உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புஷ்பா 2 - நெரிசல் விவகாரம் மனித உரிமை ஆணையம் அதிரடி

புஷ்பா 2 - நெரிசல் விவகாரம் மனித உரிமை ஆணையம் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2: தி ரூல் என்ற படத்தின் சிறப்புக் காட்சியின்போது, தெலுங்கானாவின் ஹைதராபாதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறப்பு காட்சிக்கு முன் அறிவிப்பின்றி வந்ததாக கூறி, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அடுத்த நாளே அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், கடந்த மாதம் புகார் செய்தனர். அதில், 'படத்தின் சிறப்புக் காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது, அவருடன் வந்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், கூட்டம் அங்கும் இங்கும் சிதறி ஓடியது. இதனால் உயிரிழப்பு, காயங்கள் ஏற்பட்டன. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:படத்தின் சிறப்புக் காட்சியின் போது, தவறான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது. மூத்த போலீஸ் அதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜன 03, 2025 05:27

நேத்தி வரைக்கும் விசாரணை செய்தவர்கள் யாரு சிரிப்பு போலீசா? ஆ. ஊ னா மனித உரிமைகள் ஆணையம்னு வந்துருவாய்ங்க. கூத்தாடியின் பின்னால்.போகாதீங்கன்னு ஒரு பய சொல்லமாட்டான்.


N.Purushothaman
ஜன 03, 2025 07:58

தமிழ்நாட்டுல கூத்தாடின்னு சொல்லிக்கிற ஒருத்தருக்கு ரசிகர் மன்ற தலைவர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ....இதுக்கு என்ன சொல்லுவீங்க ?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 03, 2025 13:02

கூத்தாடிகளை கொண்டாடும் கொத்தடிமை நிறைந்த முதல் மாநிலம் என்ற பெயர் எங்கே போய் விடுமோ என்ற பயத்தில் வருடத்திற்கு ஒரு கூத்தாடி களம் இறக்கிவிட்டு கொண்டு உள்ளார்கள்.


முக்கிய வீடியோ