா அவர்கள் அந்த அரசியல் சட்டதை எப்படியெல்லாம் காலில் போட்டு மிதித்து எமர்ஜென்சி கொண்டு வந்தார்... எதிர்கட்சி ஆட்களை எப்படியெல்லாம் சிறையில் அடைத்து கொடுமை படுத்தினார் என்ற உண்மையையும் .. தமிழகத்தில் உங்களது தற்போதைய கூட்டாளி கட்சி திமுகவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதே போல மோடி அவர்களின் ஆட்சியில் ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. அதனால் தான் பிரதமர் தமிழகம் வரும் போது கருப்பு கொடி காட்ட முடிகிறது ....நீங்கள் எல்லாம் சிறையில் இல்லாமல் வெளியே இருக்கிறீர்கள் .


kulandai kannan
நவ 28, 2024 19:16

சற்றும் வெட்கமே இல்லாத அடிமை கட்சிகளின் கூட்டணி தான் இண்டி கூட்டணி.


என்றும் இந்தியன்
நவ 28, 2024 17:18

ராகுல் பணியில் பிரியங்கா. மிக்க நல்லது. ராகுலினால் தான் பிஜேபி இவ்வளவு வலுவான நிலையில் உள்ளது. பிரியங்கா சேர்ந்த பின் Double Strong ஆகிவிடும் பி ஜே பி


என்றும் இந்தியன்
நவ 28, 2024 17:11

எனது புதிய சட்டம் நான் பிரதமாராக இருந்திருந்தால் "நாடாளுமன்றம் பாராளுமன்றம் .......இதில் தேர்வு செய்யப்பட்ட எம் எல் ஏ எம் பி க்கள் இந்த அவைகளிலிருந்து வெளிநடப்பு செய்தால் மற்றும் வெறுமனே ஓலம் எழுப்பினால் அவைக்குள்ளே வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் இந்திய குடியுரிமை பறிக்கப்படும்"


ram
நவ 28, 2024 16:05

வோட்டு போட்டவர்கள் எல்லாம் கருப்பு டிரஸ் போட்டவர்கள், இப்போது வெள்ளை புடவை,


M S RAGHUNATHAN
நவ 28, 2024 15:34

Please take note of the current events. The issue of Rahuls dual citizenship has now cropped up. It has been submitted to HC that Rahul has/ had indeed a British Passport declaring himself as a citizen of UK. The Allahabad HC has directed the Ministry of Home affairs to look into the contents of petition and has sought for its report . The case is likely to come up for hearing in Mid December. In case Rahul gets an unfavourable verdict, he will be disqualified. And hence the dynasty had pitchforked the other heir.


Srinivasan K
நவ 28, 2024 21:13

it does y matter he serves full term or disqualified, court will definitely save him ( all collegium judges in high/supreme court). he will get defeated once again in 2029


veeramani hariharan
நவ 28, 2024 15:32

Only God can save Congress khan party?


Rama SV
நவ 28, 2024 15:02

கேரளா பாரம்பரியம் வேறு ...பாரம்பரியம் வேறு


sankar
நவ 28, 2024 14:28

ஒரு வேற்று நோட்புக்-ஒரு வெட்டி பந்தா - ஒன்றுக்கும் உதவாத தம்பி & தருதலைகள்


Indian
நவ 28, 2024 14:47

பொது வெளியில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்து, அல்லது வழக்கு வரும் .


sankar
நவ 28, 2024 16:40

இருநூறு தம்பி நான் சொன்னதில் ஏதாவது தப்பு இருந்தால் - யாரையாவது குறிப்பிடுமானால் சொல்லு


தமிழ்வேள்
நவ 28, 2024 17:46

இந்தியன் , அது வடக்கோ அல்லது தெற்கோ , தம்பி தும்பி எல்லாம் ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை தருதலைகளே ..திருட்டு திராவிட மண்ணில் ,.தருதலைகள் , தண்ணீர் தெளித்து விரட்டப்பட்டவை மட்டுமே அரசியலுக்கு வரும் .......


SIVA
நவ 28, 2024 14:25

ராகுல் பாணியில் பிரியங்கா அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு முப்பாட்டத்து வருஷ பழசு நான் கூட புதுசு நினச்சு பயந்துட்டேன், காங்கிரஸ் இல்லாத பாரதம் இல்லை இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து காங்கிரஸ் இல்லாத உலகமே உருவாக்குவார்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை