உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!

பீஹாரில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!

பாட்னா: பீஹாரில் அம்பேத்கர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற சென்ற, காங்கிரஸ் எம்.பி ராகுல் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து ராகுல் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2kmwlv4y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறினோம். உங்களுடைய அழுத்தத்தினால், ஜாதி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்' என்று பேசியுள்ளார்.இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அது அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல. சமூக நீதி மற்றும் கல்விக்காக நாம் குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைச் சந்திக்க பீஹார் அரசு என்னைத் தடுக்கிறது. முதல்வர் நிதீஷ் குமார் ஏன் பயப்படுகிறீர்கள்? மாநிலத்தின் கல்வியையும் சமூக நீதியையும் மறைக்கப் பார்க்கிறீர்களா? இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

hariharan
மே 15, 2025 18:04

இந்தியா ஜனநாயக நாடு, அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல என்று இவன் கூவுகிறான். இவன் பாட்டி 1976ல் கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய, மாநில பட்டியலில் 42வது சட்டத்திருத்தத்தின் மூலம் அவசரக்கால நிலையின்போது தன்னுடைய சர்வாதிகாரப்போபோக்கினால் கொண்டு வந்தார். தற்சமயம் நீட் நுழைவுத் தேர்விற்கெல்லாம் வித்திட்டது இவன் பாட்டியின் ஆணவப்போக்கினால் ஏற்பட்டது என்று இந்த பபூனுக்கு தெரியுமா?


என்றும் இந்தியன்
மே 15, 2025 17:22

இனி புதிய சட்டமொன்று கொண்டு வரவேண்டும். உயர்ந்த பதவியில் அரசியல்வாதிகள், ...........மற்றும் பணியாளர்கள் இடத்தில் சினிமாவில் நடிகர்கள்..... இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் அவர்கள் உடனே சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று