உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலுக்கு நோபல் பரிசு வேணும்! காங்கிரஸ் போடுகிறது துண்டு

ராகுலுக்கு நோபல் பரிசு வேணும்! காங்கிரஸ் போடுகிறது துண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனநாயக போராளியுமான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'காங்., - எம்.பி., ராகுலும் ஜனநாயகத்துக்காக போராடி வருகிறார். அவரும் நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர் தான்' என, காங்கிரஸ் கட்சியினர் வக்காலத்து வாங்கி உள்ளனர். உலக நாடுகளில் அதிக போர்களை நிறுத்திய சாதனைக்காக, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம்பிடித்து வந்தார். அவருக்கு பாகிஸ்தானும் ஆதரவாக துதி பாடியது. டிரம்பின் இந்த ஆசையில் மண் விழுந்தது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென் அமெரிக்க நாடான வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், சமூக ஆர்வலருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டிரம்ப் வரிசையில், தங்களது தலைவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என காங்., செய்தி தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் குரல் கொடுத்து இருக்கிறார். சமூக வலைதளத்தில், ஒருபுறம் மரியாவின் புகைப்படத்தையும், மறுபுறம் ராகுலின் புகைப்படத்தையும் பதிவிட்டு, அவர் இந்த கருத்தை முன்வைத்திருக்கிறார். இது குறித்து சுரேந்திர ராஜ்புத் கூறியதாவது: அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுலும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி அவருக்கும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 79 )

Jayaraman Ramaswamy
அக் 15, 2025 18:10

ஒண்ணுமே செய்யாத ஆளுக்கு அவார்டு கொடுக்கணும்னா , இவருக்குத்தான் முதல் parisu


S.V.Srinivasan
அக் 14, 2025 09:33

ராகுலுக்கு நோபல் பரிசு வேணும்னு காங்கிரஸ் துண்டு போடுதா இல்ல "குண்டு" போடுதா


HoneyBee
அக் 13, 2025 16:49

ஜோக்கர்களுக்கு‌ நோபல் பரிசு தருவதில்லை இது கூட தெரியாத"கான்"கிரஸ் கூட்டம்


Amsi Ramesh
அக் 13, 2025 12:30

அரசியல் கோமாளிகளுக்கெல்லாம் நோபல் பரிசு கொடுக்க மாட்டார்கள்


Madras Madra
அக் 13, 2025 12:26

கண்டிப்பாக தொடர் தோல்விக்கு ஒரு நோபல் இருந்தால் இவர் தான் அதற்கு பொருத்தமானவர்


பேசும் தமிழன்
அக் 12, 2025 16:56

என்னாது ....ராகுல் ஜனநாயகத்துக்கு போராடி வருகிறாரா .....ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி கொண்டு இருக்கிறார் .....


சந்திரசேகர்
அக் 12, 2025 16:08

அடக்கடவுளே நோபல் பரிசுக்கு வந்த சோதனையை பார்த்தியா.ஆக நோபல் பரிசுக்கும் இட ஒதுக்கீடு செய்து எங்களுக்கும் அடுத்த முறை நோபெல் பரிசை கொடுக்கும் மாறு வன்மையாக கேட்கின்றோம்


மனிதன்
அக் 12, 2025 14:27

உண்மையாகவே "மரியா கொரினா மச்சாடோ" வின் போராட்டங்களையும், அவர் சந்தித்த அவமானங்களையும் பார்த்தால் இப்போது இதையெல்லாம் சந்திக்கும் ராகுல்காந்தி நினைவுக்கு வருகிறார்... மக்களுக்காக, ஜனநாயகத்துக்காக, அமைதிக்காக, ஊழலுக்காக, வன்முறையற்ற குடிமக்களுக்காக...தேச துரோகி என்ற பெயரும் பெற்றுவிட்டார்... காலம் ஒருநாள் அவரை கொண்டாடும்...


Vasan
அக் 12, 2025 12:51

ஒவ்வொரு மாநிலத்திலும், காங்கிரசின் உள்கட்சி கோஷ்டி யுத்தத்தில், நிலைமையை சமாளித்து, காங்கிரஸ் கட்சியை சிதறாமல் கட்டுக்கோப்பாய், 34 வருடங்களாக, நடத்தி வரும் சோனியா அம்மையார் மற்றும் ராஹுல் காந்தி அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பகிர்ந்தளிக்க வேண்டும். இப்பொழுதே விண்ணப்பித்து விட்டேன்.


Ramesh Sargam
அக் 12, 2025 12:38

காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் போர், பிறகு INDI கூட்டணிக்குள் நடக்கும் போரை ராகுல் நிறுத்தட்டும். பிறகு அவருக்கு நோபல் அமைதி பரிசு கொடுப்பதைப்பற்றி யோசிக்கலாம்.


புதிய வீடியோ