உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!

இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ரபேல் விமானங்கள்; முதன் முறையாக பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா நிறுவனமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பல்வேறு தாக்குதலுக்கு இக்கட்டான நேரத்தில் கை கொடுத்தது ரபேல் போர் விமானம் என்பது நாம் எல்லாரும் அறிந்த ஒன்று.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களின் தேவை முக்கியமாக மாறிவிட்டது. சமீபத்தில் கடற்படைக்காக, ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம், இந்தியா- பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிலையில், ரபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா நிறுவனமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு ஆயுத சந்தைகளுக்காக ஹைதராபாத்தில் உற்பத்தி மையம் தொடங்கப்பட உள்ளது. 2028ம் ஆண்டு முதல் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும். போர் விமானங்களின் முன், பின் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. பல இக்கட்டான நேரத்தில், கை கொடுத்த ரபேல் போர் விமானங்களின் பாகங்கள் இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் தான் தற்போது கையெழுத்தாகி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்கு இது ஒரு பெருமையான தருணம். இது இந்தியாவின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இது இந்தியாவின் வெற்றி பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்தியாவிலேயே ரபேல் போர் விமானங்களின் பாகங்களை தயாரிப்பதால் நிறைய வேலை வாய்ப்பு உருவாகும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ரபேல் போர் விமான முக்கிய பங்கு வகித்த நிலையில் அந்த நிறுவன பங்குகளுக்கு மவுசு கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூன் 06, 2025 16:07

இது ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல, அதன் உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை.


vijayaraj
ஜூன் 06, 2025 13:53

கமிசன் யார் தம்பி தருவாங்க. அதனால் தான் கார்பொரேட் எல்லாம் தலை தெறிக்க ஓடுகிறான்.


Pons .K
ஜூன் 06, 2025 06:48

இந்தியாவில் தயாரித்தால் மிகவும் துள்ளியமாக இருக்கும். விலையும் குறையும். இந்தியன் என்பதில் பெருமை


Ethiraj
ஜூன் 06, 2025 03:29

Russian aircrafts spares and maintenance we were fired to spend huge amount It is a good idea to have rafle maintained locally is s good decission.


spr
ஜூன் 05, 2025 22:44

பாராட்டுவோம் ஆனாலும் இது போன்ற பெரிய உற்பத்திச் சாலைகள் தமிழகத்திலும் தொடங்கப்பட்டால், பல படித்த இளைஞர்களுக்கு மதிப்புடன் கூடிய வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்குமே தமிழக அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை?


Nada Rajan
ஜூன் 05, 2025 21:39

துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது ரஃபேல் என்பது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நிரூபனம்


Nada Rajan
ஜூன் 05, 2025 19:14

ஆப்பரேஷன் சிந்துவின் போது நமது உயிரை காத்து கை கொடுத்தது ரபேல் போர் விமானம் தான் எனவே ரபேலுக்கு ஒரு ஜெய்ஹிந்த்.இந்தியாவிலேயே தயாரித்தால் நமக்கு தானே பெருமை. இந்தியராய் 140 கோடி பேருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை